ரஷ்யாவின் தாக்குதல்கள் கிழக்கு உக்ரைனின் பாக்முட் நகரத்தை எரிந்த இடிபாடுகள் கொண்ட நகரமாக மாற்றியுள்ளதாக ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல பகுதிகளில் ஏவுகணை, ரொக்கெட் மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக பல பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும் உக்ரைனின் இராணுவம் தெரிவித்துள்ளது.
கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மாகாணங்களில் உள்ள பல முக்கிய நகரங்களில் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் உக்ரைன் ஜனாதிபதி கூறியுள்ளார்.
தெற்கு உக்ரேனிய நகரமான ஒடேசாவில் மேற்கொள்ளப்பட்ட ட்ரோன் தாக்குதல்களினால் 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மின்சாரம் இல்லாமல் தவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை இடையே உக்ரைன் முழுவதும் சுமார் 20 வான் தாக்குதல்கள் மற்றும் 60 க்கும் மேற்பட்ட ரொக்கெட் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த தாக்குதல்களினால் கெர்சன் பகுதியில் குடியிருப்புகள், மருத்துவமனை, கடைகள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.