• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

எஜமானி தயாவதியின் தங்க நகையை தனதாக்கி கொள்ளவேண்டும் என்ற ஆசையிலேயே வெட்டி கொலை செய்தேன் – கைது செய்யப்பட்ட வேலைக்காரி வாக்குமூலம்!

1.566 Views
4 years ago
109 1
0
Share
Facebook Twitter WhatsApp
    யே.பெனிற்லஸ் யே.பெனிற்லஸ்
    0 Subscriber

    எஜமானி அணிந்துவரும் தங்க நகையினை நீண்ட காலமாக தனதாக்கி கொள்ளவேண்டும் என்ற ஆசை காரணமாகவே எஜமானியினை கண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்தேன் என  மட்டக்களப்பு நகர் பார்வீதியில் எஜமானியை வெட்டி கொலை செய்த வேலைக்காரியான பெண்ணிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் கைது செய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் 4ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் உத்தரவிட்டுள்ளார்.

    மட்டக்களப்பு நகரில் நகைக்கடை வர்த்தகரின் மனைவியை வேலைக்காரி பணத்துக்காக படுகொலை செய்து 46 பவுண் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட சம்பவம் மக்களிடையே பயத்தையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வேலைக்காரியிடம் மேற்கொண்ட விசாரணையில் உண்மைகள் தெரியவந்துள்ளது.

    நகரின் நடுப்பதியில் அரசடி பகுதியிலுள்ள பார்வீதியில், அதிக  சனநடமாட்டம் உள்ள பகுதியில் மாடிக்கட்டடம் கொண்ட வீட்டில் களுவாஞ்சிக்குடியில் தங்க ஆபரண விற்பனை கடை நடாத்திவரும் செவ்வராசா செல்வி என்றழைக்கப்படும் தயாவதி ஆகிய தம்பதிகளுக்கு  23 வயதுடைய பெண், 26 வயதுடைய ஆண் பிள்ளைகளான இரு பிள்ளைகளுடன் எளிமையாக வாழ்ந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் வர்த்தகர் செல்வராசாவின் வீட்டிற்கு மட்டக்களப்பு கருவப்பங்கேணி ஒம்பிறோஸ் வீதியில் வசித்துவரும் 27 வயதுடைய ரவிகார்த்திகா பெண் ஒருவர் தினமும் காலையில் வந்து மாலை வரை வீட்டில் மனைவிக்கு ஒத்துழைப்பாக சமையல் மற்றும் ஏனைய வீட்டு வேலைகளை செய்துவந்துள்ளார். அவருக்கு வேலைக்கான சம்பளத்தையும் வழங்கிவந்துள்ளனர்.

    குறித்த வேலைக்காரி பின்னர் மலேசியாவுக்கு வீட்டு வேலை வாய்ப்பு  பெற்று அங்கு சென்று வேலை செய்துவந்த நிலையில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகிய நிலையில் அங்கிருந்து அவரை பொலிஸார் பிடித்து நாட்டுக்கு திருப்பி அனுப்பிய நிலையில் இலங்கைக்கு வந்த நிலையில் வாழைச்சேனையில் திருமணம் முடித்து  கொண்டு பெற்றோருடன் அங்கு சென்று குடியிருந்து 8 மாதங்களாக வாழ்ந்துவருகின்ற இவர் அடிக்கடி முன்னர் வேலை செய்த தனது எஜமானியின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.

    இந்த நிலையில் சம்பவ தினமான 20ஆம் திகதி வேலைக்காரி எஜமானியின் தங்க நகையை தனதாக்கி கொள்ளவேண்டும் என்ற ஆசை காரணமாக  தனது கணவரிடம் கல்லாற்றுக்கு தனது தந்தையுடன் செல்வதாக தெரிவித்ததுடன், தனக்கு எஜமானியம்மா 85 ஆயிரம் ரூபாய் பணம் தரவேண்டும் அதனை வாங்கிவரவேண்டும் என தந்தையிடம் பொய்கூறி 48 வயதுடைய தந்தையாரை அழைத்துக் கொண்டு  வீட்டை விட்டு வெளியேறி பேருந்தில் ஏறி மட்டக்களப்பு சினன்ஆஸ்பத்திரி சந்தியில் இறங்கியுள்ளனர்.

    இதனை தொடர்ந்து அங்கிருந்து மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு  முன்பாகவுள்ள கடை ஒன்றில் கோழிவெட்ட கத்தி ஒன்று தேவை என கோரி கத்தி ஒன்றை  வாங்கி தனது தோல்பையில் வைத்துக்கொண்டு பார்வீதியிலுள்ள எஜமானியம்மாவின் வீட்டுக்கு இருவரும் சென்றனர்.

    அங்கு  முதலாளியின் கார் நிற்பதைகண்டு வீட்டுக்கு செல்லாமல் அங்கிருந்து கருவப்பங்கேணியிலுள்ள தந்தை தொழில் புரிந்துவரும் ஹோட்டல் முதலாளியை சந்திப்பதற்காக அங்கு சென்று பின்னர் அங்கிருந்து மீண்டும் எஜமானியம்மா வீட்டுக்கு வந்துள்ளனர்.

    அப்போது வர்த்தகர் செல்வராசா அருகிலுள்ள கோவில் திருவிழா காரணமாக கடைக்கு மகனாரை அனுப்பிவிட்டு மனைவியான 48 வயதுடைய தயாவதி மற்றும்  மகளுடன் கோவிக்கு சென்று வழிபட்டுவிட்டு சுமார் 11.30 மணியளவில் வீட்டுக்கு வந்து மனைவியார் கோவிலுக்கு செல்லும் போது முழு தங்க ஆபரணங்களை அணிந்து சென்ற நிலையில் அதோடு  சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ள நிலையில் வேலைக்காரியும் அவரது தந்தையும் அங்கு சென்றதையடுத்து அவர்களை வரவேற்று கலந்துரையாடியதுடன், மதிய உணவை சாப்பிட்டுவிட்டு செல்லுமாறு வேலைக்காரி அவரது தந்தையிடம் கூறினார்.

    இதன்பின்னர் வர்த்தகர் செல்வராசா அவரது மகள் ஆகியோர் சாப்பிட்டு விட்டு வர்த்தகர் செல்வராசா சாப்பிட்டுவிட்டு வீட்டின் முதலாம் மாடியிலுள்ள அறையில் தூங்க சென்ற நிலையில்  மகளும் சாப்பிட்டுவிட்டு வீட்டுமண்டபத்தில் ஒருபதியிலுள்ள குசன் சோபாவில் அமர்ந்து கொண்டு கையடக்க தொலைபேசியில் இருந்த நிலையில் நித்திரையாகியுள்ளார்.

    அப்போது எஜமானியம்மா தனது கையால் வேலைக்காரி மற்றும் அவளின் தந்தை ஆகிய இருவருக்கும் உணவு வழங்கி அவர்கள் சாப்பிட்ட பின்னர் எஜமானியம்மாவுடன் கதைத்துக் கொண்டிருந்த போது நேரம் மாலை சுமார் 4 மணியை நெருங்கி கொண்டிருந்த வேளை எஜமானியம்மாவும் வேலைக்காரியும் கதைத்துக் கொண்டிருந்ததையடுத்து அங்கிருந்து வேலைக்காரியின் தந்தையர் வீட்டின் வெளியிலுள்ள  பகுதிக்கு சென்றுள்ளார்.

    இந்த நிலையில் வீட்டின் முன்பதியில் இருந்த களஞ்சிய அறைக்கு எஜமானியம்மா சென்றுள்ளபோது அவரை வேலைக்காரி பின் தொடர்ந்து சென்று அறையிலுள் எஜமானியம்மாவை வெட்ட தனது தோல் பையில் வைத்திருந்த கைத்தியை எடுத்தபோது எஜமானியம்மா அதனை கண்டு வேலைக்காரியை தள்ளிய போது வேலைக்காரியின் கையில் கத்திபட்டதில் அவளுக்கு காயம் ஏற்பட்டதைடுயடுத்து எஜமானியம்மாவை பிடித்து தள்ளிவிட்டபோது அவர் கீழே தலைகுப்பற வீழ்ந்தபோது அங்கு இருந்த தேங்காயில் தலைஅடிப்பட்டு கீழே கிடந்த எஜமானியம்மா சத்தம் போடதவாறு கழுத்தை சுற்று மின்னல் வேகத்தில் கழுத்தை  கத்தியால் சுமார் 10 தடவை படபடவென வெட்டினார்.

    பின்னர் அவர் ஓடமுடியாதாவாறு முழங்கால்கள் இரண்டையும் வெட்டியதுடன் அவரின் கழுத்தில் இருந்த சுமார் 25 பவுண்தாலிக் கொடியை கழற்றியபோது தலைமுடி தாலியில் சிக்கியதையடுத்து தலைமுடியை வெட்டி தாலிக் கொடியை எடுத்துக்கொண்ட பின்னர் கையில் அணிந்திருந்த காப்புக்களை கழற்ற அங்கிருந்த பலகை கட்டையில் கையை வைத்து கையின் மணிகட்டு பகுதியை கத்தியால் வெட்டி துண்டாக்கிவிட்டு காப்புக்களை கழற்றிக்கொண்டு.

    கைவிரலில் இருந்த மோதிரங்களையும் கழற்றிவிட்டு காதில் இருந்த தோட்டை கழற்ற காதை தோட்டுன் கத்தியால் அறுத்து எடுத்து கொண்டு 46 பவுண் தங்க ஆபரணங்களையும் கொள்ளையிட்டு அதனை தோல்பையில் பையில் எடுத்து வைத்துகொண்டு  கொண்டு கத்தியை அங்குவிட்டுவிட்டு அறையில் இருந்து வெளியேற முற்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் வீட்டின் வெளியே சென்ற வேலைக்காரியின் தந்தையர் அங்கு சென்ற போது மகள் செய்த கொடூரத்தை கண்டு மகள்மீது தாக்கி என்ன செய்துள்ளாய் என இருவரும் சண்டிபிடித்துக் கொண்ட போது ஏற்பட்ட சத்தத்தையடுத்து சோபாவில் நித்திரையில் இருந்த எஜமானியின் மகள் விழித்தொழுந்து வந்தபோது அங்கு தாயார் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைகண்டு அதிர்ந்து கத்தியுள்ளார்.

    இந்த கத்தல் சத்தம் கேட்டு மதல் மாடியில் படுத்திருந்த கணவர் பதற்றத்துடன் கீழ் இறங்கிவந்தபோது மனைவி இரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து சத்தமிட்டார்.

    இதன்போது கொள்ளையடித்த நகைகளுடன் வேலைக்காரியும் அவளது தந்தையும் அங்கிருந்து வெளியேறி தப்பி ஓடி வீதிக்கு சென்றபோது வீதியில் இருந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் அவர்களை பின்தொடர்ந்துடன் அங்கு கடைகளில் இருந்தவர்களும் ஒன்றிணைந்து அவர்களை மடக்கிபிடித்தனர் என பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி முகமட் ஜெஸலி தலைமையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் வேலைக்காரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    இதனையடுத்து சம்பவ இடத்துக்கு திங்கட்கிழமை இரவு சென்ற மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான்  சம்பவ இடத்தை பார்வையிட்டு சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் கொலைக்கு பயன்படுத்திய கத்தி உள்ளிட்ட தடயப் பொருட்களை சேகரித்து கொள்ளுமாறும் உத்தரவிட்டார்.

    கொள்ளையடிக்கப்பட்டு மீட்கப்பட்ட 46 பவுண் தங்க ஆபரணங்கள், கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிரி கமராவில் பதிவான சிசிரி ஒளித் தொகுப்புக்கள்  அடங்கிய விசிடி  எனப்படும் வண்தட்டு போன்ற தடயப் பொருட்களை மீட்ட பொலிஸார்  கைது செய்யப்பட்ட வேலைக்காரி மற்றும் அவளது தந்தை ஆகிய இருவரையும்  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் ஜனவரி 4ம் திகதி 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

    இந்த கொலை சம்பவத்தினால் மட்டக்களப்பு மக்கள் மட்டுமல்ல நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் அதிர்சிக்குள்ளாகி இருப்பதுடன் அச்சம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    Related

    Category: இலங்கை கிழக்கு மாகாணம் பிரதான செய்திகள் மட்டக்களப்பு
    Tags: எஜமானிபொலிஸார்மட்டக்களப்புவிளக்கமறியல்
    Lyca Mobile UK Lyca Mobile UK

    Related Posts

    அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
    JUST IN

    அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

    2025-12-05
    நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!
    இலங்கை

    அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஜனாதிபதியின் விசேட அறிவித்தல்!

    2025-12-05
    நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் 504 அனர்த்த நிவாரண மருத்துவக் குழுக்கள் செயற்பாட்டில்!
    இலங்கை

    நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் 504 அனர்த்த நிவாரண மருத்துவக் குழுக்கள் செயற்பாட்டில்!

    2025-12-05
    நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!
    இலங்கை

    நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய சிறப்பு உரை!

    2025-12-05
    நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!
    இலங்கை

    நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

    2025-12-05
    5 மாவட்டங்களுக்கு  மண்சரிவுக்கான சிவப்பு  எச்சரிக்கை!
    இலங்கை

    5 மாவட்டங்களுக்கு  மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கை!

    2025-12-05
    Next Post
    கொரோனா வைரஸின் புதிய திரிபு மத்திய பிரதேசத்தில் அடையாளம்!

    இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    Athavan tv
    Athavan Radio
    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2024 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    No Result
    View All Result
    • HOME
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா
    • கட்டுரைகள்

    © 2024 Athavan Media, All rights reserved.

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.