• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பாடசாலைகளில் இடம்பெறும் சிறுவர் சித்திரவதைகளுக்கு இனியும் இடமளிக்கக்கூடாது – பிரதமர்

பாடசாலைகளில் இடம்பெறும் சிறுவர் சித்திரவதைகளுக்கு இனியும் இடமளிக்கக்கூடாது – பிரதமர்

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/05/28
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

பாடசாலைகளுக்குள் பிள்ளைகள் முகம்கொடுக்கும் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

பாடசாலை மாணவர்களுக்கு எதிரான சித்திரவதைகளுக்கு இனியும் இடமளிக்கக்கூடாது.

அவ்வாறான சம்பவமொன்று இடம்பெறுமாயின் உடனடியாக அதிபர்கள் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த அதிபர்களை தெளிவுபடுத்தும் வகையில் கல்வியமைச்சில் நேற்று (27) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய,

பிள்ளைகள் ஒரு அரசின் அடிப்படை பொறுப்பாகும். இலங்கை, ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமைகள் தொடர்பான பிரகடனத்தில் கைச்சாத்திட்டுள்ளதன் ஊடாக சிறுவர் உரிமைகளை பாதுகாப்பதற்கும், அவர்களின் உச்சகட்ட நலனிற்காக செயற்படுவதற்கும் கடமைப்பட்டுள்ளது.

இதனூடாக குறித்த பொறுப்பு அரசிற்கும், பாடசாலை கட்டமைப்புக்கு பொறுப்பாக செயற்படும் அரச பிரதிநிதிகளான அனைத்து அதிகாரிகளுக்கும் உள்ளது.

அண்மைக்காலமாக பதிவாகும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களை கண்ணோக்கும் போது, பாடசாலை கட்டமைப்பிற்குள் சிறுவர்கள் முகம்கொடுக்க நேரிட்டுள்ள துஷ்பிரயோகங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்ப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது.

எனினும் வீடு உட்பட பாடசாலையும் பிள்ளைகளுக்கு பாதுகாப்பான மற்றும் பொருத்தமான சூழலாக அமைய வேண்டுமென சுட்டிக்காட்டிய பிரதமர், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையின் அடிப்படையிலேயே பெற்றோர்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புகின்றனர்.

இதனால் பாடசாலை சூழல் பிள்ளைகளுக்கு பாதுகாப்பற்ற சூழலாக மாறுவதற்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது.

பாடசாலை கட்டமைப்பிற்குள் பிள்ளைகளுக்கு எதிராக இடம்பெறும் எந்த வகையிலான சித்திரவதையும் தொடர்ந்தும் இடம்பெறக்கூடாதெனவும், பாடசாலைக்குள் பிள்ளை முகம்கொடுக்கும் உடல் ரீதியான துஷ்பிரயோகம், பாலியல் துஷ்பிரயோகம், வேறு வகையிலான புறக்கணிப்பு, உள ரீதியான துஷ்பிரயோகம் என எதுவாக இருந்தாலும் அதனை மறைத்து அல்லது புறக்கணிப்பு செய்வதை மேற்கொள்ளக் கூடாது.

அது மறைப்பதற்கு அல்லது புறக்கணிப்பதற்கான விடயம் அல்ல. பாடசாலையின் பிரதான அதிகாரம்மிக்க நபராக பாடசாலை அதிபரினால் அவை குறித்து துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அவ்வாறான செயற்பாடுகளை அலட்சியப்படுத்துவது முழு பாடசாலை கட்டமைப்பும் தோல்வியடைவதற்கு காரணமாக அமைகிறது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் மிக விரைவாகவும் பொறுப்புடனும் செயற்பட வேண்டும்.

சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான பதிலளிப்பு தாமதமடையும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அதற்கு முகம்கொடுத்த பிள்ளை உடல், உள ரீதியாக வழமைக்கு திரும்ப முடியாத அளவிற்கு பாதிப்பை எதிர்கொள்ளும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் துரித தலையீடு செய்வதன் ஊடாக உயிரைக் காப்பாற்றுவதற்கும், சுய கௌரவத்தை பாதுகாத்து நீதியை நிலைநாட்டுவதற்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்.

ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறையிலுள்ள ஏனைய அதிகாரிகள் சிறுவர்களுக்கு எதிரான அனைத்து வகையிலுமான வன்முறைகளை அடையாளம் காண்பதற்கும், தடுப்பதற்கும், அறிக்கையிடுவதற்கும் தேவையான அறிவு மற்றும் அது தொடர்பில் செயற்படுவதற்கு தேவையான வழிமுறைகள் குறித்தான அறிவைக் கொண்டிருப்பதும் மிக முக்கியமானது.

தொடர்ச்சியாக பிள்ளைகளுடன் தொடர்புபடும் உங்கள் அனைவரும் சிறுவர் உரிமைகள் தொடர்பிலும், சட்டரீதியிலான பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும் அறிந்திருத்தல் வேண்டும். சிறுவர் உள்ளங்களை புரிந்துகொள்வதற்கும், சிறுவர்களுடன் சரியான முறையில் செயற்படுவதற்கும் உதவும் சிறுவர் உளவியல் கல்வியை பெற்றிருப்பதும் மிகவும் முக்கியமானது.

சிறுவர்களுக்குள் ஏற்படும் அழுத்தங்களை அடையாளம் காண்பதற்கும், சிறுவர்களுக்குள் ஏற்படும் அதிருப்தி அவர்களின் கற்றல் செயற்பாடுகளை பாதிக்கும் விதத்தை புரிந்துகொள்வதற்கும் சிறுவர்களுடன் மிகவும் நெருக்கமாகவும் கருணையுடனும் பழகி அவர்களுக்கு பதிலளிப்பதற்கு கல்வித் துறையில் சேவையாற்றும் அதிகாரிகள் பயிற்சிகளைப் பெற்றிருப்பது உட்பட தேவையான சந்தர்ப்பங்களில் குறித்த அறிவைப் பயன்படுத்துவதும் மிகவும் முக்கியமானது.

சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் அரசின் வளமான நாடு – அழகான வாழ்க்கை கொள்கை பிரகடனத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் மற்றும் அனைத்து வகையிலான சித்திரவதைகளிலிருந்து அவர்களை பாதுகாப்பது அதன் அடிப்படை நோக்கங்களில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் நீதிபதி எல்.டீ.பீ.தெஹிதெனிய, இலங்கை மனித உரிமைகள் ஆணையகத்தின் தலைவர் நிமல் ஜீ புஞ்சிஹேவா, ஆணையாளர் பேராசிரியர் டீ.தனராஜ், மேல் மாகாண கல்வி செயலாளர் நிஷாந்தி ஜயசிங்க உள்ளிட்ட அதிகாரிகளும் அதிபர்களும் கலந்துகொண்டனர்.

Related

Tags: Child AbuseHarini Amarasooriyaசிறுவர்துஷ்பிரயோகம்பாடசாலைகள்ஹரினி அமரசூரிய
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பல இடங்களில் இடியுடன் கூடிய மழை!

Next Post

ஐரோப்பிய ஒன்றிய மன்றத்தின் தலைமை அதிகாரி இன்று இலங்கை வருகை!

Related Posts

ஐரோப்பாவில் தீவிரமடையும் காட்டுத்தீ: கடும் வெப்ப அலை மற்றும் பலத்த காற்றால் மீண்டும் பரவும் அபாயம்!
உலகம்

ஐரோப்பாவில் தீவிரமடையும் காட்டுத்தீ: கடும் வெப்ப அலை மற்றும் பலத்த காற்றால் மீண்டும் பரவும் அபாயம்!

2026-07-30
கனடாவின் வெஸ்ட்ஜெட் விமான நிறுவன ஊழியர்கள் 72 மணி நேர வேலைநிறுத்த அறிவிப்பு!
உலகம்

கனடாவின் வெஸ்ட்ஜெட் விமான நிறுவன ஊழியர்கள் 72 மணி நேர வேலைநிறுத்த அறிவிப்பு!

2026-07-30
இங்கிலாந்தின் லண்டன் உட்பட 7 பிராந்தியங்களில் கடுமையான வறட்சி!
இங்கிலாந்து

இங்கிலாந்தின் லண்டன் உட்பட 7 பிராந்தியங்களில் கடுமையான வறட்சி!

2026-07-30
பிரித்தானியாவின் அணுவாற்றல் நீர்மூழ்கிக் கப்பல் திட்டங்களுக்கு 8 புள்ளி 4 பில்லியன் பவுண்டுகள் நிதியுதவி என பிரதமர் Andy Burnham அறிவிப்பு!
இங்கிலாந்து

பிரித்தானியாவின் அணுவாற்றல் நீர்மூழ்கிக் கப்பல் திட்டங்களுக்கு 8 புள்ளி 4 பில்லியன் பவுண்டுகள் நிதியுதவி என பிரதமர் Andy Burnham அறிவிப்பு!

2026-07-30
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் கட்டுப்பட்டுக்குள்; பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டம்!
இலங்கை

நீர்கொழும்பு சிறை கலவரம் – சம்பவத்தில் கடமையிருந்த அதிகாரியிடம் சாட்சி விசாரணை !

2026-07-30
பெல்லன்வில உணவக உரிமையாளர் கொலை வழக்கில் சந்தேக நபர்களுக்கு 90 நாட்கள் தடுப்பு காவல்!
இலங்கை

பெல்லன்வில உணவக உரிமையாளர் கொலை வழக்கில் சந்தேக நபர்களுக்கு 90 நாட்கள் தடுப்பு காவல்!

2026-07-30
Next Post
ஐரோப்பிய ஒன்றிய மன்றத்தின் தலைமை அதிகாரி இன்று இலங்கை வருகை!

ஐரோப்பிய ஒன்றிய மன்றத்தின் தலைமை அதிகாரி இன்று இலங்கை வருகை!

கொழும்பு, கடல்சார் சாலையை சுற்றுலா தலமாக மேம்படுத்த திட்டம்!

கொழும்பு, கடல்சார் சாலையை சுற்றுலா தலமாக மேம்படுத்த திட்டம்!

ஜிதேஷ் சர்மாவின் அதிரடியுடன் RCB இன் மிகப்பெரிய சேஸிங்!

ஜிதேஷ் சர்மாவின் அதிரடியுடன் RCB இன் மிகப்பெரிய சேஸிங்!

blank
  • Trending
  • Comments
  • Latest
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
ஐரோப்பாவில் தீவிரமடையும் காட்டுத்தீ: கடும் வெப்ப அலை மற்றும் பலத்த காற்றால் மீண்டும் பரவும் அபாயம்!

ஐரோப்பாவில் தீவிரமடையும் காட்டுத்தீ: கடும் வெப்ப அலை மற்றும் பலத்த காற்றால் மீண்டும் பரவும் அபாயம்!

0
கனடாவின் வெஸ்ட்ஜெட் விமான நிறுவன ஊழியர்கள் 72 மணி நேர வேலைநிறுத்த அறிவிப்பு!

கனடாவின் வெஸ்ட்ஜெட் விமான நிறுவன ஊழியர்கள் 72 மணி நேர வேலைநிறுத்த அறிவிப்பு!

0
இங்கிலாந்தின் லண்டன் உட்பட 7 பிராந்தியங்களில் கடுமையான வறட்சி!

இங்கிலாந்தின் லண்டன் உட்பட 7 பிராந்தியங்களில் கடுமையான வறட்சி!

0
பிரித்தானியாவின் அணுவாற்றல் நீர்மூழ்கிக் கப்பல் திட்டங்களுக்கு 8 புள்ளி 4 பில்லியன் பவுண்டுகள் நிதியுதவி என பிரதமர் Andy Burnham அறிவிப்பு!

பிரித்தானியாவின் அணுவாற்றல் நீர்மூழ்கிக் கப்பல் திட்டங்களுக்கு 8 புள்ளி 4 பில்லியன் பவுண்டுகள் நிதியுதவி என பிரதமர் Andy Burnham அறிவிப்பு!

0
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் கட்டுப்பட்டுக்குள்; பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டம்!

நீர்கொழும்பு சிறை கலவரம் – சம்பவத்தில் கடமையிருந்த அதிகாரியிடம் சாட்சி விசாரணை !

0
ஐரோப்பாவில் தீவிரமடையும் காட்டுத்தீ: கடும் வெப்ப அலை மற்றும் பலத்த காற்றால் மீண்டும் பரவும் அபாயம்!

ஐரோப்பாவில் தீவிரமடையும் காட்டுத்தீ: கடும் வெப்ப அலை மற்றும் பலத்த காற்றால் மீண்டும் பரவும் அபாயம்!

2026-07-30
கனடாவின் வெஸ்ட்ஜெட் விமான நிறுவன ஊழியர்கள் 72 மணி நேர வேலைநிறுத்த அறிவிப்பு!

கனடாவின் வெஸ்ட்ஜெட் விமான நிறுவன ஊழியர்கள் 72 மணி நேர வேலைநிறுத்த அறிவிப்பு!

2026-07-30
இங்கிலாந்தின் லண்டன் உட்பட 7 பிராந்தியங்களில் கடுமையான வறட்சி!

இங்கிலாந்தின் லண்டன் உட்பட 7 பிராந்தியங்களில் கடுமையான வறட்சி!

2026-07-30
பிரித்தானியாவின் அணுவாற்றல் நீர்மூழ்கிக் கப்பல் திட்டங்களுக்கு 8 புள்ளி 4 பில்லியன் பவுண்டுகள் நிதியுதவி என பிரதமர் Andy Burnham அறிவிப்பு!

பிரித்தானியாவின் அணுவாற்றல் நீர்மூழ்கிக் கப்பல் திட்டங்களுக்கு 8 புள்ளி 4 பில்லியன் பவுண்டுகள் நிதியுதவி என பிரதமர் Andy Burnham அறிவிப்பு!

2026-07-30
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் கட்டுப்பட்டுக்குள்; பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டம்!

நீர்கொழும்பு சிறை கலவரம் – சம்பவத்தில் கடமையிருந்த அதிகாரியிடம் சாட்சி விசாரணை !

2026-07-30

Recent News

ஐரோப்பாவில் தீவிரமடையும் காட்டுத்தீ: கடும் வெப்ப அலை மற்றும் பலத்த காற்றால் மீண்டும் பரவும் அபாயம்!

ஐரோப்பாவில் தீவிரமடையும் காட்டுத்தீ: கடும் வெப்ப அலை மற்றும் பலத்த காற்றால் மீண்டும் பரவும் அபாயம்!

2026-07-30
கனடாவின் வெஸ்ட்ஜெட் விமான நிறுவன ஊழியர்கள் 72 மணி நேர வேலைநிறுத்த அறிவிப்பு!

கனடாவின் வெஸ்ட்ஜெட் விமான நிறுவன ஊழியர்கள் 72 மணி நேர வேலைநிறுத்த அறிவிப்பு!

2026-07-30
இங்கிலாந்தின் லண்டன் உட்பட 7 பிராந்தியங்களில் கடுமையான வறட்சி!

இங்கிலாந்தின் லண்டன் உட்பட 7 பிராந்தியங்களில் கடுமையான வறட்சி!

2026-07-30
பிரித்தானியாவின் அணுவாற்றல் நீர்மூழ்கிக் கப்பல் திட்டங்களுக்கு 8 புள்ளி 4 பில்லியன் பவுண்டுகள் நிதியுதவி என பிரதமர் Andy Burnham அறிவிப்பு!

பிரித்தானியாவின் அணுவாற்றல் நீர்மூழ்கிக் கப்பல் திட்டங்களுக்கு 8 புள்ளி 4 பில்லியன் பவுண்டுகள் நிதியுதவி என பிரதமர் Andy Burnham அறிவிப்பு!

2026-07-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.