ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இன்று (31) நடைபெறும் 2025 இந்தியன் பிரீமியர் லீக்கில் தனது மூன்றாவது போட்டியில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
அதன்படி, நடப்பு ஐ.பி.எல். சீசனின் 12 ஆவது போட்டியானது மும்பை, வான்கடே மைதானத்தில் இன்றிரவு 07.30 மணிக்கு ஆரம்பமாகிறது.
தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த பின்னர், மும்பை அணி, திங்கட்கிழமை தனது சொந்த ரசிகர்களின் முன்னிலையில் சீசனின் முதல் வெற்றியைப் பெற விரும்புகிறது.
இருப்பினும், ஹார்டிக் பாண்டியா தலைமையிலான அணிக்கு இது எளிதான காரியமாக இருக்காது.
குவாத்தியில் அமைந்துள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இறுதி ஐ.பி.எல். போட்டியில் அஜிங்க்யா ரஹானே தலைமையிலான அணி ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
அந்த போட்டியில், சுனில் நரேனின் சேவைகளை கொல்கத்தா தவறவிட்டது, ஆனால் புகழ்பெற்ற மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரர் இன்று மீண்டும் களமிறங்க உள்ளார்.
அதேநேரம், சென்னையில் பெரிய ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்யத் தவறியதாலும், குஜராத்துக்கு எதிரான போட்டியில் 200க்கும் குறைவான ஓட்டங்களை துரத்தியதாலும் மும்பை அணியின் துடுப்பாட்டம் தொடர்ந்து போராடியது.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே இதுவரை 34 ஐ.பி.எல். போட்டிகள் நடந்துள்ளன.
அதில் மும்பை அணி 23 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
கொல்கத்தா அணி 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.