2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று (22) நடைபெறும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி டெல்லி கேபிடல்ஸ் (DC) அணியை எதிர்கொள்கிறது.
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 40 ஆவது போட்டியானது பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் இன்றிரவு 07.30 மணிக்கு ஆரம்பமாகிறது.
ரிஷப் பந்த் தலைமையிலான LSG அணி, புள்ளிகள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
இதுவரை எட்டு போட்டிகளில் விளையாடி ஐந்து வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது.
DC அணியும் ஏழு போட்டிகளில் விளையாடி ஐந்து வெற்றிகளைப் பெற்றுள்ளது.
அக்சர் படேல் தலைமையிலான அணியானது வீரர்கள் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஐ.பி.எல். வரலாற்றில் இவ்விரு அணிகளும் இதுவரை ஆறு போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன.
அதில் இரு அணிகளும் தலா மூன்று வெற்றிகளை பெற்றுள்ளன.
2024 ஐ.பி.எல். முதல் டெல்லி கேபிடல்ஸ் அணி லக்னோவுக்கு எதிராக தோல்வியடையாமல் உள்ளது.
கடந்த ஆண்டு LSG அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் அவர்கள் வெற்றி பெற்றனர்.
இந்த ஆண்டிலும் அவர்கள் 209 ஓட்டங்களை சேஸ் செய்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வென்றமையும் குறிப்பிடத்தக்கது.