• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சிறப்புக் கட்டுரைகள்
தனிமையில் இருப்பதை வரமாக மாற்றும் சக்தி உங்களிடமே உள்ளது

தனிமையில் இருப்பதை வரமாக மாற்றும் சக்தி உங்களிடமே உள்ளது

Kavipriya S by Kavipriya S
2025/02/04
in சிறப்புக் கட்டுரைகள், முக்கிய செய்திகள், லைப் ஸ்டைல்
69 1
A A
0
30
SHARES
993
VIEWS
Share on FacebookShare on Twitter

தனிமையும்.. இறப்பும்.. தனிமையால் நேரடியாக மரணத்தை ஏற்படுத்த முடியாது என்றாலும், தனிமையில் இருப்பவர்கள் முன்கூட்டியே மரணத்தை தழுவுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. தனிமை, இறப்பு விகிதத்தை அதிகரிக்கச் செய்திருப்பதாக கூறுகின்றன.
தனிமையின் அறிகுறிகள்

* தோழமையாக பழகும் நபர்கள் யாருமே இல்லாதது போன்ற உணர்வு

* தாம் ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வு

* தங்கள் உறவினர்கள், குடும்பத்தினருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பது போன்ற உணர்வு

* நட்பு வட்டம் இல்லை அல்லது குறைந்து கொண்டிருப்பது போன்ற உணர்வு

* உரிமையுடன் தொடர்பு கொள்ளக்கூடிய நபர்கள் இல்லை என்ற உணர்வு

பணி, படிப்பு, தொழில் ரீதியாக பலரும் குடும்பத்தினர், நட்பு வட்டத்தினரை பிரிந்து தனிமையில் வசிக்கும் சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள்.

முதியவர்கள்தான் தனிமையில் நேரத்தை செலவிடுவார்கள் என்ற நிலை மாறி இளம் தலைமுறையினரும் தனிமையில் காலத்தை கழிக்கும் சூழலை எதிர்கொண்டுள்ளனர்.

அப்படி தம் மீது அன்பு, அக்கறை செலுத்துபவர்களிடம் இருந்து பிரிந்து வாழ்வது மனத்துயரம், அசௌகரியம், தூக்கமின்மை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

நீண்டகாலமாக தனிமையை அனுபவிப்பது மன ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கு விளைவிக்கும் என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. தனிமை ஏற்படுத்தும் மனச்சோர்வு பிற மன நல பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும்.

தனிமையில் இருப்பவர்களுக்கு மறதியை ஏற்படுத்தும் அல்சைமர் நோய் உருவாகும் வாய்ப்பு இரு மடங்கு அதிகமாகும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. நாள்பட்ட தனிமைக்கு ஆளாகுவது மன அழுத்தத்தை தூண்டும் ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்துவிடும்.

தூக்க சுழற்சியை பாதிப்படைய வைத்து நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனமடைய செய்துவிடும்.

அன்புக்குரியவர்களுடன் இணையுங்கள்

தொலை தூரத்தில் இருந்தாலும் செல்போன் உரையாடல், வீடியோ அழைப்புகள் மூலம் உங்கள் மீது அன்பு செலுத்துபவர்களுடன் இணையுங்கள். 10 நிமிடம் தொடர்ந்தால் கூட போதும். அந்த தொடர்பும், மனமார்ந்த உரையாடலும் உங்கள் மன நிலையை திறம்பட மேம்படுத்த உதவிடும்.

நன்றி கூறுங்கள்

வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் உங்களின் உயர்வுக்கு ஏதாவதொரு வகையில் சிலர் காரணமாக இருப்பார்கள். அவர்களுக்கு மனமார நன்றி கூறுங்கள். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், தனிமையில் இருக்கும் சூழலிலும் மீண்டும் நினைவு கூர்ந்து மனதுக்குள் நன்றி செலுத்துங்கள்.
தனியாக இருக்கும்போது நேர்மறையான எண்ணங்களை மனதில் நிழலாட செய்யுங்கள். விருப்பமான உணவுகளை ருசியுங்கள். மகிழ்ச்சியை வெளிப்படுத்த உதவிடும் சூழலை கட்டமையுங்கள்.

இசையை ரசியுங்கள்
தனிமையை விரட்டி மனதை சஞ்சலங்களுக்கு இடம் கொடுக்காமல் நிலை நிறுத்தக்கூடிய அபார சக்தி இசைக்கு உண்டு. விருப்பமான இசையை கேட்டு ரசியுங்கள். அவை கவனச்சிதறலை தடுக்கும். நேர்மறையான எண்ணங்களை, சூழலை நிரப்ப உதவிடும்.

இயற்கையோடு இணையுங்கள்
வீடு, அறைக்குள் முடங்கியே கிடப்பது தனிமை உணர்வை அதிகரிக்க செய்துவிடும். விரக்தியான மன நிலைக்கு வித்திடும். அலுவலக பணி, தொழில், படிப்பு இவற்றை தவிர்த்து வெளியிடங்களில் சில மணி நேரத்தை செலவிட வேண்டும். அது காலையிலும், மாலையிலும் நடைப்பயிற்சி செய்வதாக இருக்கலாம்.
இயற்கை சூழ்ந்த இடங்கள், பூங்காக்களில் நேரம் செலவிடுவதாக இருக்கலாம். நண்பர்களுடன் பொழுதை போக்குவதாக இருக்கலாம். இயற்கையோடு செலவிடும் நேரம் மன நலத்திற்கு கூடுதல் நன்மைகளை சேர்க்கும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

உணர்வுகளை வழிநடத்துங்கள்
கலை, இசை அல்லது எழுத்து என உணர்ச்சிகளை வழிநடத்தி செல்லும் விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். அவை படைப்பாற்றல் திறனை அதிகரிக்கவும், தேவையற்ற சிந்தனைகள் மனதை ஆட்கொள்வதை தவிர்க்கவும், கவனச்சிதறலை கட்டுப்படுத்தவும் வழிவகை செய்யும்.

Photo of young females artist in her apartment

செல்லப்பிராணிகளுடன் நேரத்தை செலவிடுங்கள்
செல்லப்பிராணிகள் தோழமை உணர்வை கொடுக்கக்கூடியவை. மன அழுத்தத்தைக் குறைக்க உதவுபவை. உங்களிடம் செல்லப்பிராணி இல்லையென்றால் தெரு நாய்களிடம் நேசம் காட்டுங்கள். விலங்குகள் காப்பகத்திற்கு சென்று அங்குள்ள விலங்குகளுடன் நேரத்தை செலவிடுங்கள். அது மனதுக்கு இதமளிக்கும்.

உணர்ச்சிகளை வெளிப்படுத்துங்கள்
உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது அவற்றின் தீவிரத்தைக் குறைக்கும். உங்களின் உணர்ச்சிகளை அன்புக்குரியவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அல்லது மனதில் பதிந்த விஷயங்கள், எண்ணங்களை டைரியில் எழுதும் பழக்கத்தை கடைப்பிடியுங்கள். இத்தகைய செயல்பாடுகள் நல்வாழ்வுக்கு வித்திடக்கூடியவை.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

100 ஆவது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறும் திமுத் கருணாரத்ன!

Next Post

உச்சத்தில் தங்கத்தின் விலை!

Related Posts

எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்காக ரஷ்யாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை!
இலங்கை

எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்காக ரஷ்யாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை!

2026-03-13
ஈரானிய மாலுமிகளின் உடல்களை திருப்பி அனுப்பும் பணிகளை ஆரம்பித்த இலங்கை!
இலங்கை

ஈரானிய மாலுமிகளின் உடல்களை திருப்பி அனுப்பும் பணிகளை ஆரம்பித்த இலங்கை!

2026-03-13
இலங்கையின் நிலத்தடிக்குள் ஒளிந்திருந்த மாபெரும் அதிசயம்!
இலங்கை

இலங்கையின் நிலத்தடிக்குள் ஒளிந்திருந்த மாபெரும் அதிசயம்!

2026-03-13
2026 ஜனவரியில் எதிர்பாராத விதமாக சரிந்த இங்கிலாந்து பொருளாதாரம்!
இங்கிலாந்து

2026 ஜனவரியில் எதிர்பாராத விதமாக சரிந்த இங்கிலாந்து பொருளாதாரம்!

2026-03-13
Irish dena கப்பல் விவகாரம்: உயிரிழந்தவர்களின் உடல்கள் ஈரானிடம் ஒப்படைப்பு
இலங்கை

Irish dena கப்பல் விவகாரம்: உயிரிழந்தவர்களின் உடல்கள் ஈரானிடம் ஒப்படைப்பு

2026-03-13
பாரியளவிலான போதைப்பொருள் மீட்பு; கடற்படையின் விரிவான அறிக்கை!
ஆசிரியர் தெரிவு

பாரியளவிலான போதைப்பொருள் மீட்பு; கடற்படையின் விரிவான அறிக்கை!

2026-03-13
Next Post
உச்சத்தில் தங்கத்தின் விலை!

உச்சத்தில் தங்கத்தின் விலை!

உலகளவில் புகைபிடிக்காதவர்களிடையே நுரையீரல் புற்றுநோய் விகிதம் உயர்வு

உலகளவில் புகைபிடிக்காதவர்களிடையே நுரையீரல் புற்றுநோய் விகிதம் உயர்வு

77வது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு  யாழ்ப்பாணத்தில் கருப்புக்கொடி போராட்டம்!

77வது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு யாழ்ப்பாணத்தில் கருப்புக்கொடி போராட்டம்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
மொழிசார் பாரம்பரியத்தைப் பாதுகாக்க ஒன்றிணைவோம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

மொழிசார் பாரம்பரியத்தைப் பாதுகாக்க ஒன்றிணைவோம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

0
எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்காக ரஷ்யாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை!

எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்காக ரஷ்யாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை!

0
கண்டி நீதிமன்றத்தை உலுக்கிய வெள்ளப்பெருக்கு! நேரில் சென்று நிலைமையை ஆராய்ந்த அமைச்சர்

கண்டி நீதிமன்றத்தை உலுக்கிய வெள்ளப்பெருக்கு! நேரில் சென்று நிலைமையை ஆராய்ந்த அமைச்சர்

0
ஈரானிய மாலுமிகளின் உடல்களை திருப்பி அனுப்பும் பணிகளை ஆரம்பித்த இலங்கை!

ஈரானிய மாலுமிகளின் உடல்களை திருப்பி அனுப்பும் பணிகளை ஆரம்பித்த இலங்கை!

0
இலங்கையின் நிலத்தடிக்குள் ஒளிந்திருந்த மாபெரும் அதிசயம்!

இலங்கையின் நிலத்தடிக்குள் ஒளிந்திருந்த மாபெரும் அதிசயம்!

0
மொழிசார் பாரம்பரியத்தைப் பாதுகாக்க ஒன்றிணைவோம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

மொழிசார் பாரம்பரியத்தைப் பாதுகாக்க ஒன்றிணைவோம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

2026-03-13
எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்காக ரஷ்யாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை!

எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்காக ரஷ்யாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை!

2026-03-13
கண்டி நீதிமன்றத்தை உலுக்கிய வெள்ளப்பெருக்கு! நேரில் சென்று நிலைமையை ஆராய்ந்த அமைச்சர்

கண்டி நீதிமன்றத்தை உலுக்கிய வெள்ளப்பெருக்கு! நேரில் சென்று நிலைமையை ஆராய்ந்த அமைச்சர்

2026-03-13
ஈரானிய மாலுமிகளின் உடல்களை திருப்பி அனுப்பும் பணிகளை ஆரம்பித்த இலங்கை!

ஈரானிய மாலுமிகளின் உடல்களை திருப்பி அனுப்பும் பணிகளை ஆரம்பித்த இலங்கை!

2026-03-13
இலங்கையின் நிலத்தடிக்குள் ஒளிந்திருந்த மாபெரும் அதிசயம்!

இலங்கையின் நிலத்தடிக்குள் ஒளிந்திருந்த மாபெரும் அதிசயம்!

2026-03-13

Recent News

மொழிசார் பாரம்பரியத்தைப் பாதுகாக்க ஒன்றிணைவோம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

மொழிசார் பாரம்பரியத்தைப் பாதுகாக்க ஒன்றிணைவோம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

2026-03-13
எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்காக ரஷ்யாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை!

எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்காக ரஷ்யாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை!

2026-03-13
கண்டி நீதிமன்றத்தை உலுக்கிய வெள்ளப்பெருக்கு! நேரில் சென்று நிலைமையை ஆராய்ந்த அமைச்சர்

கண்டி நீதிமன்றத்தை உலுக்கிய வெள்ளப்பெருக்கு! நேரில் சென்று நிலைமையை ஆராய்ந்த அமைச்சர்

2026-03-13
ஈரானிய மாலுமிகளின் உடல்களை திருப்பி அனுப்பும் பணிகளை ஆரம்பித்த இலங்கை!

ஈரானிய மாலுமிகளின் உடல்களை திருப்பி அனுப்பும் பணிகளை ஆரம்பித்த இலங்கை!

2026-03-13
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.