அரநாயக்க பகுதியில் 10 கிராம் 400 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப் பொருளை வைத்திருந்த அரநாயக்க பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரநாயக்க பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
டுபாயில் மறைந்திருப்பதாக கூறப்படும் திலினி என்ற போதைப்பொருள் கடத்தல்காரினால் இந்த போதைப்பொருள் நாட்டுக்கு கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் எனவும் 40 க்கும் மேற்பட்ட வாகனங்களைத் திருடியது உட்பட பல குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர் எனவும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், சந்தேகநபர் இன்று (04) மாவனெல்லை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் , மேலும் விசாரணைகளுக்காக 48 மணி நேர பொலிஸ் தடுப்புக்காவல் உத்தரவு கோரப்படவுள்ளதாகவும் பொலிஸார் முன்னதாக தெரிவித்தனர்.