முன்னாள் செவிலியரான (Lucy Letby) லூசி லெட்பி, ஏழு குழந்தைகளைக் கொன்றதற்கும், மேலும் ஏழு குழந்தைகளைக் கொல்ல முயன்றதற்கும் 15 ஆயுட்கால சிறைத்தண்டனைகளை (Whole-life terms) அனுபவித்து வருகிறார்.
லூசி லெட்பி கொலை செய்ததாகக் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஐந்து குழந்தைகளின் மரணம் தொடர்பான மரண விசாரணை (Inquest) இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
செஷையர் மரண விசாரணை நீதிமன்றத்தில் (Cheshire Coroner’s Court) நடைபெறவுள்ள இந்த நடவடிக்கைகள், குழந்தைகள் மரணங்கள் குறித்தவை ஆகும்.
இந்தக் குழந்தைகள் அனைவரும் 2015 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளில், லெட்பி செஸ்டர் கவுண்டஸ் மருத்துவமனையின் (Countess of Chester Hospital) பச்சிளம் குழந்தைகள் பிரிவில் Lucy Letby லூசி லெட்பி (Neonatal unit) செவிலியராகப் பணியாற்றியபோது உயிரிழந்தனர்.
இந்நிலையில் இது குறித்து செஷையரின் மூத்த மரண விசாரணை அதிகாரி ஜாக்குலின் டெவோனிஷ், இன்று விசாரணையை ஆரம்பித்து வைத்தார்.
முழுமையான மரண விசாரணைக்கான திகதிகள் தற்காலிகமாக செப்டம்பர் மாதத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, லெட்பி எவ்வாறு இத்தகைய குற்றங்களைச் செய்ய முடிந்தது என்பதை ஆராய்ந்து வரும் ‘தேர்ல்வால் விசாரணை’ (Thirlwall Inquiry) அறிக்கை ஈஸ்டர் பண்டிகைக்குப் பின்னர் வெளியிடப்பட உள்ளது.
அந்த அறிக்கையின் முடிவைப் பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையும்.
கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற விசாரணையில்,ஒரு குழந்தை குழந்தையின் மரணத்திற்கான காரணத்தைத் தீர்மானிக்க முடியவில்லை என முடிக்கப்பட்டது.
2016 ஆண்டு ஜனவரி மாதம் இன்னொரு குழந்தையின் மரண விசாரணை ஆரம்பிக்கப்பட்டது ஆனால் குற்றவியல் நடவடிக்கைகள் (Criminal proceedings) ஆரம்பமானதால் அது இடைநிறுத்தப்பட்டது.
இதேவேளை, கடந்த மாதம், ஏனைய சில குழந்தைகளின் மரணம் மற்றும் உடல்நலக் குறைவு தொடர்பான புகார்களில் லெட்பி மீது கூடுதல் குற்றவியல் வழக்குகளைத் தொடரப்போவதில்லை என அரசு வழக்கறிஞர் தரப்பு (CPS) அறிவித்தது.
காவல்துறை சமர்ப்பித்த கூடுதல் ஆதாரங்கள் போதிய அளவில் இல்லாததே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது.
லூசி லெட்பி தான் நிரபராதி என்றே தொடர்ந்து கூறி வருகிறார்.
கடந்த ஆண்டு தனது தண்டனையை எதிர்த்து அவர் தாக்கல் செய்த இரண்டு மேல்முறையீட்டு மனுக்களும் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன.
தற்போது ஒரு குழுவினர் அவருக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருவதுடன், அவரது தண்டனையை ரத்து செய்யக் கோரி குற்றவியல் வழக்குகள் மறுஆய்வு ஆணையத்திடம் (CCRC) அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளனர்.
















