இலங்கை கிரிக்கெட் சபைக்கு அருகில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக இலங்கை கிரிக்கெட் அணி தோல்வியை தழுவியுள்ள நிலையில் இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன.
இந்த நிலையில் போராட்டக்காரர்களினால் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு கடிதமொன்றும் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.