நெல்லியடி பொலிசாருக்கு எதிராக குடவத்தை மக்கள் இன்றையதினம் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவனிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் – வடமராட்சி, நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடவத்தை பகுதியில் வசிக்கும் மக்கள் மீது பொய்யான வழக்குகள் பதியப்படுவதாகவும் , பொலிசார் மக்கள் மீது மூர்க்கதனமாக தாக்குதல் மேற்கொள்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தியிடம் முறையிட்டுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, நேரடியாக குடவத்தை கிராமத்திற்கு சென்று மக்களுடன் இது குறித்து உரையாடியதுடன், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஊடாக நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.












