• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
போர்களமாய் காட்சியளிக்கும் முற்றவெளி மைதானம்: 6 பேர் கைது : 3 பேர் வைத்தியசாலையில் அனுமதி

இதுவல்ல யாழ் மக்களின் அடையாளம் : அங்கஜன் ராமநாதன் ஆதங்கம்

Kavipriya S by Kavipriya S
2024/02/10
in இலங்கை, முக்கிய செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
69 1
A A
0
30
SHARES
995
VIEWS
Share on FacebookShare on Twitter
நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சி குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் முகநூல் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“நேற்றைய நாளில் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நடைபெற்ற Hariharan Live in Concert and Star Night தொடர்பாக கலவையான விமர்சனங்களை இலங்கையிலும் இந்தியாவிலும் வெளிநாடுகளில் இருந்தும் அவதானிக்க முடிகிறது.
யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சிகள் நடாத்தப்படுவதும், அதனூடாக முதலீடுகள் கொண்டுவரப்படுவதும் வரவேற்கப்பட வேண்டியதாக இருந்தாலும், அந்நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும்போது கவனிக்க வேண்டிய விடயங்களில் நெகிழ்ச்சித்தன்மை இருக்க கூடாது.
நேற்றைய நிகழ்வில் இடம்பெற்ற அசாதாரண நிலை என்பது முறையான திட்டமிடல் செய்யப்பட்டிருந்தால் கட்டுப்படுத்தக்கூடியதாகவே பலர் குறிப்பிடுகிறார்கள்.
நிகழ்ச்சி குறித்த அறிவிப்புகள், நுழைவுச்சீட்டுகளினால் ஏற்பட்ட குழப்பங்கள், பங்கேற்கும் கலைஞர்களில் இறுதி நேரத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள், மைதான ஏற்பாடுகள், பாதுகாப்பு சார் குறைபாடுகள் என பல்வேறு சர்ச்சைகள் நேற்றைய குழப்பத்தின் காரணிகளாக சுட்டிக்காட்டப்படுகின்றன.
மறுபக்கத்தில் நிகழ்வை பார்வையிடச் சென்ற மக்களை தரக்குறைவாக சித்தரிக்கும் வகையிலும் சிலர் விமர்சிக்கிறார்கள். அவர்களில் சிலர் செய்த பிழைகளை ஒட்டுமொத்த யாழ்ப்பாண மக்கள் மீது திருப்புவதென்பது திட்டமிட்ட அரசியலாகவே தென்படுகிறது.
தவறிழைத்த மக்களை நான் கண்டிப்பதோடு, மண்ணிற்கு வருகை தந்திருக்கும் விருந்தினர்களை சங்கடப்படுத்தாமல் பார்த்துக்கொள்வதும் எமது மரபுசார் பண்பாடு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறேன்.
ஆக்ரோசமான மனநிலையில் இருக்கும் மக்களை கையாள்வது என்பது தனித்துவமான ஆளுமைத்திறன். அதிலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் முற்பதிவு செய்துள்ளார்கள் எனத்தெரிந்திருந்த போது அதற்கான ஏற்பாடுகள் மிகக்கச்சிதமாக செய்யப்பட்டிக்க வேண்டும்.
யாழ்ப்பாண மாநகரசபை, பொலீசார் உள்ளிட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அனைவரும் கூடுதல் பொறுப்போடு நடந்திருக்க வேண்டும், அவர்களுக்கான சரியான தகவல்களை ஏற்பாட்டாளர்கள் வழங்குவதை உறுதிப்படுத்தியிருக்க வேண்டும்.
ரசிகர்களை கட்டுப்படுத்தும் பணிகளில் மாணவர்கள் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக அறிந்துகொண்டேன். இத்தகைய பணிகளில் முன் அனுபவம் இல்லாத மாணவர்களைக் கொண்டு பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கையாள எடுக்கப்பட்ட முடிவு என்பது மிகவும் ஆச்சரியமானதாகவும் தவறான முன்னுதாரணமாகவும் அமைகிறது.
ஏற்பாடுகளில் செய்யப்படும் தவறுகள் பெரு நிகழ்ச்சியொன்றின் முடிவை முற்றிலுமாக மாற்றிவிடும் என்பதற்கு நேற்றைய இசைநிகழ்ச்சி ஓர் உதாரணமாகி விட்டது என்பது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
அத்தோடு, நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் சார்பில் ஊடகங்களில் வெளியிடப்பட்ட கருத்துகள், குறிப்பாக “யாழ்ப்பாணம் வர யாருக்கும் விருப்பமில்லை. நாம் சமாளித்து வர வைத்துள்ளோம்…” உள்ளிட்ட கருத்துகளின் தாக்கமும் நேற்றிரவு நடந்த நிகழ்வில் தாக்கத்தை செலுத்தியிருக்க வாய்ப்புகள் உள்ளன.
அவர்கள் சொல்ல வந்த கருத்து வேறாக இருக்கலாம், பயன்படுத்திய வார்த்தைகள் மற்றும் தொனிகள் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். யாழ்ப்பாணத்துக்கு நல்ல விடயங்களை செய்ய வேண்டும் என்ற பெரு விருப்பம் கொண்டுள்ள சகோதரர் இந்திரன் பத்மநாதன் இவ்விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
அதேவேளை, தென்னிந்திய கலைஞர்கள் மற்றும் ஊடகங்கள் நேற்றைய நிகழ்வுகளை வைத்து யாழ்ப்பாண மக்களை பற்றிய தவறான அபிப்பிராயங்களை கட்டமைக்க முன்பாக நிகழ்வின் ஏற்பாட்டாளர்களால் ஊடக சந்திப்பொன்று நடாத்தப்பட்டு விளக்கம் கொடுக்க வேண்டியதும் அவசியமாகும். இத்தகைய இசை நிகழ்வுகள் எதிர்காலத்தில் இடம்பெற இத்தகைய பொறுப்புக்கூறல்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
யாழ்ப்பாணத்தையும் அதன் மக்களையும் தவறானவர்களாக சித்தரிக்கும் வாய்ப்புகளை யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என்ற அடிப்படையில் எவரும் மேற்கொள்ள கூடாது என்பதை கேட்டுக்கொள்வதோடு, எமது தவறுகளை இனங்கண்டு சுய ஒழுக்கத்தை மேம்படுத்த வேண்டியதும் அவசியம் என்பதையும் வலியுறுத்துகின்றேன்.
அதேவேளை இதனைப்போல பெருமளவில் மக்கள் ஒன்றுகூடும், இந்திரவிழா, வல்வெட்டித்துறை பட்டத்திருவிழா, ஆலய விழாக்கள் உள்ளிட்டவற்றில் கண்ணியத்தோடு செயற்பட்டவர்கள் எம்மக்கள் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
ஆகவே நேற்றைய நாளில் இடம்பெற்ற தவறுகளில் இருந்து கற்றுக்கொண்டு எதிர்காலத்தில் இன்னும் சிறப்பான வகையில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என துறைசார்ந்தவர்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்.
இதுவல்ல யாழ்ப்பாண மக்களின் அடையாளம்” – என்றுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

விமானப்படையின் 73 வது ஆண்டு நிறை உதைபந்தாட்ட சங்கங்களிற்கிடையிலான உதைபந்தாட்பட்ட சுற்றுப்போட்டிகள் இன்று ஆரம்பம்

Next Post

மரம் முறிந்து வீழ்ந்ததில் மேலும் ஒரு சிறுவன் உயிரிழப்பு

Related Posts

மலர்ந்த புத்தாண்டு அனைவரினதும் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வெற்றிகரமான ஆண்டாக அமையட்டும் – ஜனாதிபதி
இலங்கை

ஜனாதிபதியின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி!

2026-01-15
நோர்வூட் பிரதேச சபையின் உறுப்பினர்  கணேஷன் இளையராஜா இந்தியா விஜயம்
இலங்கை

நோர்வூட் பிரதேச சபையின் உறுப்பினர் கணேஷன் இளையராஜா இந்தியா விஜயம்

2026-01-15
ஜனாதிபதியின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி!
இலங்கை

ஜனாதிபதியின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி!

2026-01-15
இந்த ஆண்டிற்கான கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்தல் தொடர்பில் விசேட அறிவித்தல்
இலங்கை

இந்த ஆண்டிற்கான கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்தல் தொடர்பில் விசேட அறிவித்தல்

2026-01-14
இலங்கை

திருகோணமலை புத்தர் சிலை வழக்கு; பலாங்கொடை கஸ்ஸப தேரர் உட்பட 04 பிக்குகளுக்கு விளக்கமறியல்!

2026-01-14
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்தது
கொழும்பு

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்தது

2026-01-14
Next Post
மரம் முறிந்து வீழ்ந்ததில் மேலும் ஒரு சிறுவன் உயிரிழப்பு

மரம் முறிந்து வீழ்ந்ததில் மேலும் ஒரு சிறுவன் உயிரிழப்பு

7 மில்லியன் முட்டைகள் இறக்குமதி

திங்கள் முதல் அதிகரிக்கவுள்ள முட்டை விலை

யாழை உலுக்கிய இளம் பெண்ணின் மரணம்

யாழை உலுக்கிய இளம் பெண்ணின் மரணம்

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
மலர்ந்த புத்தாண்டு அனைவரினதும் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வெற்றிகரமான ஆண்டாக அமையட்டும் – ஜனாதிபதி

ஜனாதிபதியின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி!

0
நோர்வூட் பிரதேச சபையின் உறுப்பினர்  கணேஷன் இளையராஜா இந்தியா விஜயம்

நோர்வூட் பிரதேச சபையின் உறுப்பினர் கணேஷன் இளையராஜா இந்தியா விஜயம்

0
தமிழர்களின் முதன்மையான பண்டிகையான தைப்பொங்கல் விழா இன்று

தமிழர்களின் முதன்மையான பண்டிகையான தைப்பொங்கல் விழா இன்று

0
ஜனாதிபதியின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி!

ஜனாதிபதியின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி!

0
இந்த ஆண்டிற்கான கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்தல் தொடர்பில் விசேட அறிவித்தல்

இந்த ஆண்டிற்கான கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்தல் தொடர்பில் விசேட அறிவித்தல்

0
மலர்ந்த புத்தாண்டு அனைவரினதும் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வெற்றிகரமான ஆண்டாக அமையட்டும் – ஜனாதிபதி

ஜனாதிபதியின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி!

2026-01-15
நோர்வூட் பிரதேச சபையின் உறுப்பினர்  கணேஷன் இளையராஜா இந்தியா விஜயம்

நோர்வூட் பிரதேச சபையின் உறுப்பினர் கணேஷன் இளையராஜா இந்தியா விஜயம்

2026-01-15
தமிழர்களின் முதன்மையான பண்டிகையான தைப்பொங்கல் விழா இன்று

தமிழர்களின் முதன்மையான பண்டிகையான தைப்பொங்கல் விழா இன்று

2026-01-15
ஜனாதிபதியின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி!

ஜனாதிபதியின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி!

2026-01-15
இந்த ஆண்டிற்கான கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்தல் தொடர்பில் விசேட அறிவித்தல்

இந்த ஆண்டிற்கான கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்தல் தொடர்பில் விசேட அறிவித்தல்

2026-01-14

Recent News

மலர்ந்த புத்தாண்டு அனைவரினதும் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வெற்றிகரமான ஆண்டாக அமையட்டும் – ஜனாதிபதி

ஜனாதிபதியின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி!

2026-01-15
நோர்வூட் பிரதேச சபையின் உறுப்பினர்  கணேஷன் இளையராஜா இந்தியா விஜயம்

நோர்வூட் பிரதேச சபையின் உறுப்பினர் கணேஷன் இளையராஜா இந்தியா விஜயம்

2026-01-15
தமிழர்களின் முதன்மையான பண்டிகையான தைப்பொங்கல் விழா இன்று

தமிழர்களின் முதன்மையான பண்டிகையான தைப்பொங்கல் விழா இன்று

2026-01-15
ஜனாதிபதியின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி!

ஜனாதிபதியின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி!

2026-01-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.