பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனத்தை அதிகரிப்பது தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நடவடிக்கை இன்று இடம்பெற்றது
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சில் இந்த நிகழ்வு இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களுடன் இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
முன்னதாக 2026 ஆம் ஆண்டிற்கான பாதீட்டை சமர்ப்பிக்கும் போது, ஜனாதிபதியினால் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வேதனத்தை 1, 750 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டது.
இதன்படி வருகைக்கான கொடுப்பனவாக 200 ரூபாயினை அரசாங்க நிறுவனங்களினூடாக செலுத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டது.
அதற்கமைய, இந்த வேதன அதிகரிப்புக்காக பாதீட்டில் 5,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.












