ஏப்ரல் பண்டிகை காலத்தில் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) 1300 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது.
2025 ஏப்ரல் 10 முதல் 19 வரையிலான காலக் கட்டத்தில் இந்த வருமானம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் போக்குவரத்து பிரிவு முகாமையாளர் எச்.பியதிலக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபை சாதாரண பேருந்து கட்டணங்களின் கீழ் இயங்கிய நேரத்தில் இந்த வருமானம் ஈட்டப்பட்டது.
பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படவில்லை.
ஒரு பண்டிகைக் காலத்தில் இலங்கை போக்குவரத்து சபை இதுவரை