கொழும்பு, நாரஹேன்பிட்டி பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
நாரஹேன்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிருல வீதியில் நேற்று மதியம் குறித்த நபர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் நாரஹேன்பிட்டி பகுதியைச் சேர்ந்த 70 வயதுடையவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த வீட்டில் அவர் தனியாக வசித்து வந்ததாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நாரஹேன்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

















