தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கன்னி வரவு – செலவுத்திட்டமான 2025 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத்திட்டம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
2025 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத்திட்டம் கடந்த பெப்ரவரி 17 ஆம் திகதி நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது.
அதற்கமைய, வரவு- செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் மீதான விவாதம் கடந்த பெப்ரவரி 18 ஆம் திகதி முதல் பெப்ரவரி 25 ஆம் திகதி வரையான 7 நாட்கள் இடம்பெற்றிருந்தன.
பெப்ரவரி 25 ஆம் திகதி மாலை 6 மணிக்கு வரவு- செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றதுடன், இதற்கு ஆதரவாக ஆதரவாக 155 வாக்குகளும் எதிராக 46 வாக்குகளும் வழங்கப்பட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து வரவு செலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதம் கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதி முதல் இன்று வரை சுமார் 19 நாட்கள் இடம்பெறுகின்றன.
இதனையடுத்து, வரவு – செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு சற்று முன்னர் நடைபெற்றது.
இதில் வரவு-செலவு திட்டத்திற்கு ஆதரவாக 159 வாக்குகளும் எதிராகவாக்குகளும் 45 அளிக்கப்பட்ட நிலையில், 114 மேலதிக வாக்குகளால் 2025 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டது.