• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
வரலாறு படைக்குமா சந்திரயான்-3?

வரலாறு படைக்குமா சந்திரயான்-3?

Ilango Bharathy by Ilango Bharathy
2023/08/23
in இந்தியா, தொழில்நுட்பம், பிரதான செய்திகள், முக்கிய செய்திகள்
69 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

உலகளவில்  பலகோடிமக்களின் எதிர்பார்ப்பும், வேண்டுதல்களும்  தற்போது இந்தியாவின் சந்திரயான் விண்கலத்தின் மீதே திரும்பியுள்ளன.

குறிப்பாக  கடந்த 11 ஆம் திகதி விண்ணில் ஏவப்பட்ட ரஷ்யாவின் ‘லூனா-25’ விண்கலம் அண்மையில் நிலவின் மேற்பரப்பில் மோதி தோல்வியடைந்த நிலையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றியை உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன.

காரணம் அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் நிலவுக்கு விண்கலத்தை அனுப்பி பல்வேறு ஆய்வுகளை முன்னெடுத்திருந்தாலும், அங்கு முதன் முதலாக தண்ணீரின் மூலக்கூறுகள் இருப்பதைக் கண்டறிந்தது இந்தியாவின்  சந்திரயான்-1 விண்கலமே.

அதன் தொடா்ச்சியாகவே கடந்த 2019 ஆம் ஆண்டு   உலகின்  வேறு எந்த நாடுமே கால் பதிக்காத நிலவின் தென்துருவத்தை தெரிவு செய்து அங்கு தனது ஆய்வினை நடத்த சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் ஏவியது இஸ்ரோ.

எனினும் எதிா்பாராத விதமாக லேண்டா் வேகமாகத் தரையிறங்கியதால் அதன் தகவல் தொடா்பு துண்டிக்கப்பட்டு அம்முயற்சி தேல்வியைத் தழுவியது.

எவ்வாறு இருப்பினும் தனது முயற்சிகளில் இருந்து சற்றும் தளராத இஸ்ரோ, பல்வேறு மாற்றங்களுடன்  சுமார்  615 கோடி ரூபாய் செலவில் ‘சந்திரயான்-3‘ என்ற  விண்கலத்தை  வடிவமைத்து  கடந்த ஜுலை மாதம் 14 ஆம் திகதி  எல்விஎம்-3 ரொக்கேட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவியது.

இந்நிலையில் 40 நாட்கள் பயணத்திற்குப்  பின்னர் சந்திரயான்-3 இல்  இருந்து கடந்த 14 ஆம் திகதி  பிரிந்து சென்ற விக்ரம் லேண்டர் இன்று புதன்கிழமை மாலை 6.04 மணியளவில் சொஃப்ட் லேண்டிங் முறையில் அதாவது மெதுவாக நிலவில் தரையிறங்க உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

அதன்படி நிலவுக்கு அருகே 25 கிலோ மீற்றர்  உயரத்துக்கு லேண்டா் வந்ததும் எதிா்விசை நடைமுறையைப் பயன்படுத்தி அதன் வேகம் குறைக்கப்படும் எனவும், இதன்மூலம் நிலவின் தரைப் பகுதிக்கும், லேண்டருக்குமான உயரமும் படிப்படியாக குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ”நிலவின் தரையில் இருந்து 150 மீற்றர்  உயரத்துக்கு லேண்டா் கொண்டுவரப்பட்டதும் சில விநாடிகள் அந்த நிலையிலேயே நிறுத்தி வைக்கப்படும் எனவும் அதைத் தொடா்ந்து, அதிலுள்ள சென்சாா்கள் மூலம் தரையிறங்க சரியான சமதள பரப்புடைய இடம் தெரிவு  செய்யப்படும் எனவும் அதன்பின் லேண்டரின் வேகம் பூஜ்ஜிய நிலையை எட்டியதும் மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவப் பகுதிக்கு அருகே மிக மெதுவாக லேண்டா் தரையிறங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து  3 மணி நேரத்துக்கு பின்னா் அதில் உள்ள பிரக்யான் என்ற  ரோவா் சாதனம் வெளியேறி 14 நாட்கள்   அப்பகுதியில் ஆய்வுகளை  மேற்கொள்ளும் எனவும் இதற்காக லேண்டரில் 4 ஆய்வுக் கருவிகளும், ரோவரில் 2 ஆய்வுக் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறு இருப்பினும்  நிலவில் தரையிறங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னர்  விக்ரம் லேண்டரின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்படும் என்றும் அதனடிப்படையில் சாதகமான சூழல் இல்லாவிட்டால் வரும் 27ஆம் திகதி தரையிறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இஸ்ரோவின் அகமதாபாத் மைய இயக்குநர் தேசாய் தெரிவித்துள்ளமை இந்திய மக்களிடையே சற்று பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை இத்திட்டம் வெற்றிபெறவேண்டுமென கோடிக்கணக்கான இந்திய மக்கள்  இன,மத மொழி வேறுபாடுகளின்றி பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே  பல்வேறு தடைகளுக்குப் பின்னர் இந்தியா படைக்கவுள்ள இச்சாதனை முயற்சி வெற்றிபெறவேண்டுமென நாமும் வாழ்த்துவோம்.

(இளங்கோ பாரதி)

Related

Tags: Chandrayaan-3INDIAISROசந்திரயான் 3
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்த உயர்ஸ்தானிகர்கள்!

Next Post

இலங்கையில் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

Related Posts

யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!
இலங்கை

மூன்றாம் கட்ட அகழ்வுக்காக செம்மணி மனித புதைகுழி பகுதி சுத்தம் செய்யும் பணி!

2026-04-27
ஒட்டாவா சிசுக்கொலை வழக்கு: தந்தை குற்றவாளியாக அறிவிப்பு – தாயின் வழக்கில் இழுபறி!
உலகம்

ஒட்டாவா சிசுக்கொலை வழக்கு: தந்தை குற்றவாளியாக அறிவிப்பு – தாயின் வழக்கில் இழுபறி!

2026-04-27
கஹவத்தை நீலகாமம் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை!
இலங்கை

கஹவத்தை நீலகாமம் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை!

2026-04-27
கொழும்பில் நாளை ‘Walk for Peace’ பேரணி: விசேட போக்குவரத்துத் திட்டம் அறிவிப்பு!
இலங்கை

கொழும்பில் நாளை ‘Walk for Peace’ பேரணி: விசேட போக்குவரத்துத் திட்டம் அறிவிப்பு!

2026-04-27
மதுபோதையில் வாகனம் செலுத்திய இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினரின் சாரதி அனுமதிப் பத்திரம் இரத்து!
இலங்கை

மதுபோதையில் வாகனம் செலுத்திய இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினரின் சாரதி அனுமதிப் பத்திரம் இரத்து!

2026-04-27
இரத்தினபுரி இளைஞர்களின் ஜனநாயக எழுச்சிக்கு வேலுகுமார் முழு ஆதரவு!
இலங்கை

இரத்தினபுரி இளைஞர்களின் ஜனநாயக எழுச்சிக்கு வேலுகுமார் முழு ஆதரவு!

2026-04-27
Next Post
இலங்கையில் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

இலங்கையில் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

வர்த்தக நிலையங்களின் கூரைகளைப் பந்தாடிய  மழை!

வர்த்தக நிலையங்களின் கூரைகளைப் பந்தாடிய  மழை!

யாழில் வழிப்பறியில் ஈடுபட்ட ஐவர் கைது! 

யாழில் வழிப்பறியில் ஈடுபட்ட ஐவர் கைது! 

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

மூன்றாம் கட்ட அகழ்வுக்காக செம்மணி மனித புதைகுழி பகுதி சுத்தம் செய்யும் பனி!

0
ஒட்டாவா சிசுக்கொலை வழக்கு: தந்தை குற்றவாளியாக அறிவிப்பு – தாயின் வழக்கில் இழுபறி!

ஒட்டாவா சிசுக்கொலை வழக்கு: தந்தை குற்றவாளியாக அறிவிப்பு – தாயின் வழக்கில் இழுபறி!

0
கஹவத்தை நீலகாமம் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை!

கஹவத்தை நீலகாமம் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை!

0
ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு விளக்கமறியல்!

0
கொழும்பில் நாளை ‘Walk for Peace’ பேரணி: விசேட போக்குவரத்துத் திட்டம் அறிவிப்பு!

கொழும்பில் நாளை ‘Walk for Peace’ பேரணி: விசேட போக்குவரத்துத் திட்டம் அறிவிப்பு!

0
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

மூன்றாம் கட்ட அகழ்வுக்காக செம்மணி மனித புதைகுழி பகுதி சுத்தம் செய்யும் பனி!

2026-04-27
ஒட்டாவா சிசுக்கொலை வழக்கு: தந்தை குற்றவாளியாக அறிவிப்பு – தாயின் வழக்கில் இழுபறி!

ஒட்டாவா சிசுக்கொலை வழக்கு: தந்தை குற்றவாளியாக அறிவிப்பு – தாயின் வழக்கில் இழுபறி!

2026-04-27
கஹவத்தை நீலகாமம் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை!

கஹவத்தை நீலகாமம் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை!

2026-04-27
ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு விளக்கமறியல்!

2026-04-27
கொழும்பில் நாளை ‘Walk for Peace’ பேரணி: விசேட போக்குவரத்துத் திட்டம் அறிவிப்பு!

கொழும்பில் நாளை ‘Walk for Peace’ பேரணி: விசேட போக்குவரத்துத் திட்டம் அறிவிப்பு!

2026-04-27

Recent News

யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

மூன்றாம் கட்ட அகழ்வுக்காக செம்மணி மனித புதைகுழி பகுதி சுத்தம் செய்யும் பனி!

2026-04-27
ஒட்டாவா சிசுக்கொலை வழக்கு: தந்தை குற்றவாளியாக அறிவிப்பு – தாயின் வழக்கில் இழுபறி!

ஒட்டாவா சிசுக்கொலை வழக்கு: தந்தை குற்றவாளியாக அறிவிப்பு – தாயின் வழக்கில் இழுபறி!

2026-04-27
கஹவத்தை நீலகாமம் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை!

கஹவத்தை நீலகாமம் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை!

2026-04-27
ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு விளக்கமறியல்!

2026-04-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.