சிறுவர் உரிமைகளை பாதுகாக்க கோரி முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரிக்கு முன்பாக இன்று காலை விழிப்புணர்வு நடைபவணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு சிறுவர்களுடைய உரிமைகளை பாதுகாக்க கோரி இந்த நடை பவணி முன்னெடுக்கப்பட்டது.
முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரிக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு நடைபவனியாக சென்று தண்ணிரூற்று பொதுச்சந்தைக்கு முன்பாக நிறைவு பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அத்துடன் சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்யாதீர், சிறுவர் துஷ்பிரயோகத்தை கண்டால் 1929 க்கு அழைப்போம், மேதையை அழிக்கும் போதை, சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு மரண தண்டனை கொடு, சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்துவோம் வளமான எதிர்காலத்தை உருவாக்குவோம், போன்ற விழிப்புணர்வு பதாதைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.