பெரும்பாலும் ஆராயப்படாத வன வாழ்விடங்களில் பல ஆண்டுகளாக களப்பணியின் பின்னர், இலங்கை ஆராய்ச்சியாளர்கள் தீவிற்குச் சொந்தமான ஆறு புதிய சிலந்தி இனங்களை அடையாளம் கண்டுள்ளனர்.
இலங்கை எட்டுக்காலியியல் உயிரினங்கள் ஆய்வாளர்களான நருவன் தயானந்த மற்றும் சுரேஷ் பி. பெஞ்சமின் ஆகியோரால் இந்த கண்டுபிடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஆறு சிலந்தி இனங்கள்:
- U. boo sp. nov.
- U. haputale sp. nov.
- U. loolecondera sp. nov.
- U. mandaram sp. nov.
- U. peekaboo sp. nov.
- U. upcotensis sp. Nov.
இந்த கண்டுபிடிப்புகள் தெற்காசியாவில் சிலந்தி பன்முகத்தன்மை பற்றிய புரிதலை மேம்படுத்தும் என்றும், சிலந்தி விலங்கினங்கள் பற்றிய பரந்த பிராந்திய அறிவுக்கு பங்களிக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
அத்துடன், புதிய கண்டுபிடிப்புகள் இலங்கையின் வன சுற்றுச்சூழல் அமைப்புகளின் வளமான ஆனால் குறைவாக ஆராயப்பட்ட பல்லுயிர் பெருக்கத்தை எடுத்துக்காட்டுகின்றன என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
















