• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்

பிரபு நசீர் அஹமட் குழந்தை பாலியல் குற்றங்களில் ஈடுபட்டமை உறுதியானது!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/01/18
in உலகம்
68 1
A A
0
பிரபு நசீர் அஹமட் குழந்தை பாலியல் குற்றங்களில் ஈடுபட்டமை உறுதியானது!
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

1970களில் இரண்டு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்காக ஐக்கிய இராச்சியத்தில் உள்ள ஷெஃபீல்ட் கிரவுன் நீதிமன்றத்தால், பிரபு நசீர் அஹமட் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும், ஐக்கிய இராச்சியத்தில் உள்ள முன்னாள் பிரபுக்கள் சபை உறுப்பினரான பிரபு நசீர் அஹமட் தனக்கு எதிரான எட்டு பாலியல் குற்றங்கள் தொடர்பாக நீதிமன்றத்தின் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

ஷெஃபீல்ட் கிரவுன் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது நடுவர் மன்றத்தின் முன் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்களுக்கு முற்றிலும் எதிராக தீர்ப்புகள் வந்துள்ளன’ என பிரபு நசீர் அஹமட்டின் சட்டப் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிரபு நசீர் அஹமட் ‘தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய நாங்கள் எங்கள் வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்,’ என்றும் அவர் கூறியுள்ளார்.

1970களில் இளைய வயதினராக இருந்தபோது ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் பிரபு நசீர் அஹமட் குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்தது.

மார்ச் 2019 இல், பிரபு நசீர் அஹமட் இரண்டு குழந்தைகளுக்கு எதிரான வரலாற்று பாலியல் குற்றங்களில் ஈடுபட்டார் என்றும் 1970களின் முற்பகுதியில் இரண்டு கற்பழிப்பு முயற்சி மற்றும் ஒரு அநாகரீகமான தாக்குதல் ஆகிய செயற்பாடுகளில் பிரதான குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டார்.

பிரபு நசீர் அஹமட்  மீது இளைஞர் மற்றும் பெண் ஆகியோர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். 1971, 1974இக்கு இடையில் பிரபு நசீர் அஹமட் பதின்ம வயதினராக இருந்தபோது அவர் குற்றங்களில் ஈடுபட்டதாக 14 வயதுக்குட்பட்ட சிறுவன் ஒருவரும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

பிரபு நசீர் அஹமட் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியான காஷ்மீரில் பிறந்தார், பின்னர் அவர் தனது பூர்வீகத்தினருடன் 1969இல் ரோதர்ஹாமிற்குச் சென்றிருந்தார், அங்கு வளர்ந்த அவர் இன்னமும் அங்ககேயே உள்ளார்.

எஃகுத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தனது தந்தையுடன் சேர்ந்து, 1975இல் தனது 18 வயதில் தொழிலாளர் கட்சியில் சேர்ந்ததுடன், 1990 இல் ரோதர்ஹாமில் கவுன்சிலரானார்.

ரோதர்ஹாம் பெருநகர பேரூராட்சி கவுன்சிலில் ஒரு தசாப்த காலம் பணியாற்றினார். அத்துடன் ஷெஃபீல்ட் ஹலாம் பல்கலைக்கழகத்தில் படித்த பிறகு, அவர் தனது சொந்த ஊரில் கடைத்தொகுதிகளை ஆரம்பித்தார்.

1998இல், அப்போதைய பிரதமர் டோனி பிளேயரால் ஹவுஸ் ஆஃப் லோர்ட்ஸுக்கு நியமிக்கப்பட்ட முதல் முஸ்லிம் நபரானார். அத்துடன், 2013இல் தொழிலாளர் கட்சியில் இருந்து விலகினார்.

நவம்பர் 2020 இல், பல பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில்  அனைத்துப் பதவிகளிலும் இருந்து இராஜினாமா செய்ததோடு, காலிஸ்தானி பயங்கரவாத குழுக்களின் தீவிர ஆதரவாளராகவும், இந்திய அரசின் கொள்கைகளை விமர்சிப்பவராகவும் இருந்தார்.

அவர் தன்னை காஷ்மீர் பூர்வீகக் குடியாளன் என்று முன்வைத்த போதிலும், உண்மையில் அவர் தனது நிலையை காஷ்மீர் பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டுவதற்காக பயன்படுத்தினார்.

நவம்பர் 14 ஐக்கிய இராச்சியத்தின் ஹவுஸ் ஆஃப் லோர்ட்ஸ் நடத்தைக் குழு அவர் வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.

லண்டனில் உள்ள காஷ்மீரி பெண்கள் குழு, நசீர் உள்ளிட்ட அரசியல்வாதிகள் மற்றும் காஷ்மீரி சமூகத்தில் பெண்களைச் சுரண்டுகின்றவர்கள் என்று பிரசாரம் செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

Tags: பிரபு நசீர் அஹமட்
Share12Tweet7Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

பிரேசிலிய பொலிஸ் சோதனையில் குறைந்தது 11 பேர் சுட்டுக்கொலை – அதிகாரிகள்
உலகம்

பிரேசிலிய பொலிஸ் சோதனையில் குறைந்தது 11 பேர் சுட்டுக்கொலை – அதிகாரிகள்

2022-05-25
ஆரம்பப் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு :14 மாணவர்களும் ஒரு ஆசிரியரும் உயிரிழப்பு
உலகம்

ஆரம்பப் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு :14 மாணவர்களும் ஒரு ஆசிரியரும் உயிரிழப்பு

2022-05-25
ஏப்ரல் மாதத்தில் அரசாங்கம் கடன் வாங்குவது குறைந்துள்ளது!
இங்கிலாந்து

ஏப்ரல் மாதத்தில் அரசாங்கம் கடன் வாங்குவது குறைந்துள்ளது!

2022-05-24
ஆப்கானிலிருந்து பிரித்தானியா வெளியேறியது பேரழிவு- துரோகம்!
இங்கிலாந்து

ஆப்கானிலிருந்து பிரித்தானியா வெளியேறியது பேரழிவு- துரோகம்!

2022-05-24
இந்தோ பசிபிக் பொருளாதார கட்டமைப்பை ஆரம்பித்து வைத்தார் ஜோ பைடன்!
ஆசியா

இந்தோ பசிபிக் பொருளாதார கட்டமைப்பை ஆரம்பித்து வைத்தார் ஜோ பைடன்!

2022-05-24
போர்க் குற்ற விசாரணையில் ரஷ்ய படை வீரருக்கு வாழ்நாள் சிறை தண்டனை!
உலகம்

போர்க் குற்ற விசாரணையில் ரஷ்ய படை வீரருக்கு வாழ்நாள் சிறை தண்டனை!

2022-05-24
Next Post
பொருளாதாரத்தில் சீனாவை பின்தள்ளும் இந்தியா!

கொரோனாவின் 2ஆவது அலையை போன்ற பாதிப்பு மீண்டும் ஏற்படும் - எச்சரிக்கும் ஐ.நா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: வெள்ளவத்தையில் பதற்றம்

சமையல் எரிவாயு தட்டுப்பாடு: வெள்ளவத்தையில் பதற்றம்

2022-05-07
மக்களின் எதிர்ப்பார்ப்பை புறந்தள்ளி வெற்றிகரமாக பயணிக்க முடியாது- அமைச்சர் விமல் !

லிபியாவிற்கு இணையான நெருக்கடியாக மாற்ற சிலர் முயற்சி… சில குழுக்களும் குண்டர்களும் பின்னணியில் என்கின்றார் விமல்

2022-05-02
பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கப்படும் இலங்கை !

31க்கு பின்னர் அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம்!

2022-05-25
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

2022-05-18
எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படுகின்றது பயணக்கட்டுப்பாடு!

நீடிக்கப்பட்டது ஊரடங்கு உத்தரவு – சற்று முன்னர் வெளியானது அறிவிப்பு

2022-05-10
பெண்ணாக சமூக ஊடகத்தில் உரையாடி பணம் பறித்த ஆண் வட்டுகோட்டையில் கைது!

பெண்ணாக சமூக ஊடகத்தில் உரையாடி பணம் பறித்த ஆண் வட்டுகோட்டையில் கைது!

2022-05-25
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உருவாக்கத்திற்கும் மணிவண்ணனுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது – சுகாஷ்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உருவாக்கத்திற்கும் மணிவண்ணனுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது – சுகாஷ்!

2022-05-25
O/L பரீட்சையில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டவருக்கு விளக்கமறியல் – கல்முனையில் சம்பவம்!

O/L பரீட்சையில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டவருக்கு விளக்கமறியல் – கல்முனையில் சம்பவம்!

2022-05-25
அரச ஊழியர்கள் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்ல சந்தர்ப்பம்

அரச ஊழியர்கள் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்ல சந்தர்ப்பம்

2022-05-25
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 22 தமிழக மீனவர்கள் கைது!

இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்க நடவடிக்கை!

2022-05-25

Recent News

பெண்ணாக சமூக ஊடகத்தில் உரையாடி பணம் பறித்த ஆண் வட்டுகோட்டையில் கைது!

பெண்ணாக சமூக ஊடகத்தில் உரையாடி பணம் பறித்த ஆண் வட்டுகோட்டையில் கைது!

2022-05-25
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உருவாக்கத்திற்கும் மணிவண்ணனுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது – சுகாஷ்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உருவாக்கத்திற்கும் மணிவண்ணனுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது – சுகாஷ்!

2022-05-25
O/L பரீட்சையில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டவருக்கு விளக்கமறியல் – கல்முனையில் சம்பவம்!

O/L பரீட்சையில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டவருக்கு விளக்கமறியல் – கல்முனையில் சம்பவம்!

2022-05-25
அரச ஊழியர்கள் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்ல சந்தர்ப்பம்

அரச ஊழியர்கள் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்ல சந்தர்ப்பம்

2022-05-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.