• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு

ஆர்ப்பாட்டம் எனும் போர்வையில் கலவரத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது – சரத் வீரசேகர!

1.166 Views
2 months ago
81 1
0
Share
Facebook Twitter WhatsApp
    யே.பெனிற்லஸ் யே.பெனிற்லஸ்
    Subscriber

    ஆர்ப்பாட்டம் எனும் போர்வையில் கலவரத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது எனவும், இவற்றுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸ் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

    நுகேகொட ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதிக்கு சென்று, நிலைமைகளை பார்வையிட்டப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “நாட்டில் பொருளாதார பிரச்சினையொன்று இருப்பதை நாம் அறிவோம். எரிவாயுப் பிரச்சினை, எரிபொருள் பிரச்சினை, மின்சாரப்பிரச்சினை என்பதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

    இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க அரசாங்கம் என்ற ரீதியில் நாமும் வேலை செய்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், ஆர்ப்பாட்டம் எனும் போர்வையில் சொத்துக்களை சேதப்படுத்துவதையோ பேருந்துக்கு தீ வைப்பதையோ எம்மால் அனுமதிக்க முடியாது.

    மக்களின் பாதுகாப்பே எமக்கு முக்கியமாகும். இதனால் சாதாரண பொது மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இது சாதாரண ஓர் ஆர்ப்பாட்டமாக தெரியவில்லை. இந்த சூழ்நிலையைப் பார்க்கும்போது இது தெளிவாகத் தெரிகின்றது.

    இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு டொலரைக் கொண்டுவர முடியுமா? டீசலைக் கொண்டுவர முடியுமா?  உண்மையில், இதன் பின்னணியில் அடிப்படைவாதக் குழுவொன்றே உள்ளது.

    வெளியாகியுள்ள காணொளிகளில் இவர்கள் எவ்வாறான ஆயுதங்களுடன் இதில் கலந்து கொண்டிருந்தார்கள் என்பது தெரிகின்றது.

    பொலிஸ் அமைச்சர் எனும் ரீதியில் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. நாட்டில் ஏன் இவ்வாறான பொருளாதாரப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்பதை மக்களும் சிந்திக்க வேண்டும்.

    மக்களுக்கு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட ஜனநாயக ரீதியாக உரிமையுள்ளது. ஆனால், ஆர்ப்பாட்டம் எனும் போர்வையில் கலவரத்தை ஏற்படுத்தும் செய்பாடுகளுக்கு நாம் எதிர்க்காலத்திலும் அனுமதிக்கப்போவதில்லை.

    ஜனாதிபதி இதுவரை எந்தவொரு ஆர்ப்பாட்டத்தையும் எதிர்க்கவில்லை. எதிர்க்காலத்திலும் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடலாம்.

    எவ்வாறாயினும் இதுபோன்றதொரு சம்பவத்தை நாம் இனிமேல் பார்த்துக் கொண்டிருக்கப்போவதில்லை. இந்த சம்பவத்திற்கு பொறுப்பான அனைவருக்கு எதிராகவும் நாம் நடவடிக்கை எடுப்போம்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒருவரேனும் நாட்டுக்கு ஒரு டொலரைக் கொண்டுவந்துள்ளார்களா? – இல்லை. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க யோசனையை முன்வைத்துள்ளார்களா? – இல்லை. இதுதான் இங்குள்ள பிரச்சினையே.

    நாட்டின் பிரச்சினையை தீர்க்க துளியளவும் ஒத்துழைக்காத தரப்பினர்தான் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.“ எனத் தெரிவித்துள்ளார்.

    Category: ஆசிரியர் தெரிவு இலங்கை கொழும்பு பிரதான செய்திகள்
    Tags: ஆர்ப்பாட்டம்சரத் வீரசேகர
    Share14Tweet9Send
    Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

    Related Posts

    மீண்டும் கறுப்பு பட்டியலுக்குள் இலங்கை இணைக்கப்படலாம் – ரணில் எச்சரிக்கை
    ஆசிரியர் தெரிவு

    உயிரை பணயம் வைத்து இந்த சவாலுக்கு நான் முகம் கொடுப்பேன் – ரணில்!

    2022-05-16
    ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக பதற்றமான சூழல்!
    இலங்கை

    ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக பதற்றமான சூழல்!

    2022-05-16
    லண்டன் புறநகர் பகுதிகளில், ஒரே நாளில் இரண்டு மரணங்கள்!
    இலங்கை

    ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் நேரத்தில் மாற்றம் !

    2022-05-16
    தமிழர்கள் நம்பிக்கையை இழக்க கூடாது, உரிமையை வென்றெடுக்கலாம் – சம்பந்தன்
    இலங்கை

    தமிழர்களுக்கான தீர்வை வென்றெடுக்க புதிய பிரதமருடன் பேசுவோம் – சம்பந்தன்

    2022-05-16
    UPDATE -தாக்குதலைக் கண்டித்து கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகத்தில் போராட்டம்!
    ஆசிரியர் தெரிவு

    காலி முகத்திடல் அமைதியின்மை – விசாரணைகளுக்காக விசேட அறிக்கையாளர் நியமனம்

    2022-05-16
    நாடளாவிய ரீதியில் இன்று மின்வெட்டு – முழுமையான விபரம்!
    இலங்கை

    நாட்டில் நாளை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த அறிவிப்பு

    2022-05-16
    Next Post
    தோற்றிருப்பது நாட்டின் பொருளாதாரம் அல்ல இந்த அரசாங்கத்தின் இனவாதமே – கி.சேயோன்

    தோற்றிருப்பது நாட்டின் பொருளாதாரம் அல்ல இந்த அரசாங்கத்தின் இனவாதமே - கி.சேயோன்

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2021 Athavan Media, All rights reserved.

    No Result
    View All Result
    • Home
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா
    • கட்டுரைகள்

    © 2021 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Create New Account!

    Fill the forms below to register

    All fields are required. Log In

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.