• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மட்டக்களப்பில் கடந்த மாதம் மாத்திரம் 700 மாடுகள் நோயினால் இறந்துள்ளன!

மட்டக்களப்பில் கடந்த மாதம் மாத்திரம் 700 மாடுகள் நோயினால் இறந்துள்ளன!

shagan by shagan
2022/11/02
in இலங்கை
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நோயினால் 700க்கும் அதிகமான மாடுகள் இறந்துள்ளதாக கால்நடை பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடைகள் இறப்பது குறித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு வருகைதந்து மாவட்ட உதவி அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு சர்வமத பேரவை மற்றும் மயிலத்தமடு,மாதவனை கால்நடை வளர்ப்பு கமநல அமைப்பு ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த சந்திப்பினை மேற்கொண்டது.

மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் நவேஸ்வரனை சந்தித்த குழுவினர் அண்மைக்காலமாக கிரான் மற்றும் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மாடுகள் திடீர்திடீர் என இறப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மயிலத்தமடு,மாதவனை கால்நடை வளர்ப்பு கமநல அமைப்பின் தலைவர் எஸ்.நிமலன், மட்டக்களப்பு சர்வமத பேரவை தலைவர் த.மனோகரன் உட்பட கால்நடை பண்ணையாளர்கள்,சர்வமத பேரவையின் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

அத்துடன் இவ்வாறு கால்நடைகள் உயிரிழக்கும்போது அரச கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகம் முறையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லையென பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த 09தினங்களுக்குள் 200மாடுகள் உயிரிழந்துள்ளதாகவும் ஏற்கனவே இதற்கான தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருந்தால் மாடுகள் இறப்பதை தவிர்த்திருக்கமுடியும் எனவும் மயிலத்தமடு,மாதவனை கால்நடை வளர்ப்பு கமநல அமைப்பின் தலைவர் எஸ்.நிமலன் தெரிவித்தார்.

அரச கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகம் இது தொடர்பில் உடல்கூறுகளைப்பெற்றுச்சென்று ஒன்பது தினங்களை கடந்துள்ள நிலையிலும் இதுவரையில் அது தொடர்பில் முறையான நடவடிக்கையெடுக்கவில்லையெனவும் நேற்றை தினம் மாடுகளுக்கு தொண்டையடைப்பான நோய் என மருந்துவழங்குவதாகவும் இதனை முன்பே செய்திருந்தால் 700மாடுகளின் இறப்பினை தடுத்திருக்கமுடியும் எனவும் கால்நடை பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அரச கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் சில மருந்துகள் தனியார் நிலையங்களில் கொள்வனவு செய்யுமாறு பணிக்கப்பட்ட நிலையில் அதிக விலைகள் கொடுத்து அந்த மருந்துகளை பெற்று மாடுகளுக்கு வழங்கியபோதும் அவை பலனளிக்கவில்லையெனவும் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

வீடுகளில் வளர்க்கப்படும் மாடுகளுக்கு மட்டுமே காப்புறுதி செய்யப்படுவதாகவும் மேய்ச்சல் தரைகளில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு காப்புறுதி செய்யப்படாத காரணத்தினால் இழப்பீடுகளைப்பெற்றுக்கொள்ளமுடியாத நிலை காணப்படுவதாகவும் கால் நடை பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அரச கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஊடாக கால்நடைக்கான மருந்துகளைப்பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் என்பதுடன் உயிரிழந்த மாடுகளுக்கான நஸ்ட ஈடுகளைப்பெற்றுத்தர நடடிக்கையெடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

ஒரு மாடு சுமார் ஒன்றரை இலட்சம் ரூபாவுக்கு மேல் பெறுமதியானதாகவும் சுமார் 700 மாடுகள் இறந்த காரணத்தினால் கால்நடை வளர்ப்பாளர்கள் பாரிய நஸ்டத்தினை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தனர்.

இது தொடர்பிலான மகஜர் ஒன்றும் மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் நவேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டது.

Share12Tweet7Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

தலைப்பிறை தென்படவில்லை – வெள்ளிக்கிழமை நோன்பு ஆரம்பம்!
ஆன்மீகம்

தலைப்பிறை தென்படவில்லை – வெள்ளிக்கிழமை நோன்பு ஆரம்பம்!

2023-03-22
யாழ்.நாகர்கோவில் பகுதியில் 10 படகுகள் தீக்கிரை!
இலங்கை

யாழ்.நாகர்கோவில் பகுதியில் 10 படகுகள் தீக்கிரை!

2023-03-22
பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்தார் ரஞ்சித் சியம்பலபிட்டிய!
இலங்கை

330 மில்லியன் அமெரிக்க டொலர்களை இன்று வழங்குகின்றது ஐ.எம்.எப். !!

2023-03-22
எரிபொருள் விலை அதிகரிப்பு: தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவை மாற்றியமைக்க வேண்டும்- சஜித்
இலங்கை

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையை ஆய்வு செய்யாமல் ஏற்றுக்கொள்ள முடியாது – சஜித்

2023-03-22
தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் இதுவரையில் 90 பேரிடம் வாக்குமூலம் பதிவு!
இலங்கை

தினேஷ் ஷாப்டரின் மரணம் : விசாரணைகள் ஒத்திவைப்பு!

2023-03-22
இலங்கை கடற்றொழிலாளர்களின் பாதிப்புக்களை தமிழகம் புரிந்து கொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கிறது – டக்ளஸ்
இலங்கை

இலங்கை கடற்றொழிலாளர்களின் பாதிப்புக்களை தமிழகம் புரிந்து கொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கிறது – டக்ளஸ்

2023-03-22
Next Post
Private: சிறுவர்களை கேடயமாக பாவிப்பது பாரிய குற்றம் – ஜனாதிபதி

வடக்கில் சரணாலயம் அமைக்க பொருத்தமான காணியை அடையாளம் காணுங்கள் - ஜனாதிபதி பணிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
Dartford கரப்பந்தாட்டக் கழகம் 14ஆவது ஆண்டாக நடாத்திய போட்டித்தொடர் நிறைவு!

Dartford கரப்பந்தாட்டக் கழகம் 14ஆவது ஆண்டாக நடாத்திய போட்டித்தொடர் நிறைவு!

2023-03-06
வவுனியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக கண்டெடுப்பு!

வவுனியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக கண்டெடுப்பு!

2023-03-07
பொது போக்குவரத்து மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கு (தனி QR) குறியீடு அமுல்    

எரிபொருள் விலை குறைப்பு – அமைச்சர் அறிவிப்பு

2023-03-21
நெருக்கடிக்கு தீர்வாக மத்திய கிழக்கு நாடுகளின் உதவியை நாட அரசாங்கம் தீர்மானம்!

டொலரின் கொள்விலை மற்றும் விற்பனை விலைகளில் வீழ்ச்சி !

2023-03-21
அளவுக்கு அதிகமாக தங்க நகைகளை அணிந்து கொண்டு இலங்கைவர தடை !

தங்கத்தின் விலையில் இன்று மேலும் வீழ்ச்சி !

2023-03-07
தலைப்பிறை தென்படவில்லை – வெள்ளிக்கிழமை நோன்பு ஆரம்பம்!

தலைப்பிறை தென்படவில்லை – வெள்ளிக்கிழமை நோன்பு ஆரம்பம்!

2023-03-22
யாழ்.நாகர்கோவில் பகுதியில் 10 படகுகள் தீக்கிரை!

யாழ்.நாகர்கோவில் பகுதியில் 10 படகுகள் தீக்கிரை!

2023-03-22
பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்தார் ரஞ்சித் சியம்பலபிட்டிய!

330 மில்லியன் அமெரிக்க டொலர்களை இன்று வழங்குகின்றது ஐ.எம்.எப். !!

2023-03-22
எரிபொருள் விலை அதிகரிப்பு: தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவை மாற்றியமைக்க வேண்டும்- சஜித்

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையை ஆய்வு செய்யாமல் ஏற்றுக்கொள்ள முடியாது – சஜித்

2023-03-22
தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் இதுவரையில் 90 பேரிடம் வாக்குமூலம் பதிவு!

தினேஷ் ஷாப்டரின் மரணம் : விசாரணைகள் ஒத்திவைப்பு!

2023-03-22

Recent News

தலைப்பிறை தென்படவில்லை – வெள்ளிக்கிழமை நோன்பு ஆரம்பம்!

தலைப்பிறை தென்படவில்லை – வெள்ளிக்கிழமை நோன்பு ஆரம்பம்!

2023-03-22
யாழ்.நாகர்கோவில் பகுதியில் 10 படகுகள் தீக்கிரை!

யாழ்.நாகர்கோவில் பகுதியில் 10 படகுகள் தீக்கிரை!

2023-03-22
பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்தார் ரஞ்சித் சியம்பலபிட்டிய!

330 மில்லியன் அமெரிக்க டொலர்களை இன்று வழங்குகின்றது ஐ.எம்.எப். !!

2023-03-22
எரிபொருள் விலை அதிகரிப்பு: தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவை மாற்றியமைக்க வேண்டும்- சஜித்

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையை ஆய்வு செய்யாமல் ஏற்றுக்கொள்ள முடியாது – சஜித்

2023-03-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.