• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

உயிரிழந்த சிறுத்தை தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொள்ளுமாறு பணிப்புரை!

1.020 Views
3 years ago
71 0
0
Share
Facebook Twitter WhatsApp
    shagan shagan
    0 Subscriber

    டிக்கோயா – வனராஜா சமர்ஹில் தோட்டப்பகுதியில் உள்ள மரமொன்றில் ஏறிய நிலையில் உயிரிழந்த சிறுத்தைபுலியின் மரணம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர, அமைச்சின் செயலாளர் திருமதி. சந்திரா ஹேரத்துக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

    நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அட்டன் டிக்கோயா – சமர்ஹில் தோட்ட பகுதியில் உள்ள மரக்கறி தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த வலையில் சிக்கி காயமடைந்த குறித்த சிறுத்தை காயத்துடன் கம்பியில் அகப்பட்டவாறே மரத்தில் ஏறியுள்ளது.

    இதனையடுத்து, சிறுத்தையை உயிருடன் பிடிக்கும் நடவடிக்கையில், நல்லதண்ணி வனவிலங்குகள் அலுவலக அதிகாரிகள் மற்றும் பொலிஸார் நடவடிக்கை எடுத்ததுடன், சிறுத்தை ஏறிய மரத்தை வெட்டியுள்ளனர்.

    இதன்போது சிறுத்தையின் மீதே மரம் விழுந்ததால் சிறுத்தை உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    எவ்வாறாயினும், இவ்விடயம் தொடர்பில் உடனடியாக ஆராய்ந்து, உரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் குறித்த சிறுத்தைபுலி உயிரிழந்தது என உறுதி செய்யப்பட்டால், வனவிலங்கு அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு செயலாளருக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

    இச்சம்பவம் தொடர்பான விசேட விசாரணைகளுக்காக மேலதிக செயலாளர் அடங்கிய குழுவொன்று அட்டன் டிக்கோயா சமர்ஹில் தோட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் திருமதி.சந்திரா ஹேரத் அமைச்சருக்கு அறிவித்துள்ளார்.

    Related

    Category: இலங்கை
    Lyca Mobile UK Lyca Mobile UK

    Related Posts

    உத்தியோகப்பூர்வ வெளிநாட்டு கையிருப்பில் வீழ்ச்சி!
    இலங்கை

    உத்தியோகப்பூர்வ வெளிநாட்டு கையிருப்பில் வீழ்ச்சி!

    2025-12-08
    நாட்டினை மீள கட்டியெழுப்புதல் நிதிக்கு வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களால் 700 மில்லியன் ரூபா பங்களிப்பு!
    இலங்கை

    பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு ஆலோசனை!

    2025-12-08
    பண்ணை கடலில் மூழ்கி இருவர் உயிரிழப்பு!
    இலங்கை

    பண்ணை கடலில் மூழ்கி இருவர் உயிரிழப்பு!

    2025-12-08
    மட்டக்களப்பு கிண்ணையடி பிரதேசத்தில்  பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பொருட்கள் வழங்கிவைப்பு!
    இலங்கை

    மட்டக்களப்பு கிண்ணையடி பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பொருட்கள் வழங்கிவைப்பு!

    2025-12-08
    ஹிருணிகா உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு மார்ச் 16 விசாரணைக்கு!
    இலங்கை

    ஹிருணிகா உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு மார்ச் 16 விசாரணைக்கு!

    2025-12-08
    இலங்கையின் அவசர நிதி கோரிக்கைக்கு IMF முன்னுரிமை!
    இலங்கை

    இலங்கையின் அவசர நிதி கோரிக்கைக்கு IMF முன்னுரிமை!

    2025-12-08
    Next Post
    யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் கவனயீர்ப்பு போராட்டம்!

    யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் கவனயீர்ப்பு போராட்டம்!

    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    Athavan tv
    Athavan Radio
    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2024 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    No Result
    View All Result
    • HOME
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா
    • கட்டுரைகள்

    © 2024 Athavan Media, All rights reserved.

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.