வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்வதற்காக அரசாங்கத்தில் வழங்கப்படுகின்ற 25ஆயிரம் ரூபா கொடுப்பனவுகள் தொடர்பாக யாழ். மாவட்டத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் எனவே அரசாங்கம் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
டித்வா சூறாவளி அனர்த்ததினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பாக யாழ் மாவட்ட செயலாளரினால் விடுக்கப்பட்ட அறிக்கையின் படி நெடுந்தீவில் 1216 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அதனை புனரமைப்பதற்காக 304 லட்சம் ரூபா தேவைப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் 2025 மக்கள் கணக்கெடுப்பு தரவிகளின் பிரகாரம் நெடுந்தீவில் 893 வீடுகள் மாத்திரமே உள்ளன.
எனவே அந்த எண்ணிக்கை நவம்பர் மாதத்தில் 1216 ஆக அதிகரித்தது எவ்வாறு? என்ற பாரிய சந்தேக எழுகிறது.
அதேபோல் வேலனை பிரதேச செயலக பகுதியில் 4379 வீடுகள் உள்ளதாக மக்கள் தொகை கண புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன ஆனால் அங்கு அனர்த்தத்தில் 544 வீடுகளே சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊர்காவற்றுறையில் 3527 வீடுகளில் 668 வீடுக்ள மாத்திரமே சேதமடைந்துள்ளன.
நல்லூர் பிரதேச செயலக பிரிவில் 18ஆயிரத்து 617 வீடுகளில் 791 மாத்திரமே சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய பிரதேச செயலக பகுதிகளிலும் பகுதியளவில் அல்லது சிறியளவிலேயே வீடுகள் சேதமடைந்துள்ளன.
ஆனால் மக்கள் தொகை குறைவாக காணப்படும் நெடுந்தீவில் இவ்வாறு அதிகரித்தமைக்கு காரணம் என்ன?
இந்த விடயம் தொடர்பாக மாவட்ட செயலாளர் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.
மக்கள் நிதியை கொள்ளையிடும் சம்பவங்கள் தொடர்பாக சந்தேகம் எழுகிறது.
உண்மையிலேயே இந்ததரவு பிரதேச செயலாளரினால் வெளிப்படுத்தப்பட்டிருந்தால். மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் அது தொடர்பாக கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.
அவர்களுக்கு அந்த பொறுப்பு உள்ளது.
எனவே இது ஒரு மோசடி செயல் என தற்போது அம்பலமாகியுள்ளது.
இந்த ஊழுலை கண்டுபிடித்துள்ளோம்.
ஊழலுக்கு எதிரான அரசாங்கம் என ஆட்சிக்கு வந்தவர்களிடம் நாம் இதனை ஒப்படைக்கின்றோம்.
பொதுமக்கள் நிதியை கொள்ளையடிக்க தயாராகும் அரச அதிகாரிகள் தொடர்பாகவும் அவதானம் செலுத்த வேண்டும்.
ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திடம் இது தொடர்பாக கோரிக்கை விடுக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.













