2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் வீரர்களைக் கௌரவிக்கும் வகையில், ‘2025 ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருதுகள்’ (Sri Lanka Cricket Awards 2025) நிகழ்வை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் (SLC) 2026 நாளை (06) கொழும்பில் நடத்தவுள்ளது.
இந்தச் சிறப்பான விழாவில், சர்வதேச மற்றும் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற 42 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கௌரவிக்கப்பட உள்ளனர்.
‘ஆண்டின் சிறந்த ஆண் கிரிக்கெட் வீரர்’ மற்றும் ‘ஆண்டின் சிறந்த பெண் கிரிக்கெட் வீராங்கனை’ ஆகிய விருதுகள் வழங்கப்படுவதே இந்நிகழ்ச்சியின் முக்கிய சிறப்பம்சமாக அமையும்.
அனைத்து ஆட்ட வடிவங்களிலும் சிறந்து விளங்குவோரை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படும் பிற முக்கிய சர்வதேச விருதுகளில், சிறந்த துடுப்பாட்ட வீரர், சிறந்த பந்துவீச்சாளர், சிறந்த சகலதுறை வீரர், ஆண்டின் சிறந்த வளர்ந்து வரும் ஆடவர் வீரர் மற்றும் ஆண்டின் சிறந்த வளர்ந்து வரும் மகளிர் வீராங்கனை ஆகிய விருதுகள் அடங்கும்.















