• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து

“லொக் டவுண்” கால விருந்துகள்: தலைமைத்துவத் தோல்வி – விசாரணை அறிக்கை கண்டனம்!

பதவி விலகல் பற்றி ஏதும் பேசாமல்"சொறி" மட்டும் சொன்னார் பொறிஸ்!

Kuruparan by Kuruparan
2022/02/01
in இங்கிலாந்து, பிரதான செய்திகள், முக்கிய செய்திகள்
79 1
A A
0
“லொக் டவுண்” கால விருந்துகள்: தலைமைத்துவத் தோல்வி – விசாரணை அறிக்கை கண்டனம்!
34
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரிட்டனில் பொது முடக்க காலப்பகுதியில் நம்பர்-10 அலுவலகத்தில் இடம் பெற்ற விதிகளை மீறிய மது விருந்துகள், ஒன்று கூடல்களைத் “தலைமைத் துவத்தின் தோல்வி”(failures of leadership’) என்று முக்கிய விசாரணை அறிக்கை கண்டித்திருக்கிறது.

நடைபெற்ற ஒன்று கூடல்களில் பலவும் “அனுமதிக்க முடியாதவை” என்றும் அந்த அறிக்கை சாடியுள்ளது.நாட்டுமக்களுக்கு சமூக ஒன்று கூடல்கள் தடுக்கப்பட்ட சமயத்தில் நடந்துள்ள “அளவுக்கதிகமான மது பாவனை (“excessive consumption of alcohol”) என்று மது விருந்துகளை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

நாடெங்கும் கொரோனா சுகாதாரக் கட்டுப்பாடுகள் அமுலில் இருந்தவேளை பிரதமரது நம்பர் 10 அலுவலகத்திலும் அரச பணிமனைகளிலும் இடம் பெற்றதா கக் கூறப்படுகின்ற ஒரு டசினுக்கு மேற்பட்ட நிகழ்வுகள் தொடர்பாக விசாரிக்கும் பொறுப்பு மூத்த சிவில் அதிகாரியான சூ கிறே (Sue Gray) அம்மையாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. நாடு முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த அவரது விசாரணை அறிக்கை இன்று பிரதமர் அலுவலகத்திடம் கையளிக்கப்பட்டது.

12 பக்கங்கள் அடங்கிய அந்த அறிக்கை பிரதமர் ஜோன்சனுக்கு மேலும் நெருக் கடியைக் கொடுத்திருக்கிறது. அறிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்றுமாலை விளக்கமளித்த அவர், அதனை ஏற்றுக் கொள்வதாகக் கூறினார்.

ஆனால் தனது தவறுக்குப் பொறுப்பேற்று என்ன செய்யப் போகிறார் என்பது தொடர்பில் எதனையும் சொல்லாமல் தவிர்த்த அவர், நம்பர் 10 அலுவலகத்தினதும் அமைச்சரவைப் பணிமனையினதும் நிர்வாக நடைமுறைகளில் மாற்றங்களைச் செய்யப்போவதாக மட்டுமே கூறியிருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் “சொறி”(sorry) சொல்லிய பிரதமர் , உறுப்பினர்களது கடும்கண்டனக் கணைகளை வாங்க நேர்ந்துள்ளது.

பொலீஸ் விசாரணைகள் முடியும் வரைஇடம்கொடுங்கள் என்று பிரதமர் கூறியபதிலால் நாடாளுமன்றத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. நாட்டையும் உறுப்பினர்களையும் பிரதமர் ஏமாற்றுகிறார் என்று எதிர்க்கட்சியினர் குரல் எழுப்பினர்.

ஒன்று கூடவும், விருந்து உண்ணவும் நாட்டு மக்களுக்குத் தடைகளை அறிவித்துவிட்டு அரசுத் தலைமை தான் மாத்திரம் விதிகளை மீறிப் பலரை ஒன்று கூட்டி விருந்துகளை நடத்தியமை தெரியவந்ததால் பிரதமர் மீது நாட்டு மக்கள் கடும் அதிர்ப்த்தி அடைந்துள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

“பார்ட்டிகேற்” (party-gate”) என்று  அழைக்கப்படுகின்ற இந்த லொக்-டவுண் விருந்து விவகாரம் பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் பதவியை ஆட்டம்காண வைத்திருக்கின்றது. எதிர்க்கட்சியினரும் அவரது ஆளும் கட்சியின் மூத்த தலைவர்களும் அவரைப்பதவி விலகுமாறு கோரி வருகின்றனர்.ஆனால் பிரதமரோ அதற்கு இணங்க மறுத்துள்ளார். சம்பவங்களுக்காக அவர் தனது மனப்பூர்வமான மன்னிப்பை ஏற்கனவே கோரியுள்ளார்.

இந்த நிலையிலேயே சூ கிறேயின் முதற்கட்ட அறிக்கை வெளியாகியிருக்கிறது. விதிகளை மீறிய இந்த விருந்துகள் தொடர்பில் குற்றம் இழைக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவதற்காக லண்டன் பெருநகரப் பொலீஸாரும் தனியே விசாரணை ஒன்றைத் தொடக்கியுள்ளனர்.

டவுணிங் வீதி அலுவலகத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் பிரதமரது பிறந்த நாள் கொண்டாட்டம் உட்பட நிகழ்வுகள் தொடர்பாக நூற்றுக்கணக்கான புகைப்படங்களும் ஆவணங்களும் தமக் குக் கிடைத்துள்ளன என்று பொலீஸ் தலைமை அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.

 

Share14Tweet9Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

நடமாடும் பொலிஸ் ரோந்துப் பணியை அதிகரிக்குமாறு பணிப்புரை – துப்பாக்கிச் சூடு நடத்தவும் அனுமதி!
இலங்கை

ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களை விசாரிக்க பொலிஸார் திட்டம்

2022-05-17
பாதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய வீடுகள்!
இலங்கை

பாதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய வீடுகள்!

2022-05-17
இப்போது நான் எந்தப் பக்கத்தில் நிற்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை – ரணில்
இலங்கை

இப்போது நான் எந்தப் பக்கத்தில் நிற்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை – ரணில்

2022-05-17
கொழும்பின் சில வீதிகள் நீரில் மூழ்கின!
இலங்கை

சீரற்ற வானிலை காரணமாக 8 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு!

2022-05-17
நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுப்பது குறித்து இன்று தீர்மானம்!
இலங்கை

ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: மீண்டும் ஆளும்தரப்பு வாக்கெடுப்பில் வெற்றி

2022-05-17
தீயில் எரிந்து பெண் உயிரிழப்பு- கணவன் கைது
இலங்கை

கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்திடல் கலவரம் – இதுவரையில் 664 பேர் கைது!

2022-05-17
Next Post
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக சீனா அறிவிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக சீனா அறிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: வெள்ளவத்தையில் பதற்றம்

சமையல் எரிவாயு தட்டுப்பாடு: வெள்ளவத்தையில் பதற்றம்

2022-05-07
மக்களின் எதிர்ப்பார்ப்பை புறந்தள்ளி வெற்றிகரமாக பயணிக்க முடியாது- அமைச்சர் விமல் !

லிபியாவிற்கு இணையான நெருக்கடியாக மாற்ற சிலர் முயற்சி… சில குழுக்களும் குண்டர்களும் பின்னணியில் என்கின்றார் விமல்

2022-05-02
எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படுகின்றது பயணக்கட்டுப்பாடு!

நீடிக்கப்பட்டது ஊரடங்கு உத்தரவு – சற்று முன்னர் வெளியானது அறிவிப்பு

2022-05-10
காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் – 2,000 தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர தொழிற்சங்கங்கள் தீர்மானம்!

2022-05-11
வெறுமனே பதாதைகளை எரித்து எம் வீர வரலாற்றை கொச்சைப்படுத்தாதீர்கள் – அங்கஜன்

வெறுமனே பதாதைகளை எரித்து எம் வீர வரலாற்றை கொச்சைப்படுத்தாதீர்கள் – அங்கஜன்

2022-05-11
ஊவா மாகாண ஆளுநர் முஸம்மிலின் புதல்வி இங்கிலாந்தில் உள்ளூராட்சி தேர்தலில் வெற்றி!

ஊவா மாகாண ஆளுநர் முஸம்மிலின் புதல்வி இங்கிலாந்தில் உள்ளூராட்சி தேர்தலில் வெற்றி!

2022-05-17
நடமாடும் பொலிஸ் ரோந்துப் பணியை அதிகரிக்குமாறு பணிப்புரை – துப்பாக்கிச் சூடு நடத்தவும் அனுமதி!

ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களை விசாரிக்க பொலிஸார் திட்டம்

2022-05-17
பாதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய வீடுகள்!

பாதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய வீடுகள்!

2022-05-17
இப்போது நான் எந்தப் பக்கத்தில் நிற்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை – ரணில்

இப்போது நான் எந்தப் பக்கத்தில் நிற்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை – ரணில்

2022-05-17
கொழும்பின் சில வீதிகள் நீரில் மூழ்கின!

சீரற்ற வானிலை காரணமாக 8 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு!

2022-05-17

Recent News

ஊவா மாகாண ஆளுநர் முஸம்மிலின் புதல்வி இங்கிலாந்தில் உள்ளூராட்சி தேர்தலில் வெற்றி!

ஊவா மாகாண ஆளுநர் முஸம்மிலின் புதல்வி இங்கிலாந்தில் உள்ளூராட்சி தேர்தலில் வெற்றி!

2022-05-17
நடமாடும் பொலிஸ் ரோந்துப் பணியை அதிகரிக்குமாறு பணிப்புரை – துப்பாக்கிச் சூடு நடத்தவும் அனுமதி!

ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களை விசாரிக்க பொலிஸார் திட்டம்

2022-05-17
பாதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய வீடுகள்!

பாதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய வீடுகள்!

2022-05-17
இப்போது நான் எந்தப் பக்கத்தில் நிற்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை – ரணில்

இப்போது நான் எந்தப் பக்கத்தில் நிற்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை – ரணில்

2022-05-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.