ஐ.சி.சி செம்பியன்ஸ் கிண்ண தொடரில் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரண்டாது இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 50 ஓட்டங்களால் வெற்றிப் பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
அதன்படி போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி அந்த அணி 50 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 362 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் நியூசிலாந்து அணி சார்பில் Rachin Ravindra அதிகபட்சமாக 108 ஓட்டங்களையும், Kane Williamson 102 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இதற்கமைய 363 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 312 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.
துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் இறுதி வரை போராடிய David Miller ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 100 ஓட்டங்களையும் Rassie van der Dussen 69 ஓட்டங்களையும் பெற்றனர்.
இதன்படி எதிர்வரும் 09ஆம் திகதி இந்திய அணிக்கு எதிராக ஐ.சி.சி செம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.