• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
சீனாவிடமிருந்து விலகிவரும் இலங்கை இந்தியாவை நெருங்குகிறது!

இலங்கை விவகாரத்தினை வைத்து காய்களை நகர்த்தும் இந்தியா மற்றும் சீனா?

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/04/23
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, கொழும்பு, சிறப்புக் கட்டுரைகள், பிரதான செய்திகள்
77 1
A A
0
34
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கைக்கு மேலும் 2 பில்லியன் டொலர்கள் நிதி உதவியை வழங்க இந்தியா தயாராக உள்ளது.

அத்துடன் இலங்கை விடயத்தில் இந்தியா அண்மைய ஆண்டுகளில் சீனாவிடம் இழந்த இடத்தை புதுடில்லி மீண்டும் பெற முயற்சிக்கிறது என ரொய்ட்டர்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

1948 சுதந்திரத்திற்குப் பின்னர் மிக மோசமான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு, அதன் முதல் கடனைத் திருப்பிச் செலுத்தாத நிலையில் இருக்கும் இலங்கை, இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நட்பு நாடுகளிடம் உணவு, எரிசக்தி உட்பட நிதிக்கடனையும் கோரி வருகிறது.

ஆசிய ஜாம்பவான்களாக இருக்கும் சீனாவும், இந்தியாவும் ஏற்கனவே பில்லியன் கணக்கான டொலர்களை நிதி உதவியாக வழங்கியுள்ளனர்.

இந்நிலையில், ‘நாங்கள் நிச்சயமாக அவர்களுக்கு உதவ விரும்புகிறோம், மேலும் அதிக இடமாற்று வரிகள் மற்றும் கடன்களை வழங்க தயாராக இருக்கிறோம்’ என இலங்கையுடனான பல்வேறு கலந்துரையாடல்களை அறிந்த இந்திய வட்டாரம் தெரிவித்துள்ளது.

புதுடில்லியில் உள்ள ஒரு மூத்த அரசாங்க அதிகாரி, இலங்கை கடனை செலுத்த முடியாது என அவித்தமையானது கவலையளிக்கிறது.

எனினும், தெற்காசியாவை மையமாகக் கொண்ட ஆசிய கணக்குத்தீர்வக ஒன்றியத்திற்குச் செலுத்த வேண்டியவை போன்ற சுமார் 2 பில்லியன் டொலர்கள் நிலுவையைப் பெறுவதற்கு இந்தியாவின் உதவியை நாடுவதாகவும் இந்தியாவிடமிருந்து அதற்கு நேர்மறையான பதில் கிடைத்ததாக இந்திய வட்டாரம் மேலும் கூறியது.

இந்த விடயத்துடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் விடயங்களை குறிப்பிட்டபோதும் தமது பெயர்களை வெளியிடுவதற்கு மறுத்துவிட்டனர் என்று ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

இந்திய அரசாங்கம் மற்றும் அதன் மத்திய வங்கி, ஆகியன இலங்கையின் வெளியுறவு மற்றும் நிதி அமைச்சுக்கள் கோரிக்கைகளுக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை.

இந்தியா இதுவரையில் இலங்கைக்கு 1.9 பில்லியன் டொலர்களை கடன்கள் மற்றும் நாணய பரிமாற்றங்களில் வழங்கியுள்ளது. எரிபொருளுக்காக மேலும் 500 மில்லியன் டொலர்களை கடனாக இலங்கை கோரியுள்ளது.

சீனா 1.3 பில்லியன் டொலர்கள் சிண்டிகேட்டட் கடனையும் 1.5 பில்லியன் யுவான் மதிப்பிலான நாணயச் செலுத்தலையும் நீடித்துள்ளது.

மேலும் கடன்கள் மற்றும் வட்டிகளை மீளச் செலுத்துவதை தாமதப்படத்தல் ஆகியவற்றுக்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

இந்தியாவின் அண்டை நாடான இலங்கை சீனாவை நம்பியிருப்பதைக் குறைப்பதற்கு புதுடில்லி ஆர்வமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை சீனாவுக்கு சுமார் 3.5 பில்லியன் டொலர்கள் கடன்களை மீளச் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது.

இலங்கைத்தீவில் அமைக்கப்பட்ட மொத்த துறைமுகங்கள் மற்றும் சாலைகளில் 10.8 சதவீதமானவற்றை பீஜிங் பங்களிப்பைச் செய்துள்ளது.

இவ்வாறான நிலையில் ‘அவர்கள் (இலங்கை) சீனாவிடமிருந்து கடன் அளவைக் குறைக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம், மேலும் நாங்கள் வலுவான பங்காளிகளாக மாற விரும்புகிறோம்’ என குறித்த இந்திய வட்டாரம் தெரிவித்தது.

இலங்கையின் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, அத்தியாவசிப் பொருட்களான சீனி, அரிசி மற்றும் கோதுமை கொண்ட கப்பல்களையும் இந்தியா இலங்கைக்கு அனுப்பியிருந்தது.

இலங்கை பீஜிங்கில் தங்கியிருப்பதை புதுடில்லி முறையாகக் குறைக்கவில்லை என்றாலும், இலங்கையர்களுக்கு உதவி வழங்குவதற்கான நிபந்தனைகளில் சீனாவை விட இந்தியா சிறந்த நிலையில் உள்ளது என்பதை உணர முடிந்தது என குறித்த இந்திய வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், இலங்கை கடந்த திங்கட்கிழமை சர்வதேச நாணய நிதியத்துடன் கடன்களைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது.

இதேவேளை, அத்தியாவசியமான பொருட்களை கொள்வனவு செய்வதற்கான அந்நியச் செலாவணி இருப்புக்களை தக்கவைத்துக்கொள்ளவதற்கு இலங்கையின் மத்திய வங்கி வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவது சவாலானது மற்றும் சாத்தியமற்றது’ என அறிவித்துள்ளது.

அதேநேரம், எரிபொருள், உணவு, மின்சாரம் மற்றும் மருந்துப் பற்றாக்குறைக்கு எதிராக ஒரு மாதத்திற்கும் மேலாக இலங்கையின் நாலாபுறமும் வீதிப் போராட்டங்கள் உத்வேகமெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: இந்தியாஇலங்கைசீனா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சாமிந்த லக்ஷானின் இறுதிக்கிரியைகள் இன்று நடைபெற்றன!

Next Post

புதிய பிரதமராக விரைவில் பதவியேற்கின்றார் தினேஷ் குணவர்தன?

Related Posts

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் திட்டத்திற்கு இதுவரை 1893 மில்லியன் ரூபா நிதி உதவி!
இலங்கை

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் திட்டத்திற்கு இதுவரை 4.2 பில்லியன் ரூபா நிதி உதவி!

2025-12-19
கொரிய பிரஜை மீது தாக்குதல் நடத்தியவர் கைது!
இலங்கை

கொரிய பிரஜை மீது தாக்குதல் நடத்தியவர் கைது!

2025-12-19
சுற்றறிக்கைகள் மூலம் மீண்டும் இனப்படுகொலை முயற்சி – சிறீதரன் எம்.பி. சாடல்
இலங்கை

சுற்றறிக்கைகள் மூலம் மீண்டும் இனப்படுகொலை முயற்சி – சிறீதரன் எம்.பி. சாடல்

2025-12-19
திராவிடர் கழகத் தலைவரை சந்தித்தனர் தமிழ்த் தேசிய பேரவையினர்
இந்தியா

திராவிடர் கழகத் தலைவரை சந்தித்தனர் தமிழ்த் தேசிய பேரவையினர்

2025-12-19
காலத்தின் தேவைக்கேற்ப ஸ்தாபன கட்டமைப்பில் மாற்றங்கள் – ஜீவன் அறிவிப்பு
இலங்கை

காலத்தின் தேவைக்கேற்ப ஸ்தாபன கட்டமைப்பில் மாற்றங்கள் – ஜீவன் அறிவிப்பு

2025-12-19
பங்களாதேஷ் வன்முறை; சிட்டகாங்கில் உள்ள இந்தியத் தூதரகம் மீது தாக்குதல்!
இந்தியா

பங்களாதேஷ் வன்முறை; சிட்டகாங்கில் உள்ள இந்தியத் தூதரகம் மீது தாக்குதல்!

2025-12-19
Next Post
ஜனாதிபதியுடன் சந்திப்பு – விசேட அறிவிப்பை வெளியிடவுள்ளார் பிரதமர்?

புதிய பிரதமராக விரைவில் பதவியேற்கின்றார் தினேஷ் குணவர்தன?

நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவு 72 வீதமாக அதிகரிப்பு!

நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவு 72 வீதமாக அதிகரிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக சீனா அறிவிப்பு!

விரைவு படுத்தப்படும் சீன - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்?

  • Trending
  • Comments
  • Latest
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2025-12-09
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் திட்டத்திற்கு இதுவரை 1893 மில்லியன் ரூபா நிதி உதவி!

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் திட்டத்திற்கு இதுவரை 4.2 பில்லியன் ரூபா நிதி உதவி!

0
கொரிய பிரஜை மீது தாக்குதல் நடத்தியவர் கைது!

கொரிய பிரஜை மீது தாக்குதல் நடத்தியவர் கைது!

0
சுற்றறிக்கைகள் மூலம் மீண்டும் இனப்படுகொலை முயற்சி – சிறீதரன் எம்.பி. சாடல்

சுற்றறிக்கைகள் மூலம் மீண்டும் இனப்படுகொலை முயற்சி – சிறீதரன் எம்.பி. சாடல்

0
இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் திட்டத்திற்கு இதுவரை 1893 மில்லியன் ரூபா நிதி உதவி!

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் திட்டத்திற்கு இதுவரை 4.2 பில்லியன் ரூபா நிதி உதவி!

2025-12-19
கொரிய பிரஜை மீது தாக்குதல் நடத்தியவர் கைது!

கொரிய பிரஜை மீது தாக்குதல் நடத்தியவர் கைது!

2025-12-19
சுற்றறிக்கைகள் மூலம் மீண்டும் இனப்படுகொலை முயற்சி – சிறீதரன் எம்.பி. சாடல்

சுற்றறிக்கைகள் மூலம் மீண்டும் இனப்படுகொலை முயற்சி – சிறீதரன் எம்.பி. சாடல்

2025-12-19
திராவிடர் கழகத் தலைவரை சந்தித்தனர் தமிழ்த் தேசிய பேரவையினர்

திராவிடர் கழகத் தலைவரை சந்தித்தனர் தமிழ்த் தேசிய பேரவையினர்

2025-12-19
காலத்தின் தேவைக்கேற்ப ஸ்தாபன கட்டமைப்பில் மாற்றங்கள் – ஜீவன் அறிவிப்பு

காலத்தின் தேவைக்கேற்ப ஸ்தாபன கட்டமைப்பில் மாற்றங்கள் – ஜீவன் அறிவிப்பு

2025-12-19

Recent News

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் திட்டத்திற்கு இதுவரை 1893 மில்லியன் ரூபா நிதி உதவி!

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் திட்டத்திற்கு இதுவரை 4.2 பில்லியன் ரூபா நிதி உதவி!

2025-12-19
கொரிய பிரஜை மீது தாக்குதல் நடத்தியவர் கைது!

கொரிய பிரஜை மீது தாக்குதல் நடத்தியவர் கைது!

2025-12-19
சுற்றறிக்கைகள் மூலம் மீண்டும் இனப்படுகொலை முயற்சி – சிறீதரன் எம்.பி. சாடல்

சுற்றறிக்கைகள் மூலம் மீண்டும் இனப்படுகொலை முயற்சி – சிறீதரன் எம்.பி. சாடல்

2025-12-19
திராவிடர் கழகத் தலைவரை சந்தித்தனர் தமிழ்த் தேசிய பேரவையினர்

திராவிடர் கழகத் தலைவரை சந்தித்தனர் தமிழ்த் தேசிய பேரவையினர்

2025-12-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.