டித்வா சூறாவளி காரணமாக பாதிக்கப்பட்ட 65 குடும்பங்கள் தோட்ட முகாமையாளர் பிரதேச செயலாளர் கட்டட ஆராச்சி நிறுவன தலைவர் ஆகியவர்களுக்கு எதிராக ஹட்டன் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைபாடு செய்துதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
ஸ்டொக்கம் தோட்டத்தை சேர்ந்த 65 குடும்பங்கள் டித்வா சூறாவளி காரணமாக ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் வீடுகளில் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் மண்சரிவு அபாயம் உள்ளிட்ட காரணங்களால் அவர்களை வெளியேறுமாறு கிராம சேவர்கள் பிரதேச செயலாளர் ஆகியோரின் அறிவுறுத்தலுக்கு அமைய இடம் பெயர்ந்து இன்று வரை ஸ்டொக்கம் தமிழ் வித்தியாலயத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
இவர்களுக்கு எவ்வித தீர்வு பெற்றுக்கொடுக்காத நிலையில் மீண்டும் வீடுகளில் போய் குடியேறுமாறு தெரிவித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த முறைபாடு கையளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து முறைபாட்டாளர்கள் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் ஏற்பட்ட கடும் மழையால் தங்களது வீடுகளில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இந்த வெடிப்பினையடுத்து வீடுகளை விட்டு வெளியேறுமாறு அரச அதிகாரிகள் தெரிவித்ததாகவும் இந்நிலையில் அபாயம் அவ்வாறே இருக்கும் போது முகாமில் இருந்து வெளியேறுமாறு தெரிவிப்பதாகவும் அத்தோடு கட்டட ஆராச்சி நிறுவனம் இரவு வேளையில் வருகை தந்து எவ்வித கருவிகளும் இன்றி காலல் தட்டிப்பார்த்து ஆய்வு மேற்கொண்டதாகவும் இந்த இடத்தில் மண்சரிவு ஏற்படாது என முகாமையாளர் தெரிவித்த கருத்தினை இவர்கள் உறுதிப்படுத்துவது போல் நடந்து கொண்டதாகவும் தெரிவிக்கும் இவர்கள் தோட்ட முகாமையாளர் தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு மாத்திரம் தீர்வு பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்தாகவும் ஆகவே ஏனைய பிரதேசங்களில் பாதிக்ப்பட்ட மக்களுக்கு அரச அதிகாரிகள் கையாளும் போது தோட்ட மக்களை மாத்திரம ஏன் தோட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கிறார்கள் நாங்கள் இலங்கை பிரஜை இல்லையா, நாங்கள் இந்த நாட்டு ஜனாதிபதிக்கு வாக்களிக்கவில்லை ஆகவே எங்களுக்கு மாத்திரம் வேறு ஏன் வேறு ஒரு சட்டம் என இவர்கள் கேள்வி எழுப்பினர்.
எனவே எங்களது முழு பொறுப்பையும் கிராம சேவகர் பிரதேச செயலாளர் ஏனைய மக்களுக்கு பொறுப்பு கூறுவது போல் பொறுப்பு கூற வேண்டும் என்றும் எங்களை இரண்டாம் பட்ச பிரஜையாக கருதக்கூடாது என்றும் கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் நம்பிக்கை இல்லை என்றும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டின் ஜனாதிபதி இந்த தோட்ட மக்கள் குறித்த விசேட கவனமெடுத்து சரியான நியாமான தீர்வை சகலருக்கும் பெற்றுக்கொடுக்க வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுத்தனர்.














