பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை பதுளை நீதவான் நீதிமன்றம் 2025 மே 05 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, கடந்த மார்ச் 27 ஆம் திகதி, இராஜாங்க அமைச்சராக இருந்த காலத்தில் சுமத்தப்பட்ட 03 ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில், வாக்குமூலம் பதிவு செய்த பின்னர், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார்.
இரண்டு ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அதே நேரத்தில் ஒரு குற்றச்சாட்டிற்காக அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
மாகாண சபையின் நிலையான வைப்புத்தொகையிலிருந்து 01 மில்லியன் ரூபாவை அரச வங்கியொன்றில் தவறாகப் பயன்படுத்தியதாகவும், அரச வங்கியொன்றில் வைத்திருந்த நிலையான வைப்புத்தொகையை மீளப் பெறுவதன் மூலம் அரசாங்கத்திற்கு 23 மில்லியன் ரூபாவை இழப்பை ஏற்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.















