• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தமிழ் தேசியத்துக்குள் முஸ்லிம்களையும் உள்வாங்க முனையும் தமிழ் தலைமைகள் – நஸீர் அஹமட் குற்றச்சாட்டு!

தமிழ் தேசியத்துக்குள் முஸ்லிம்களையும் உள்வாங்க முனையும் தமிழ் தலைமைகள் – நஸீர் அஹமட் குற்றச்சாட்டு!

shagan by shagan
2023/01/24
in இலங்கை, பிரதான செய்திகள்
71 0
A A
0
39
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் முயற்சிகள் மும்முரமாகியுள்ளதால், இது குறித்து, முஸ்லிம் தலைமைகள் கூடிய கவனம் எடுக்க வேணடும் என சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

இத்திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்படுமானால், முஸ்லிம்கள் சார்பில் மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய பொறுப்பிலிருந்து முஸ்லிம் தலைமைகள் விலகி நிற்கக்கூடாது என்றும் அமைச்சர் நஸீர் அஹமட் மேலும் தெரிவித்தார்.

இது பற்றி அவர் (செவ்வாய்கிழமை) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் “இலங்கைத் தமிழர்களின் அரசியல் தீர்வு குறித்து அண்மைக்காலமாக, இந்தியா அதிக அக்கறை செலுத்தி வருகிறது. புரையோடிப் போயுள்ள நாட்டின் தேசிய அரசியல் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் வகிபாகத்திலிருந்து இந்தியா ஒதுங்கிவிடாது. இந்த வகையில்தான், இந்திய வௌியுறவு அமைச்சரின் வருகையும் அமைந்துள்ளது.

வடக்கும் கிழக்கும் தமிழர்களின் மாகாணம். “இணைக்கப்பட்ட வட,கிழக்கில் காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்கல், சமஷ்டிக்கு நிகரான தீர்வுக்கு வித்திடல்” போன்ற நிலைப்பாட்டிலே இந்தியாவுள்ளது. இந்தியாவின் இந்த நிலைப்பாடுகள், முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தும் அச்சம் குறித்து இந்திய அரசாங்கத்தை தெளிவுபடுத்துவது முஸ்லிம் தலைமைகளின் பொறுப்பு.

தமிழரின் தாயகம் என்ற வார்த்தைப் பிரயோகம் தமிழ் பேசும் முஸ்லிம்களையும் உள்ளடக்கியதா? அவ்வாறானால், இம்மாகாணங்களிலுள்ள முஸ்லிம்களின் காணிகளுக்கு உத்தரவாதம் என்ன?கடந்த காலங்களில் பறிபோன முஸ்லிம்களின் காணிகளை மீளப் பெறுவது எப்படி? இவற்றை மீள ஒப்படைப்பது யார்? மட்டக்களப்பு மாவட்டத்தில்,அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிளின் பலவந்தத்தால் பறிக்கப்பட்ட முஸ்லிம்களின் காணிகளை மீள ஒப்படைப்பது யார்?

எல்லைகளைச் சுருக்கி ஒரு குறுகிய நிலப்பரப்புக்குள் முஸ்லிம்களை முடக்கியுள்ள இன ஒடுக்குமுறைகள், இனியும் நடைபெறாது என்பதை எந்தத் தரப்பு உத்தரவாதப்படுத்துவது, விரட்டப்பட்ட முஸ்லிம்களை மீளக் குடியேற்றுவது எப்போது,அழிக்கப்ப ட்ட முஸ்லிம்களின் சொத்துக்களுக்கு பரிகாரமாக முன்வைக்கப்படும் முன்மொழிவுகள் என்ன? தமிழ் பயங்கரவாதத்தால் பறிக்கப்பட்ட காணிகளைப் பெறுவது எப்படி
இதுபோன்ற சந்தேகங்களை களைந்தே,அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும்.

தீர்வைக் குலைப்பதோ? அல்லது இழுத்தடிப்பதோ முஸ்லிம்களின் நோக்கம் இல்லை. கடந்த காலங்களில் இந்த ஒப்பந்தம் வடக்கு,கிழக்கு மாகாண முஸ்லிம்களை கைவிட்டிருந்ததுடன், ஓரங்கட்டியும் இருந்தது.

முஸ்லிம்களுக்கு இந்த ஒப்பந்தத்தில்,சந்தேகம் ஏற்பட இதுவே காரணம். எனவே, நாட்டின் நிரந்தரத் தீர்வுக்கு 13 ஐ, முழுமையாக அமுல்படுத்துவதுதான் தீர்வாக அமைந்தால், அதையும் ஏற்க முஸ்லிம்கள் தயார்தான்.ஆனால், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அநீதிக்கு நியாயந்தருவது, இதை அமுல்படுத்துகையில் முஸ்லிம்களுக்கு ஏற்படும் தீங்குகளை நீக்குவது, மற்றும் தமிழ் மொழித் தேசியத்துக்குள் முஸ்லிம்களையும் உள்வாங்குவதா கக்கூறி,இடையில் காலைவாரும் சூழ்ச்சிகளை நிறுத்துவது உள்ளிட்ட ஏற்பாடுகளை இந்தியா முன்னெடுக்க வேண்டும்.

இது குறித்து இந்தியாவுக்குத் தெளிவுபடுத்த முஸ்லிம் தலைமைகள் முன்வருவது அவசியம். தமிழ் தேசியத்துக்குள் முஸ்லிம்களையும் உள்வாங்க முனையும் தமிழ் தலைமைகள் இதுபற்றி மனந்திறந்து முஸ்லிம்களுடன் பேசாதுள்ளதுதான் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

எனவே,இந்தியாவோ அல்லது வேறெந்த தரப்பினரதோ முயற்சிகளால் கொண்டுவரப்படும் தீர்வுகள் முஸ்லிம்களை திருப்திப்படு த்தாது அமைந்தால்,அது நிரந்தரத் தீர்வாக அமையாதென்பதை உறுதியுடன் கூறுவதாகவும் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வாக்காளர் ஒருவருக்கு 15 ரூபாய் மட்டுமே செலவழிக்க முடியும் !

Next Post

இலங்கைக்கு கடன் நீடிப்பு – சீன வங்கி பச்சைக்கொடி !

Related Posts

கபில சந்திரசேனவுக்கு விளக்கமறியல் உத்தரவு!
BREAKING

கபில சந்திரசேனவுக்கு விளக்கமறியல் உத்தரவு!

2026-03-19
எரிபொருள் விநியோகத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!
இலங்கை

எரிபொருள் விநியோகத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

2026-03-19
எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் சபாநாயகரிடம் கையளிப்பு!
இலங்கை

எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் சபாநாயகரிடம் கையளிப்பு!

2026-03-19
எரிபொருள் QR பிரச்சினைக்குள் நாளைக்குள் தீர்வு – அரசாங்கம்!
இலங்கை

எரிபொருள் QR பிரச்சினைக்குள் நாளைக்குள் தீர்வு – அரசாங்கம்!

2026-03-19
ஈரான் போருக்காக 200 பில்லியன் டொல‍ரை கோரும் பென்டகன்!
அமொிக்கா

ஈரான் போருக்காக 200 பில்லியன் டொல‍ரை கோரும் பென்டகன்!

2026-03-19
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!
இலங்கை

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!

2026-03-19
Next Post
இலங்கைக்கு கடன் நீடிப்பு – சீன வங்கி பச்சைக்கொடி !

இலங்கைக்கு கடன் நீடிப்பு - சீன வங்கி பச்சைக்கொடி !

எரிசக்திக் கட்டணங்கள்- கடன் வட்டிச் செலவு எதிரொலி: அரசாங்கக் கடன்கள் புதிய உச்சம்!

எரிசக்திக் கட்டணங்கள்- கடன் வட்டிச் செலவு எதிரொலி: அரசாங்கக் கடன்கள் புதிய உச்சம்!

ஆளில்லா போர் விமானங்களுக்கான உலகளாவிய சந்தையில் சீனா ஆதிக்கம்!

ஆளில்லா போர் விமானங்களுக்கான உலகளாவிய சந்தையில் சீனா ஆதிக்கம்!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01

கபில சந்திரசேனவுக்கு விளக்கமறியல் உத்தரவு!

0
வேல்ஸில் பெண் ஓட்டப்பந்தய வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பெண் பொலிஸார் புதிய திட்டம்!

வேல்ஸில் பெண் ஓட்டப்பந்தய வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பெண் பொலிஸார் புதிய திட்டம்!

0
விஸ்பெக் ஆற்றுக்குள் பாய்ந்த கார்: 16 வயது சிறுமி உயிரிழப்பு – ஒரு சிறுவன் மாயம் – மூவர் காயங்களுடன் மீட்பு!

விஸ்பெக் ஆற்றுக்குள் பாய்ந்த கார்: 16 வயது சிறுமி உயிரிழப்பு – ஒரு சிறுவன் மாயம் – மூவர் காயங்களுடன் மீட்பு!

0
லண்டன் யூத சமூகத்தை உளவு பார்த்த விவகாரம்: இரண்டு ஈரானியர்கள் மீது குற்றச்சாட்டு!

லண்டன் யூத சமூகத்தை உளவு பார்த்த விவகாரம்: இரண்டு ஈரானியர்கள் மீது குற்றச்சாட்டு!

0
எரிபொருள் விநியோகத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

எரிபொருள் விநியோகத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

0

கபில சந்திரசேனவுக்கு விளக்கமறியல் உத்தரவு!

2026-03-19
வேல்ஸில் பெண் ஓட்டப்பந்தய வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பெண் பொலிஸார் புதிய திட்டம்!

வேல்ஸில் பெண் ஓட்டப்பந்தய வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பெண் பொலிஸார் புதிய திட்டம்!

2026-03-19
விஸ்பெக் ஆற்றுக்குள் பாய்ந்த கார்: 16 வயது சிறுமி உயிரிழப்பு – ஒரு சிறுவன் மாயம் – மூவர் காயங்களுடன் மீட்பு!

விஸ்பெக் ஆற்றுக்குள் பாய்ந்த கார்: 16 வயது சிறுமி உயிரிழப்பு – ஒரு சிறுவன் மாயம் – மூவர் காயங்களுடன் மீட்பு!

2026-03-19
லண்டன் யூத சமூகத்தை உளவு பார்த்த விவகாரம்: இரண்டு ஈரானியர்கள் மீது குற்றச்சாட்டு!

லண்டன் யூத சமூகத்தை உளவு பார்த்த விவகாரம்: இரண்டு ஈரானியர்கள் மீது குற்றச்சாட்டு!

2026-03-19
எரிபொருள் விநியோகத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

எரிபொருள் விநியோகத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

2026-03-19

Recent News

கபில சந்திரசேனவுக்கு விளக்கமறியல் உத்தரவு!

2026-03-19
வேல்ஸில் பெண் ஓட்டப்பந்தய வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பெண் பொலிஸார் புதிய திட்டம்!

வேல்ஸில் பெண் ஓட்டப்பந்தய வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பெண் பொலிஸார் புதிய திட்டம்!

2026-03-19
விஸ்பெக் ஆற்றுக்குள் பாய்ந்த கார்: 16 வயது சிறுமி உயிரிழப்பு – ஒரு சிறுவன் மாயம் – மூவர் காயங்களுடன் மீட்பு!

விஸ்பெக் ஆற்றுக்குள் பாய்ந்த கார்: 16 வயது சிறுமி உயிரிழப்பு – ஒரு சிறுவன் மாயம் – மூவர் காயங்களுடன் மீட்பு!

2026-03-19
லண்டன் யூத சமூகத்தை உளவு பார்த்த விவகாரம்: இரண்டு ஈரானியர்கள் மீது குற்றச்சாட்டு!

லண்டன் யூத சமூகத்தை உளவு பார்த்த விவகாரம்: இரண்டு ஈரானியர்கள் மீது குற்றச்சாட்டு!

2026-03-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.