இலங்கையில் பாதாள உலகக் குழு மற்றும் போதைப்பொருள் நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக நடத்தப்பட்ட சிறப்பு சோதனைகளின் போது இந்த ஆண்டில் மாத்திரம் 1947 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் விஜேபால, போதைப்பொருள் மற்றும் பாதாள உலக வலையமைப்புகளின் முக்கிய பகுதியாக ஆயுதங்கள் இருப்பதாகக் கூறினார்.
சில பாதாள உலகக் கும்பல்கள் இன்னும் ஆயுதங்களை வைத்திருப்பதால் நாடு முழுவதும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகி வருவதாக அவர் மேலும் கூறினார்.
முன்னர் ஒரு இராணுவ முகாமில் இருந்து 78 T-56 துப்பாக்கிகள் பாதாள உலகக் கும்பல்களுக்கு வழங்கப்பட்டதாகவும், அவற்றில் 36 ஏற்கனவே அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.
















