• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
பட்டாசு வெடிக்காமல் 20 வருடம் தீபாவளி கொண்டாடும்  மக்கள்

பட்டாசு வெடிக்காமல் 20 வருடம் தீபாவளி கொண்டாடும்  மக்கள்

Kavipriya S by Kavipriya S
2024/11/01
in இந்தியா, தமிழகம், பிரதான செய்திகள்
68 1
A A
0
30
SHARES
984
VIEWS
Share on FacebookShare on Twitter

தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு வெடித்து கொண்டடுவது வழக்கம் . ஆனால் , சில கிராம மக்கள் பட்டாசு வெடிப்பதேயில்லை என்ற ஒரு தகவல் அதிர்ச்சியளிக்கிறது.

அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள 10 -க்கும் மேற்பட்ட கிராமங்கள் தீபாவளி பண்டிகை பண்டிகையை 20 ஆண்டுகளாக தவிர்த்து வருகின்றனர். இதற்கு காரணம் சென்னிமலை அருகே வெள்ளோட்டில் அமைந்துள்ள பறவைகள் சரணாலயம் தான்.

ஈரோடு மாவட்டம், வெள்ளோடு அருகே ‘வெள்ளோடு பறவைகள் சரணாலயம்’ அமைந்துள்ளது. சுமார் 240 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்தப் பறவைகள் சரணாலயத்தில் 50 ஏக்கர் அளவில் 30 அடி ஆழத்தில் தண்ணீர் தேங்கும் வகையில் குளம் அமைக்கப்பட்டுள்ளன.

கீழ்பவானி வாய்க்காலின் கசிவுநீர், மழைக்காலங்களில் ஓடைகளில் நிரம்பி வரும் நீர் ஆகியவற்றின் மூல ஆதாரமாகக்கொண்டு விளங்குகிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காகப் பட்டாம் பூச்சி பூங்கா, செல்பி பாயிண்ட் என அமைக்கப்பட்டு சரணாலயமே எழில் மிகுந்து காட்சியளிக்கின்றது.

பெரும்பான்மையாக இனப்பெருக்கத்திற்காக இங்கு வரும் ஆயிரக்கணக்கான பறவைகள், இங்குள்ள குளத்தில் உள்ள மீன்களை உண்ணுகின்றன.

ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையில் இங்கு பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வருவதால், அச்சமயம் சீசன் தொடங்குகிறது.

பறவைகள் இனப்பெருக்க காலங்களில் மஞ்சள் மூக்கு நாரை, நத்தை குத்தி நாரை, வெள்ளை அரிவால் மூக்கன், பொறி உள்ளான், நீலவால், இரைக்கோழி, சிறிய நீர் காகம், சாம்பல் நாரை, பஞ்சுருட்டான் உள்ளிட்ட உள்நாட்டுப் பறவைகள் வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தை நோக்கி வருகின்றன.

மேலும் சைபீரியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்து சுழைக்கடா, வண்ண நாரை, நெடுங்கால உள்ளான், செம்பருந்து, பூ நாரை, வால் காக்கை, காஸ்பியன் ஆலா, வெண்புருவ சின்னான், கருங்கழுத்து நாரை உள்ளிட்ட வெளிநாட்டுப் பறவைகளும் கூட்டம் கூட்டமாக வெள்ளோடு சரணாலயத்திற்கு வருகின்றன.

இனப்பெருக்கத்தைத் தொடர்ந்து மரங்களில் கூடு கட்டி, முட்டையிட்டு, குஞ்சுகள் வளர்ந்தவுடன் மீண்டும் இங்கிருந்து பறந்து செல்வதை அவைகளின் வழக்கமாகக் கொண்டுள்ளன.

இவ்வாறு பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து மரங்களில் கூடு கட்டி, குஞ்சுகளுடன் கூச்சலிட்டுக் கொஞ்சி மகிழும் இந்த பறவைகளின் கீச்சொலிகளை கேட்கும்போது காதுகளுக்கு மட்டுமில்லாது மனதுக்கும் ஒரு அமைதியை அளிக்கின்றது.

இந்த பறவைகளின் கூட்டத்தைக் காண, ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் இங்கு வருவதுண்டு.

இவ்வாறு இனப்பெருக்கம் செய்ய வரும் பறவைகளுக்கு எந்த விதமான இடையூறும் வந்து விடக்கூடாது என அப்பகுதியிலுள்ள கிராமத்தினர் முடிவெடுத்துள்ளனர்.

இதன் ஒருபகுதியாக, இந்த பறவைகள் சரணாலயத்தைச் சுற்றியுள்ள பி.மேட்டுப்பாளையம், பூங்கம்பாடி, தலையன்காட்டு வலசு, தச்சன்கரைவழி, செம்மாம்பாளையம், எல்லப்பாளையம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடுகின்றனர்.

அதன் அடிப்படையில், இந்த வருடமும் தொடர்ந்து 20-வது ஆண்டாக பட்டாசு வெடிக்காமல் அமைதியான முறையில் தீபாவளியை கொண்டாடினர்.

இந்த கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் மட்டும் இரவு நேரத்தில் கம்பி மத்தாப்பு, சக்கரம் புஷ்பானம் போன்ற பட்டாசுகளை கொளுத்தி மகிழ்ந்து வருகின்றனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தங்கத்தின் விலையில் மாற்றமில்லை!

Next Post

இளங்கலை பட்டதாரிகளுக்கு அமெரிக்காவின் குளோபல் யுகிராட் திட்டம்!

Related Posts

யாழில் 6 மாத கரு வீதியில் வீசப்பட்ட சம்பவம் – விசாரணை தீவிரம்!
இலங்கை

யாழில் 6 மாத கரு வீதியில் வீசப்பட்ட சம்பவம் – விசாரணை தீவிரம்!

2026-02-28
மட்டக்களப்பில் உழவு இயந்திரம் ஒன்றின் மீது டிப்பர் வாகனம் ஏறி விபத்து !
இலங்கை

மட்டக்களப்பில் உழவு இயந்திரம் ஒன்றின் மீது டிப்பர் வாகனம் ஏறி விபத்து !

2026-02-28
நாட்டின் பல பகுதிகளில் காற்று மாசுபாடு அளவு மீண்டும் அதிகரிப்பு!
இலங்கை

நாட்டின் பல பகுதிகளில் காற்று மாசுபாடு அளவு மீண்டும் அதிகரிப்பு!

2026-02-28
பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்திற்கு எதிராக யாழில் போராட்டம்!
இலங்கை

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்திற்கு எதிராக யாழில் போராட்டம்!

2026-02-28
கொத்மலை ரம்பொடை வெவண்டன் தோட்டத்தில் 25 குடும்பங்களின் அவல நிலை!
இலங்கை

கொத்மலை ரம்பொடை வெவண்டன் தோட்டத்தில் 25 குடும்பங்களின் அவல நிலை!

2026-02-28
மட்டக்களப்பில் பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலம்!
இலங்கை

மட்டக்களப்பில் பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலம்!

2026-02-28
Next Post
இளங்கலை பட்டதாரிகளுக்கு அமெரிக்காவின் குளோபல் யுகிராட் திட்டம்!

இளங்கலை பட்டதாரிகளுக்கு அமெரிக்காவின் குளோபல் யுகிராட் திட்டம்!

ரஷ்யாவைக் கண்டித்த உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி!

ரஷ்யாவைக் கண்டித்த உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி!

74 ஆண்டுகளின் பின் டெல்லியில் அதிகபட்ச வெப்ப நிலை பதிவு!

74 ஆண்டுகளின் பின் டெல்லியில் அதிகபட்ச வெப்ப நிலை பதிவு!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
யாழில் 6 மாத கரு வீதியில் வீசப்பட்ட சம்பவம் – விசாரணை தீவிரம்!

யாழில் 6 மாத கரு வீதியில் வீசப்பட்ட சம்பவம் – விசாரணை தீவிரம்!

0
மட்டக்களப்பில் உழவு இயந்திரம் ஒன்றின் மீது டிப்பர் வாகனம் ஏறி விபத்து !

மட்டக்களப்பில் உழவு இயந்திரம் ஒன்றின் மீது டிப்பர் வாகனம் ஏறி விபத்து !

0
வான்பரப்பை மூடியது ஈராக்!

வான்பரப்பை மூடியது ஈராக்!

0
நாட்டின் பல பகுதிகளில் காற்று மாசுபாடு அளவு மீண்டும் அதிகரிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் காற்று மாசுபாடு அளவு மீண்டும் அதிகரிப்பு!

0
53% குடும்பங்கள் வருமானவரி செலுத்தவில்லை

53% குடும்பங்கள் வருமானவரி செலுத்தவில்லை

0
யாழில் 6 மாத கரு வீதியில் வீசப்பட்ட சம்பவம் – விசாரணை தீவிரம்!

யாழில் 6 மாத கரு வீதியில் வீசப்பட்ட சம்பவம் – விசாரணை தீவிரம்!

2026-02-28
மட்டக்களப்பில் உழவு இயந்திரம் ஒன்றின் மீது டிப்பர் வாகனம் ஏறி விபத்து !

மட்டக்களப்பில் உழவு இயந்திரம் ஒன்றின் மீது டிப்பர் வாகனம் ஏறி விபத்து !

2026-02-28
வான்பரப்பை மூடியது ஈராக்!

வான்பரப்பை மூடியது ஈராக்!

2026-02-28
நாட்டின் பல பகுதிகளில் காற்று மாசுபாடு அளவு மீண்டும் அதிகரிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் காற்று மாசுபாடு அளவு மீண்டும் அதிகரிப்பு!

2026-02-28
53% குடும்பங்கள் வருமானவரி செலுத்தவில்லை

53% குடும்பங்கள் வருமானவரி செலுத்தவில்லை

2026-02-28

Recent News

யாழில் 6 மாத கரு வீதியில் வீசப்பட்ட சம்பவம் – விசாரணை தீவிரம்!

யாழில் 6 மாத கரு வீதியில் வீசப்பட்ட சம்பவம் – விசாரணை தீவிரம்!

2026-02-28
மட்டக்களப்பில் உழவு இயந்திரம் ஒன்றின் மீது டிப்பர் வாகனம் ஏறி விபத்து !

மட்டக்களப்பில் உழவு இயந்திரம் ஒன்றின் மீது டிப்பர் வாகனம் ஏறி விபத்து !

2026-02-28
வான்பரப்பை மூடியது ஈராக்!

வான்பரப்பை மூடியது ஈராக்!

2026-02-28
நாட்டின் பல பகுதிகளில் காற்று மாசுபாடு அளவு மீண்டும் அதிகரிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் காற்று மாசுபாடு அளவு மீண்டும் அதிகரிப்பு!

2026-02-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.