• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
தமிழக மீனவர்கள் கைது; முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம்!

தமிழக மீனவர்கள் கைது; முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/12/29
in ஆசிரியர் தெரிவு, இந்தியா, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், தற்போது காவலில் உள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவாக விடுவிப்பதை உறுதி செய்யவும், உடனடியாக ராஜதந்திர ரீதியாக தலையிடுமாறு வலியுறுத்தி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (28) இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதினார்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை பாரம்பரிய மீன்பிடி நீர்நிலைகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட புதிய சம்பவத்தை ஸ்டாலின் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டினார்.

டிசம்பர் 27 ஆம் திகதி மண்டபம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீனவர்கள் வெளியேறினர்.

அடுத்த நாள் கடல் எல்லையைத் தாண்டிய குற்றச்சாட்டின் பேரில் அவர்களது இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடி படகுடன் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தை தனது கடித்தில் சுட்டிக்காட்டிய ஸ்டாலின், இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி ஆபத்தான முறையில் நிகழ்ந்து வருவதாகவும், தமிழக கடற்கரையில் உள்ள ஆயிரக்கணக்கான மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.

தொடர்ச்சியான கைதுகள் மற்றும் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதால் மீனவர்கள் பொருளாதார நெருக்கடியிலும் நிச்சயமற்ற தன்மையிலும் தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த 61 மீனவர்களும் 248 மீன்பிடி படகுகளும் இலங்கை அதிகாரிகளின் காவலில் உள்ளன. 

கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விரைவில் விடுவிப்பதை உறுதி செய்வதற்கும், எதிர்காலத்தில் இதுபோன்ற கைதுகளைத் தடுக்க பயனுள்ள வழிமுறைகளை உருவாக்குவதற்கும், பொருத்தமான இராஜதந்திர வழிகள் மூலம் இந்த விடயத்தை அவசரமாக எடுக்குமாறு மத்திய அரசை ஸ்டாலின் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையுடனான இருதரப்பு உறவுகளில் தமிழக மீனவர்களின் உயிர்களையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பது முதன்மையான முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மீண்டும் வலியுறுத்தினார்.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டதற்கும், இந்திய மீன்பிடி படகுகள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

மண்டபம் மீனவர் சங்கத்தால் அழைப்பு விடுக்கப்பட்ட இந்தப் போராட்டம், மீண்டும் மீண்டும் கைது செய்யப்படுவதாலும், மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கத் தவறியதாகக் கூறுவதாலும் கோபம் அதிகரித்து வருவதால், பிராந்தியம் முழுவதும் மீன்பிடி நடவடிக்கைகளை சீர்குலைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related

Tags: JaishankarM. K. Stalinதமிழக மீனவர்கள்ஜெய்சங்கர்ஸ்டாலின்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தாய்வானைச் சுற்றி இராணுவப் பயிற்சிகளை நடத்த சீனா திட்டம்!

Next Post

போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!

Related Posts

போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!
இலங்கை

போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!

2025-12-29
தாய்வானைச் சுற்றி இராணுவப் பயிற்சிகளை நடத்த சீனா திட்டம்!
உலகம்

தாய்வானைச் சுற்றி இராணுவப் பயிற்சிகளை நடத்த சீனா திட்டம்!

2025-12-29
உக்ரேன் போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்; ட்ரம்ப், ஜெலென்ஸ்கி தெரிவிப்பு!
அமொிக்கா

உக்ரேன் போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்; ட்ரம்ப், ஜெலென்ஸ்கி தெரிவிப்பு!

2025-12-29
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

மன்னார் துப்பாக்கிச் சூடு; இருவர் கைது!

2025-12-29
இதுவரை 3,708 ஹெக்டேர் விவசாய நிலங்களுக்கு இழப்பீடு!
இலங்கை

இதுவரை 3,708 ஹெக்டேர் விவசாய நிலங்களுக்கு இழப்பீடு!

2025-12-29
கொழும்பு – சிலாபம் இடையிலான ரயில் சேவைகள் மீள ஆரம்பம்!
இலங்கை

கொழும்பு – சிலாபம் இடையிலான ரயில் சேவைகள் மீள ஆரம்பம்!

2025-12-29
Next Post
போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!

போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2025-12-09
யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்

யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்

2025-12-03
2025 அஸ்வெசும கொடுப்பனவு; வர்த்தமானி வெளியீடு!

2025 அஸ்வெசும கொடுப்பனவு; வர்த்தமானி வெளியீடு!

2024-12-25
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!

போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!

0
தமிழக மீனவர்கள் கைது; முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம்!

தமிழக மீனவர்கள் கைது; முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம்!

0
தாய்வானைச் சுற்றி இராணுவப் பயிற்சிகளை நடத்த சீனா திட்டம்!

தாய்வானைச் சுற்றி இராணுவப் பயிற்சிகளை நடத்த சீனா திட்டம்!

0
போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!

போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!

2025-12-29
தமிழக மீனவர்கள் கைது; முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம்!

தமிழக மீனவர்கள் கைது; முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம்!

2025-12-29
தாய்வானைச் சுற்றி இராணுவப் பயிற்சிகளை நடத்த சீனா திட்டம்!

தாய்வானைச் சுற்றி இராணுவப் பயிற்சிகளை நடத்த சீனா திட்டம்!

2025-12-29
உக்ரேன் போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்; ட்ரம்ப், ஜெலென்ஸ்கி தெரிவிப்பு!

உக்ரேன் போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்; ட்ரம்ப், ஜெலென்ஸ்கி தெரிவிப்பு!

2025-12-29
மெக்சிகோவில் ரயில் தடம் புரண்டு விபத்து; 13 நபர்கள் உயிரிழப்பு, சுமார் 100 பேர் காயம்!

மெக்சிகோவில் ரயில் தடம் புரண்டு விபத்து; 13 நபர்கள் உயிரிழப்பு, சுமார் 100 பேர் காயம்!

2025-12-29

Recent News

போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!

போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!

2025-12-29
தமிழக மீனவர்கள் கைது; முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம்!

தமிழக மீனவர்கள் கைது; முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம்!

2025-12-29
தாய்வானைச் சுற்றி இராணுவப் பயிற்சிகளை நடத்த சீனா திட்டம்!

தாய்வானைச் சுற்றி இராணுவப் பயிற்சிகளை நடத்த சீனா திட்டம்!

2025-12-29
உக்ரேன் போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்; ட்ரம்ப், ஜெலென்ஸ்கி தெரிவிப்பு!

உக்ரேன் போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்; ட்ரம்ப், ஜெலென்ஸ்கி தெரிவிப்பு!

2025-12-29
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.