சுவீடன் நாட்டின் உப்சாலா நகரில் செவ்வாய்க்கிழமை (29) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய பதின்ம வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் உயிரிழந்தனர்.
நகரின் மையத்தில் உள்ள ஒரு சிகை அலங்கார நிலையத்தில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ஸ்கூட்டரில் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட நபர் 18 வயதுக்குட்பட்டவர் என்பதை புதன்கிழமை (30) ஸ்வீடிஷ் பொலிஸார் உறுதிப்படுத்தினர்.
பாதிக்கப்பட்ட மூன்று பேரும் 15 முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள் என்று ஸ்வீடிஷ் பொலிஸழர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் குறிப்பிட்டனர்.