இலங்கை விமானப்படையின் புதிய தலைமை அதிகாரியாக எயார் வைஸ் மார்ஷல் லசித சுமனவீர நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று (04) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
தற்போது விமான நடவடிக்கைகளின் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றும் எயார் வைஸ் மார்ஷல் லசித சுமனவீர 1991 ஆம் ஆண்டு இலங்கை விமானப்படையில் இணைந்துகொண்டார்.
இலங்கை விமானப்படையின் தலைமை அதிகாரியாக பணியாற்றிய எயார் வைஸ் மார்ஷல் சம்பத் விக்ரமரத்ன நேற்றுடன் ஓய்வு பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.