2025 ஏப்ரல் 20 நிலவரப்படி இந்த ஆண்டு மொத்தம் 846,221 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகம் (SLTDA) அறிவித்துள்ளது.
SLTDA வெளியிட்டுள்ள அண்மைய தரவுகளின்படி, ஏப்ரல் மாதத்தின் முதல் 20 நாட்களில் மட்டும் 123,945 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் இருந்து அதிகளவிலான சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
அதன்படி, அந்த எண்ணிக்கை 24,776 ஆகும்.
இதற்கு மேலதிகமாக ஐக்கிய இராச்சியத்திலிருந்து 14,060 சுற்றுலா பயணிகளும், ரஷ்யா மற்றும் ஜெர்மனியில் இருந்து முறையே 10,873 மற்றும் 9,387 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.