நவகமுவ, கொரதொட்ட மெணிக்காகார வீதிப் பகுதியில் நேற்றிரவு (01) 10.00 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மூன்று ஆண்களை குறிவைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் காயமடைந்து ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நவகமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.














