• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நெடுந்தீவுக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை அண்மைக்காலமாக அதிகரிப்பு!

நெடுந்தீவுக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை அண்மைக்காலமாக அதிகரிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/01/22
in இலங்கை, முக்கிய செய்திகள், வட மாகாணம்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter
நெடுந்தீவுக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது. எனவே, அப்பிரதேச மக்கள் மற்றும் சுற்றுலாவிகளின் நலன் கருதி, நெடுந்தீவு இறங்குதுறையைப் புனரமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதற்கு நெதர்லாந்து அரசாங்கம் தனது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்தார்.
வடக்கு மாகாண ஆளுநருக்கும், இலங்கைக்கான நெதர்லாந்துத் தூதுவர் வீபே டி போர் (Wiebe de Boer) அவர்களுக்கும் இடையிலான உத்தியோகபூர்வச் சந்திப்பு, ஆளுநர் செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன.
நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியில் கடந்த காலத்தில் புனரமைக்கப்பட்ட யாழ்ப்பாணக் கோட்டைக்கு, தற்போது வருகை தரும் சுற்றுலாவிகளை விடவும் அதிகளவானவர்களை ஈர்க்க வேண்டும் எனத் தூதுவர் விருப்பம் வெளியிட்டார். இதற்குப் பதிலளித்த ஆளுநர், “உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் யாழ்ப்பாணக் கோட்டையை மையப்படுத்திய சுற்றுலா மேம்பாட்டுக்கான விசேட அபிவிருத்தித் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன” என்பதைச் சுட்டிக்காட்டினார்.
நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வடக்கு மாகாணத்தில் (கிளிநொச்சி, வவுனியா, மாங்குளம், பருத்தித்துறை ஆகிய இடங்களில்) அமைக்கப்பட்டுள்ள 4 மருத்துவமனைகளில், கிளிநொச்சி மருத்துவமனைக்குத் தான் நேரில் சென்று பார்வையிட்டதாகத் தூதுவர் குறிப்பிட்டார். அம்மருத்துவமனைகளை முழு அளவில் இயங்கச் செய்வதற்குத் தடையாக உள்ள சவால்கள் குறித்தும் அவர் ஆளுநரிடம் கேட்டறிந்து கொண்டார்.
 ‘வடக்கு முதலீட்டு உச்சிமாநாட்டில்’ தான் கலந்து கொள்ளவுள்ளதாகத் தெரிவித்த தூதுவர், கொழும்பிலிருந்து வடக்கை நோக்கி முதலீட்டாளர்கள் நகர்ந்துள்ளமை ஒரு சிறப்பான மாற்றம் எனக் குறிப்பிட்டார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஆளுநர், “தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் வடக்கில் முதலீட்டுக்கான மிகச் சாதகமான சூழல் நிலவுகின்றது. எமது மாகாணத்திலிருந்து விவசாயம், மீன்பிடி மற்றும் கால்நடை உற்பத்திப் பொருட்கள் மூலப்பொருட்களாகவே வெளியே கொண்டு செல்லப்படுகின்ற. இவற்றை இங்கேயே பெறுமதிசேர் பொருட்களாக (Value Added Products) மாற்றுவதற்கான தொழிற்சாலைகளே எமக்கு அவசியமாகின்றன” என வலியுறுத்தினார்.
மேலும், பனைசார் உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்தும், குறிப்பாகப் பனையிலிருந்து புத்தாக்க முயற்சியாக யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படும் வைன் (Wine) உற்பத்தி குறித்தும் ஆளுநர் எடுத்துரைத்தார். இம்முயற்சிகள் எதிர்காலத்தில் மாகாணப் பொருளாதாரத்தில் நேரான தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
அண்மையில் வீசிய ‘டித்வா’ (Ditwa) புயலால் வடக்கில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் தூதுவர் கேட்டறிந்து கொண்டார். அத்துடன், மாகாண நிர்வாகச் செயற்பாடுகள், மாகாண சபைத் தேர்தல், போதைப்பொருள் பாவனை விவகாரம் மற்றும் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
மேலும், பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றின் அபிவிருத்தி தொடர்பில், மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் உறுதியளித்துள்ளமை வடக்கின் அபிவிருத்திக்குச் சாதகமான சமிக்ஞை எனவும் தூதுவர் சுட்டிக்காட்டினார்.
இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் இணைப்புச் செயலாளர்கள் மற்றும் நெதர்லாந்துத் தூதரகத்தின் சிரேஷ்ட அரசியல் ஆலோசகர், கலாசார ஆலோசகர் ஆகியோர் பங்கேற்றனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பருத்தித்துறையில் மோட்டார் சைக்கிள் விபத்து – மூவர் படுகாயம்

Next Post

பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்காக, 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

Related Posts

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்பு உரிமை தொடர்பான மனு விசாரணை நிறைவு!
இலங்கை

எம்.பி.க்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலத்துக்கு எதிராக மனுத்தாக்கல்!

2026-01-22
16.5 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!
இலங்கை

16.5 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

2026-01-22
அண்மைய வரலாற்றில் மிகப்பெரியளவிலான போதைப்பொருள் கடந்த ஆண்டில் பறிமுதல்!
இலங்கை

அண்மைய வரலாற்றில் மிகப்பெரியளவிலான போதைப்பொருள் கடந்த ஆண்டில் பறிமுதல்!

2026-01-22
மக்களைப் பாதிக்கும் விதமாக சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்களை ஒழுங்குபடுத்துவதற்குப் பொருத்தமான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்
இலங்கை

மக்களைப் பாதிக்கும் விதமாக சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்களை ஒழுங்குபடுத்துவதற்குப் பொருத்தமான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்

2026-01-22
“நாடே ஒன்றிணைவோம்” தேசிய நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்து  விசேட ஊடக சந்திப்பு
இலங்கை

“நாடே ஒன்றிணைவோம்” தேசிய நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்து விசேட ஊடக சந்திப்பு

2026-01-22
நுவரெலியாவில் வெப்பநிலை 3.5° செல்சியஸாக பதிவு!
இலங்கை

நுவரெலியாவில் வெப்பநிலை 3.5° செல்சியஸாக பதிவு!

2026-01-22
Next Post
பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்காக, 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்காக, 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

வடக்கு சுகாதாரத்துறை மேம்பாடு மற்றும் கழிவு முகாமைத்துவச் செயற்பாடுகளுக்கு ஜப்பான் உதவ வேண்டும்

வடக்கு சுகாதாரத்துறை மேம்பாடு மற்றும் கழிவு முகாமைத்துவச் செயற்பாடுகளுக்கு ஜப்பான் உதவ வேண்டும்

கண்டி, கலஹா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பாறைக்கு சந்தை பெறுமதி இல்லை

கண்டி, கலஹா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பாறைக்கு சந்தை பெறுமதி இல்லை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
சர்ச்சைக்குரிய போஜ்ஷாலாவில் இந்து, முஸ்லிம் வெள்ளிக்கிழமை வழிபாட்டுக்கு இந்திய உயர் நீதிமன்றம் அனுமதி!

சர்ச்சைக்குரிய போஜ்ஷாலாவில் இந்து, முஸ்லிம் வெள்ளிக்கிழமை வழிபாட்டுக்கு இந்திய உயர் நீதிமன்றம் அனுமதி!

0
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்பு உரிமை தொடர்பான மனு விசாரணை நிறைவு!

எம்.பி.க்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலத்துக்கு எதிராக மனுத்தாக்கல்!

0
16.5 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

16.5 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

0
அண்மைய வரலாற்றில் மிகப்பெரியளவிலான போதைப்பொருள் கடந்த ஆண்டில் பறிமுதல்!

அண்மைய வரலாற்றில் மிகப்பெரியளவிலான போதைப்பொருள் கடந்த ஆண்டில் பறிமுதல்!

0
வேகக் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்து – மூவர் காயம்

வேகக் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்து – மூவர் காயம்

0
சர்ச்சைக்குரிய போஜ்ஷாலாவில் இந்து, முஸ்லிம் வெள்ளிக்கிழமை வழிபாட்டுக்கு இந்திய உயர் நீதிமன்றம் அனுமதி!

சர்ச்சைக்குரிய போஜ்ஷாலாவில் இந்து, முஸ்லிம் வெள்ளிக்கிழமை வழிபாட்டுக்கு இந்திய உயர் நீதிமன்றம் அனுமதி!

2026-01-22
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்பு உரிமை தொடர்பான மனு விசாரணை நிறைவு!

எம்.பி.க்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலத்துக்கு எதிராக மனுத்தாக்கல்!

2026-01-22
வேகக் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்து – மூவர் காயம்

வேகக் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்து – மூவர் காயம்

2026-01-22
16.5 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

16.5 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

2026-01-22
அண்மைய வரலாற்றில் மிகப்பெரியளவிலான போதைப்பொருள் கடந்த ஆண்டில் பறிமுதல்!

அண்மைய வரலாற்றில் மிகப்பெரியளவிலான போதைப்பொருள் கடந்த ஆண்டில் பறிமுதல்!

2026-01-22

Recent News

சர்ச்சைக்குரிய போஜ்ஷாலாவில் இந்து, முஸ்லிம் வெள்ளிக்கிழமை வழிபாட்டுக்கு இந்திய உயர் நீதிமன்றம் அனுமதி!

சர்ச்சைக்குரிய போஜ்ஷாலாவில் இந்து, முஸ்லிம் வெள்ளிக்கிழமை வழிபாட்டுக்கு இந்திய உயர் நீதிமன்றம் அனுமதி!

2026-01-22
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்பு உரிமை தொடர்பான மனு விசாரணை நிறைவு!

எம்.பி.க்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலத்துக்கு எதிராக மனுத்தாக்கல்!

2026-01-22
வேகக் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்து – மூவர் காயம்

வேகக் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்து – மூவர் காயம்

2026-01-22
16.5 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

16.5 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

2026-01-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.