பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெங்கு தடுப்பு உதவியாளர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
நிரந்தர நியமனம் மற்றும் நிலுவை கொடுப்பனவு வழங்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு தொழில்சார் சிக்கல்களுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமெனக் கோரியே குறித்த பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது பல கோரிக்கைகள் அடங்கிய மகஜரர் ஒன்றையும் யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் டெங்கு தடுப்பு உதவியாளர்கள் கையளித்துள்ளனர்.















