2025 ஆம் ஆண்டில் இன்றுவரை இலங்கை சுங்கத் திணைக்களம் 2,497 பில்லியன் ரூபாவை வரலாற்று சிறப்புமிக்க வருவாயாகப் பதிவு செய்துள்ளது.
இது அதன் திருத்தப்பட்ட ஆண்டு இலக்கைத் தாண்டியுள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் பணிப்பாளருமான சந்தன புஞ்சிஹேவா தெரிவித்தார்.
நிதி அமைச்சு, ஆரம்பத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான வருவாய் இலக்கை 2,115 பில்லியன் ரூபாவாக நிர்ணயித்திருந்தது.
இது நவம்பர் மாதத்திற்குள் விஞ்சியது, இதனால் இலக்கு 2,231 பில்லியன் ரூபாவாக திருத்தப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.
எனினும், திருத்தப்பட்ட இலக்கும் இப்போது மீறப்பட்டுள்ளது.
வாகன இறக்குமதியை மீண்டும் தொடங்கியமை, இலங்கை சுங்கத்தால் செயல்படுத்தப்பட்ட பல உள் நடவடிக்கைகளாலும் வருவாயில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
முந்தைய ஆண்டின் வருவாய் இலக்கு ரூ. 1,531 பில்லியனாக ரூபாவாக இருந்தது.
வாகன இறக்குமதியை அனுமதிக்கும் முடிவின் அடிப்படையில் 2025 இலக்கு கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.















