மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் மஹேல ஜெயவர்தன, நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் பவர்பிளேக்கள் தனது அணிக்கு பின்னடைவு இருந்ததாக ஒப்புக்கொண்டார்.
மும்பை அணி இந்த சீசனில் விளையாடிய ஐந்து போட்டிகளில் நான்கில் தோல்வியடைந்துள்ளது.
திங்கட்கிழமை (ஏப்ரல் 8) ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் ஏற்பட்ட தோல்வி, சொந்த மண்ணில் அவர்களின் முதல் தோல்வியைக் குறிக்கிறது.
முதலில் துடுப்பாட்டம் செய்ய அழைக்கப்பட்ட பெங்களூரு அணி முதல் ஆறு ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 73 ஓட்டங்களை எடுத்தது.
இது மும்பை அணிக்கு எதிரான அவர்களின் அதிகபட்ச பவர்பிளே ஸ்கோராகும்.
இதற்கு நேர்மாறாக, போட்டியின் சூழலில் மும்பை அணியால் 54/2 என்ற சராசரி ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
இந்த நிலையில் தோல்வியின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மஹேல ஜெயவர்தன,
மும்பை இந்தியன்ஸ் அணியின் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு நிலைப்பாட்டில், தற்போது பவர்பிளேக்கள் எங்களுக்கு மிகவும் பின்னடைவாக உள்ளது என்பதை ஒப்புக்கொண்டார்.
கடந்த சில ஆட்டங்களிலும், பவர்பிளேயில் பந்தை அதிகமாகக் வீண் அடித்தோம். எங்களுக்கு நல்ல தொடக்கங்கள் கிடைக்கவில்லை, விக்கெட்டுகளை இழந்து வருகிறோம் என்றார்.
அத்துடன், 2024 ஐ.பி.எல். தொடரில் இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ரோஹித் நிறைய போராடியுள்ளார்.
உண்மையில், இந்த காலகட்டத்தில் இடது கை வேகப்பந்து வீச்சாளர்களால் பெரும்பாலான முறை அவர் ஆட்டமிழந்துள்ளார்.
புள்ளிவிவரங்களைப் பொறுத்தவரை, இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிரான 17 இன்னிங்ஸ்களில் ஹிட்மேன் ஏழு முறை ஆட்டமிழந்தார்.
ரோஹித்தின் ஆட்டமிழப்பு மற்றும் ஓட்டங்கள் இல்லாதது தொடர்பாக ஜெயவர்தனவிடம் ஊடகவியலாளர்களிடம் கேள்விகள் எழுப்பிய போது மேற்கண்டவாறு கூறிய ஜெயவர்தன, பெங்களூரு அணி வீரர் தயாளின் பந்து வீச்சினை பாராட்டுவதாகவும் குறிப்பிட்டார்.
ஹர்த்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணி நடப்பு ஐ.பி.எல். சீசனில் ஐந்து ஆட்டங்களில் நான்காவது தோல்வியைச் சந்தித்து.
தற்சமயம் அவர் 10 அணிகள் கொண்ட பட்டியலில் 8 ஆவது இடத்தில் உள்ளனர்.