ஆன்லைன் சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டக் குற்றச்சாட்டில் 11 இந்திய பிரஜைகள் தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலங்கம பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று இரவு (04) தலங்கம, அக்குரேகொடவில் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சோதனையின் போது, கணினிகள் மற்றும் மொபைல் போன்களைப் பயன்படுத்தி சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக எட்டு ஆண்களும் மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது, 20 மொபைல் போன்கள், மூன்று மடிக்கணினி கணினிகள் மற்றும் ஒரு டேப்லெட் சாதனத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பெண் சந்தேக நபர்கள் 22, 30 மற்றும் 43 வயதுடையவர்கள், ஆண் சந்தேக நபர்கள் 25, 26, 27 மற்றும் 29 வயதுடைய இந்தியர்கள்.
இது சம்பந்தமான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.














