இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கடத்தி வரப்பட்ட 500 கிலோ கிராம் மஞ்சளுடன் ஒருவர் நேற்றைய தினம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் இருந்து படகொன்றில் கடல் வழியாக கடத்தி வரப்பட்ட ஒரு தொகை மஞ்சள் ஊர்காவற்துறை பகுதியில் கைமாற்றப்படவுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது மஞ்சளுடன் மூவர் இருந்துள்ள நிலையில் அவர்களை மடக்கி பிடிக்க முயன்ற வேளை இருவர் தப்பி சென்றுள்ளதாகவும், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும், தப்பி சென்ற இருவரையும் கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.