சீனாவில் ஏற்பட்ட கேமி சூறாவளியினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.
சீனாவில் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஜிசிங் நகரில் ஏற்பட்ட குறித்த சூறாவளி காரணமாக அங்கு கனமழை பெய்து வருகின்றது.
இதன்காரணமாக நூற்றுக்கணக்கான இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் 1,700க்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் 23,419 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த அனர்த்தத்தினால் சிக்குண்டு இதுவரை 50 பேர் வரை உயிரிழந்துள்ளனர் எனவும், 15 பேர் காணாமற் போயுள்ளனர் எனவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மீட்புப் படையினர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முகாமிட்டு, மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















