காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கத்திற்கு ஆதரவாக நீதிக்கான சீக்கியர்களுடன் இணைந்து பணியாற்றிய பிரபல சீக்கிய பாடகர் ஜஸ்ஸி லைல்பூரியா, தற்போது தனது முன்னாள் கூட்டாளிகளின் ஆதரவின் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.
பாகிஸ்தானின் லாகூரைச் சேர்ந்த லைல்பூரியா, உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு லாகூரில் சிகிச்சை பெற்று வருகிறார்.
துரதிர்ஷ்டவசமாக, அவரது மருத்துவச் செலவு அதிகரித்ததுள்ளமையால் உதவிகளின்றி அவர் தனது கட்டணங்களைச் செலுத்த சிரமப்படுகின்றார்.
லைல்புரா முன்பு ஆதரித்த காலிஸ்தான் சார்பு நிறுவனங்களின் ஆதரவு தற்போது இல்லாதது, காலிஸ்தானி கூறுகளின் உண்மையான தன்மையை கவனத்தில் கொள்ளச் செய்துள்ளது.
சீக்கியர்களின் உரிமைகளுக்கான தன்னலமற்ற போராட்டத்திற்கு அப்பாற்பட்டு, காலிஸ்தான் இயக்கம் சுயநலம் மற்றும் தனிப்பட்ட அதிகாரத்தால் தூண்டப்பட்டமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
லைல்பூரியாவின் நெருங்கிய உறவுகள் மற்றும் இயக்கத்திற்கான பங்களிப்புகள் இருந்தபோதிலும் அவர் கைவிடப்பட்டது இந்த உண்மைக்கு ஒரு தெளிவான சான்றாகும்.
பிரிவினைவாத இயக்கத்தில் உள்ள முக்கிய குழு அவருக்கு தேவைப்படும் நேரத்தில் அவருக்கு உதவ மறுத்துவிட்டது, இது சீக்கிய உரிமைகளுக்காகப் போராடும் அவர்களின் பொது உருவத்துடன் முற்றிலும் மாறுபட்டது.
லைல்பூரியாவின் நிலைமை காலிஸ்தான் பிரிவினைவாதிகளைப் பற்றிய ஒரு எச்சரிக்கைக் கதையாக இருப்பதோடு, அதன் தலைவர்கள் பலரின் சுயநல நிகழ்ச்சி நிரலை வெளிச்சம் போட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.