பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பு தடை செய்யப்பட்டுள்ளதாக பிபா (FIFA) அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பு நிர்வாகத்தில் குளறுபடிகள் இருப்பதால் கடந்த 2017-ம் ஆண்டு முதல் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.
நிர்வாகிகள் இடையே மோதல்கள், மோசமான நிர்வாக நடைமுறை உட்பட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும்படி சர்வதேச கால்பந்து சங்க கூட்டமைப்பு உத்தரவிட்டது. இதை கண்காணிக்க விசேட குழு ஒன்றையும் அமைத்துள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு முதல் இந்த விசேட குழு பல முறை எச்சரிக்கை விடுத்தபோதும் பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பு நடைமுறைகளில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலையில், பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது என பிபா (FIFA) அறிவித்துள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு முதல் 8 ஆண்டுக்குள் பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பு 3-வது முறையாக தடை செய்யப்பட்டுள்ளது.
பிபா கூறியபடி நிர்வாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பின் இந்தத் தடை விலக்கிக் கொள்ளப்படும் என தெரிகிறது.