• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

தவறான பொருளாதாரக் கொள்கையால் பாரிய இழப்பு – கோட்டாவை சாடிய ஜனாதிபதி !

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2022/10/19
in இலங்கை, முக்கிய செய்திகள்
72 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கடன் மறுசீரமைப்பை வெற்றிகரமாக முன்னெடுத்து முறையாக பொருளாதாரத்தை நிர்வகிக்க அரசாங்கம் தயாராக உள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வரிக் கொள்கை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (புதன்கிழமை) விசேட அறிக்கை ஒன்றை விடுத்து இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் முன்னெடுத்த தவறான பொருளாதாரக் கொள்கையால் நாடு 700 பில்லியன் ரூபாயை இழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கடந்த இரண்டரை வருடங்களில் 2300 பில்லியன் ரூபாய் நாணயம் அச்சிடப்பட்டதால் பணவீக்கம் 70% ஆல் அதிகரித்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேரடி வரிகளை உயர்த்தி, நாட்டின் வருமானத்தை அதிகரிக்காவிட்டால், மீண்டும் வரிசையில் காத்திருக்கும் யுகம் உருவாகலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் வருமானத்தை அதிகரிக்காமல் பொருளாதாரத்தை பலப்படுத்த முடியாது என்றும் நாட்டை மீட்பதற்கு கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு அவசியம் என்பதனால் அவர்கள் அறிவித்தபடி ஆரம்ப வரவுசெலவுத் திட்டத்தில் மிகையை காண்பித்ததாக கூறியுள்ளார்.

ஏற்றுமதி கைத்தொழில்களிடமிருந்து வரி அறிவிட வேண்டும் என்ற சர்வதேச நாணய நிதியத்தின் அறிவிப்புக்கு அமைய புதிய வரி முறை முன்வைக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.

“2026 ஆம் ஆண்டை இலக்காகக் கொள்வதற்காக,02 இலட்சம் வருமானம் பெறுவோருக்கு மட்டும் இந்த வரி அறவீட்டை மட்டுப்படுத்த முடியுமா என்பது தொடர்பில் திறைசேரியும் சர்வதேச நாணய நிதியமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன

எனினும் அந்த நோக்கம் நிறைவேற்றப்படவில்லை. இதன் விளைவாக இறுதியில் ஒரு இலட்சத்தை விடவும் கூடுதலான வருமானத்தைப் பெறுபவர்களிடமிருந்து வருமான வரி அறவிட நேர்ந்தது. இதன் காரணமாக நாட்டில் பாரிய பிரச்சினை எழுந்துள்ளது.

இந்தப் பின்னணியின்படி, இவ்வாறான வரி அறவீட்டு முறையொன்று இல்லாவிட்டால் எமது இலக்கை அடைய முடியாமல் போகலாம் என்பதை நான் கூற விரும்புகின்றேன். 2026 ஆம் ஆண்டுக்குள் எமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14.5 சதவீதம் தொடக்கம் 15 சதவீதம் வரையிலான சதவிகிதத்தை வருமானமாக பெறுவதே எமது இலக்காகும். எனவே நாம் இந்த வேலைத் திட்டத்திலிருந்து ஒதுங்கினால், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்தும் எமக்கு உதவி கிடைக்காமல் போய்விடலாம்.

சர்வதேச நாயண நிதியத்தின் உத்தரவாதம் கிடைக்காமல் போனால், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் மற்றும் உதவி வழங்குவதாக கூறும் நாடுகளிடமிருந்து எமக்கு உதவிகள் கிடைக்காமல் போய்விடும். அவ்வாறு நிகழ்ந்தால், மீண்டும் வரிசைகளில் காத்திருக்கும் யுகத்துக்கே நாம் செல்ல நேரிடும்.

இதைவிடவும் மிக கஷ்டமான காலத்தை எமக்கு எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும். இந்தக் கடன்களைப் பெற்றுக் கொண்டு, கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை நாம் செயல்படுத்த வேண்டும். இவற்றை நாம் விரும்பிச் செய்யவில்லை. விருப்பமில்லாவிட்டாலும் கூட சில விடயங்களை எமக்கு செய்ய நேரிடுகிறது. என்றாலும் அந்த முடிவுகளை நாம் அவ்வப்போது பரிசீலித்து வருகின்றோம்.

கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்கும் அதேநேரம், பெரும்போகத்தில் மிகச் சிறந்த அறுவடையும் கிடைக்குமாக இருந்தால் அதன் மூலம் சிறந்த பொருளாதார நன்மைகளை ஈட்டிக்கொண்டு நாம் முன்னோக்கிச் செல்ல முடியும். அப்போது எமக்கு ஏற்பட்டிருக்கும் பொருளாதார அழுத்தம் குறைவடையும்.

அதேபோன்று நாம் வெளிநாட்டுக் கையிருப்பை அதிகரித்துக் கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளோம். இந்தச் செயற்பாடுகள் யாவற்றையும் முன்னெடுப்பதன் மூலம் எமக்கு முன்னோக்கிச் செல்லக்கூடியதாக இருக்கும்.

நாங்கள் தற்போது கடினமான கால கட்டத்திலேயே இருக்கிறோம்.இதுபோன்ற கடினமான காலத்தில் நாம் கடினமான முடிவுகளையும் எடுக்க நேரிடும். வேறு யாரும் முன்வராத நிலையிலேயே நான் இந்த கடினமான பொறுப்பை ஏற்றிருக்கிறேன்.

எனவேதான் இது தொடர்பில் அனைவருக்கும் விளக்களிக்க வேண்டியது எனது கடமையென்பதை நான் உணர்ந்தேன். இது தொடர்பில் மேலும் பேச்சுவார்த்தைகளை நடத்த அரசாங்கம் தயாராக உள்ளது.” என கூறியுள்ளார்.

Share12Tweet8Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

மீண்டும் ஒத்திவைப்பட்டுள்ள தபால் மூல வாக்களிப்பு!
இலங்கை

மீண்டும் ஒத்திவைப்பட்டுள்ள தபால் மூல வாக்களிப்பு!

2023-03-23
சிவபூமி திருமந்திர அரண்மனை கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில்!
ஆன்மீகம்

சிவபூமி திருமந்திர அரண்மனை கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில்!

2023-03-23
பால் மாவின் விலையை குறைக்க தீர்மானம்!
இலங்கை

பால் மாவின் விலையை குறைக்க தீர்மானம்!

2023-03-23
எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 12 பேர் கைது!
இலங்கை

எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 12 பேர் கைது!

2023-03-23
அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு மருத்துவ உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது!
இலங்கை

அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு மருத்துவ உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது!

2023-03-23
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் – கீ.பீட் நிஜாகரன்
இலங்கை

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் – கீ.பீட் நிஜாகரன்

2023-03-23
Next Post
நாட்டின் நிலைமைகளே எரிபொருள் விலையேற்றத்திற்கு காரணம் – அமைச்சர் நாமல்

திலினியுடன் எந்த சம்பந்தமும் இல்லை - நாமல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
Dartford கரப்பந்தாட்டக் கழகம் 14ஆவது ஆண்டாக நடாத்திய போட்டித்தொடர் நிறைவு!

Dartford கரப்பந்தாட்டக் கழகம் 14ஆவது ஆண்டாக நடாத்திய போட்டித்தொடர் நிறைவு!

2023-03-06
வவுனியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக கண்டெடுப்பு!

வவுனியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக கண்டெடுப்பு!

2023-03-07
பொது போக்குவரத்து மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கு (தனி QR) குறியீடு அமுல்    

எரிபொருள் விலை குறைப்பு – அமைச்சர் அறிவிப்பு

2023-03-21
நெருக்கடிக்கு தீர்வாக மத்திய கிழக்கு நாடுகளின் உதவியை நாட அரசாங்கம் தீர்மானம்!

டொலரின் கொள்விலை மற்றும் விற்பனை விலைகளில் வீழ்ச்சி !

2023-03-21
அளவுக்கு அதிகமாக தங்க நகைகளை அணிந்து கொண்டு இலங்கைவர தடை !

தங்கத்தின் விலையில் இன்று மேலும் வீழ்ச்சி !

2023-03-07
மீண்டும் ஒத்திவைப்பட்டுள்ள தபால் மூல வாக்களிப்பு!

மீண்டும் ஒத்திவைப்பட்டுள்ள தபால் மூல வாக்களிப்பு!

2023-03-23
ராகுல் காந்திக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை!

ராகுல் காந்திக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை!

2023-03-23
சிவபூமி திருமந்திர அரண்மனை கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில்!

சிவபூமி திருமந்திர அரண்மனை கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில்!

2023-03-23
பால் மாவின் விலையை குறைக்க தீர்மானம்!

பால் மாவின் விலையை குறைக்க தீர்மானம்!

2023-03-23
எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 12 பேர் கைது!

எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 12 பேர் கைது!

2023-03-23

Recent News

மீண்டும் ஒத்திவைப்பட்டுள்ள தபால் மூல வாக்களிப்பு!

மீண்டும் ஒத்திவைப்பட்டுள்ள தபால் மூல வாக்களிப்பு!

2023-03-23
ராகுல் காந்திக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை!

ராகுல் காந்திக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை!

2023-03-23
சிவபூமி திருமந்திர அரண்மனை கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில்!

சிவபூமி திருமந்திர அரண்மனை கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில்!

2023-03-23
பால் மாவின் விலையை குறைக்க தீர்மானம்!

பால் மாவின் விலையை குறைக்க தீர்மானம்!

2023-03-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.