இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள 18 ஆவது ஐ.பி.எல். தொடரின் 66 ஆவது லீக் போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.
இந்த போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெற உள்ளது.
இரண்டு அணிகளும் கடந்த 8ஆம் திகதி தர்மசாலாவில் சந்தித்த போது, இந்தியா -பாகிஸ்தான் மோதல் காரணமாக எல்லையில் தாக்குதல் தீவிரமானமையால் கலையகத்தில் மின்கோபுர விளக்குகள் அணைக்கப்பட்டு போட்டியும் இடைநிறுத்தப்பட்டது.
இந்தியா-பாக்கிஸ்தான் அமைதியின் பின் அந்த போட்டி தற்போது மீண்டும் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.