• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

‘தம்பபவனி’ஐ பார்வையிட மன்னாருக்கு சென்றார் ஜனாதிபதி!

1.308 Views
4 years ago
91 1
0
Share
Facebook Twitter WhatsApp
    யே.பெனிற்லஸ் யே.பெனிற்லஸ்
    0 Subscriber

    இலங்கை மின்சார சபைக்கு உரித்தான மன்னார் “தம்பபவனி” காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்துக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (புதன்கிழமை) கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

    மின்சாரத்தால் நாட்டை பலப்படுத்துதல், நிலையான மின் விநியோகம் மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களைத் துரிதப்படுத்துதல் போன்ற நோக்கங்களின் அடிப்படையில், 2014ஆம் ஆண்டில் இந்த “தம்பபவனி” காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணிகளுக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டன.

    இரண்டு பெரிய பருவக் காற்றுகளையும் எதிர்கொள்ளும் மன்னார் தீவின் தெற்குக் கடற்கரைப் பிரதேசத்தில், 13 கிலோமீற்றர் நீளம் மற்றும் 150 ஹெக்டெயார் நிலப்பரப்பு, இதற்காகத் தெரிவு செய்யப்பட்டது.

    90 மீற்றர் உயரத்திலான விசையாழிகளுடன் கூடிய முப்பது கோபுரங்களை இந்த மின்னுற்பத்தி நிலையம் கொண்டுள்ளது. சுழலும் கத்திகளின் (காற்றாலைகள்) விட்டம் நூற்று இருபத்து ஆறு மீற்றர் ஆகும்.

    ஒரு கோபுரத்திலிருந்து 3.45 மெகாவொட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. நடுக்குடா பசுமை உதவி நிலையம் மற்றும் மன்னார் – புதுக்காமம் வரையான 36 கிலோமீற்றர் நீளத்துக்கு, இதன் ட்ரான்ஸ்மிஷன் கட்டமைப்பு அமைந்துள்ளது.

    இந்நிலையத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்னுற்பத்தியின் அளவு 103.5 மெகாவொட்கள் ஆகும். இங்கு ஓர் அலகு மின்னுற்பத்தியை மேற்கொள்ள, 8 ரூபாய்க்கும் குறைவான தொகையே செலவாகின்றது என, இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

    மிகச் சிறந்த மின் விநியோகத்துக்காக, விசேட தொழில்நுட்ப முறைமைகள் மற்றும் சுற்றுச்சூழல் நட்புணர்வுடன் கூடிய இந்நாட்டின் மிகப் பெரிய காற்றாலை மின்னுற்பத்தி நிலையமான இது, மீள்புதுப்பிக்கத்தக்க சக்திவலுவை நோக்கிச் செல்லும் பயணத்தின் விசேடத்துவமிக்க மைல் கல்லாக விளங்குகின்றது.

    “தம்பபவனி காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தின் ஊடாக, மேலும் 50 மெகாவொட் மின்சாரத்தை உற்பத்தி செய்து தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

    அதன் முன்னேற்றம் தொடர்பில் கேட்டறிந்த ஜனாதிபதி, புதிய காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களை அமைக்கக்கூடிய இடங்கள் தொடர்பான அறிக்கையொன்றை உடனடியாகத் தயாரிக்குமாறு, உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

    காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்கள் ஊடாக உற்பத்தி செய்யப்பட்டு இதுவரையில் தேசிய மின் கட்டமைப்புக்கு இணைக்கப்படும் மின்சாரத்தின் அளவு 248 மெகாவொட்களாகும்.

    குறுகிய காலத்துக்குள் அந்தளவை மேம்படுத்துவதற்கு உள்ள சாத்தியக்கூறுகள் தொடர்பில் கண்டறியும் நோக்கத்தில் இந்த மின்னுற்பத்தி நிலையத்துக்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி, அதிலுள்ள அனைத்துப் பிரிவுகளையும் பார்வையிட்டார்.

    2030ஆம் ஆண்டாகும் போது, இந்நாட்டின் மொத்த மின்னுற்பத்தியில் 70 சதவீதத்தை மீள்புதுப்பிக்கத்தக்க சக்திவலுக்கள் ஊடாகப் பெற்றுக்கொள்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

    சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பற்ற வகையில், குறைந்த விலையில் மின்னுற்பத்தியை மேம்படுத்துவதன் மூலம், எதிர்காலத்தில் நுகர்வோர் செலுத்தும் மின் கட்டணத்தின் அளவைக் குறைப்பதே இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.

    blank blank blank blank blank blank blank blank blank blank blank blank blank blank blank blank blank blank

    Related

    Category: இலங்கை மன்னாா் முக்கிய செய்திகள் வட மாகாணம்
    Tags: கோட்டாபய ராஜபக்ஷதம்பபவனிஜனாதிபதி
    Lyca Mobile UK Lyca Mobile UK

    Related Posts

    இலங்கைக்கான ஆதரவை தீவிரப்படுத்தும் இந்தியா!
    இலங்கை

    இலங்கைக்கான ஆதரவை தீவிரப்படுத்தும் இந்தியா!

    2025-12-03
    கடுவலை – பத்தரமுல்ல வீதி மீண்டும் திறப்பு!
    இலங்கை

    கடுவலை – பத்தரமுல்ல வீதி மீண்டும் திறப்பு!

    2025-12-03
    தொற்றுநோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கை!
    இலங்கை

    தொற்றுநோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கை!

    2025-12-03
    மன்னார் மாவட்டத்தில் அதிக வெள்ள பாதிப்புக்குள்ளான இடங்களுக்கு வடக்கு ஆளுநர் திடீர் விஜயம்!
    மன்னாா்

    மன்னார் மாவட்டத்தில் அதிக வெள்ள பாதிப்புக்குள்ளான இடங்களுக்கு வடக்கு ஆளுநர் திடீர் விஜயம்!

    2025-12-03
    அபத்தமான அறிக்கை: பாகிஸ்தானின் குற்றச்சாட்டை கடுமையாக சாடிய இந்தியா!
    ஆசிரியர் தெரிவு

    அபத்தமான அறிக்கை: பாகிஸ்தானின் குற்றச்சாட்டை கடுமையாக சாடிய இந்தியா!

    2025-12-03
    மீட்டெடுக்கப்படாத சுமார் 390,000 நீர் விநியோக இணைப்புகள்!
    இலங்கை

    மீட்டெடுக்கப்படாத சுமார் 390,000 நீர் விநியோக இணைப்புகள்!

    2025-12-03
    Next Post
    கிராமங்களில் அதிகரிக்கும் கொரோனா பரவல் – விடுக்கப்பட்டது எச்சரிக்கை!

    நாட்டில் மீண்டும் ஆயிரத்தினைக் கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    Athavan tv
    Athavan Radio
    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2024 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    No Result
    View All Result
    • HOME
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா
    • கட்டுரைகள்

    © 2024 Athavan Media, All rights reserved.

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.