இந்தியாவின் திருச்சிராப்பள்ளியிலிருந்து முதல் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று (30) யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) லிமிடெட் (AASL) படி, வருகை தந்த விமானத்துக்கு நீர் வணக்கம் செலுத்தி வரவேற்க்கப்பட்டது.
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் அதன் பாதை வரைபடத்தை விரிவுபடுத்தியுள்ளது என்றும், இண்டிகோ திருச்சிராப்பள்ளியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு தினசரி நேரடி விமானங்களை தொடங்கியுள்ளது என்றும் AASL மேலும் தெரிவித்துள்ளது.